கொரோனா தொற்றுக்குப் பின்பு, இந்தியா வில் மாத ஊதியம் பெரும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் அனைத்து விதமான சமூகப் பாதுகாப்பு திட்டங்களிலிருந்தும் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகியுள்ளன.
உத்தரவாதமான வேலைகளில் இருப்பதாக கருதப்படும் ஊழியர்களில் 54சதவீதம் பேர் எந்தவிதமான சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் தற்போது இல்லை. 2019 - 20ல் கொரோனாவுக்கு முன்பு 23சதவீதம் ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த சமூக பாதுகாப்பு பலன்கள் 2022-23இல் 21 சதவீதமாக சுருங்கியுள்ளது.
இந்திய தொழிலாளர் படையை மோடி அரசு வெகுவாக வஞ்சித்துள்ளது. கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு மொத்த லாபத்தையும் அள்ளிக் கொடுத்து கொழுக்க வைத்துள்ளது மோடி அரசு.