பொதுவாழ்வில் ஈடுபடுபவர்க ளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் தோழர் சங்கரய்யா என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“சுதந்திரப் போராட்டத் தியாகியும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ருமான என். சங்கரய்யா அவர்கள் உடல் நலக்குறைவினால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேத னையும் அடைந்தேன்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கி லேயருக்கு எதிராகப் போராடி சிறைசென்ற வர். பின்பு உழைக்கும் மக்களின் உரிமைக ளுக்காகவும் தொடர்ந்து போராடியவர் என். சங்கரய்யா அவர்கள். 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மிகப்பெரிய போரா ளியாக விளங்கிய என். சங்கரய்யா அவர்கள், 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தன் வாழ்வில் தூய்மையையும், நேர்மை யையும் கடைப்பிடித்த அவர், பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.