articles

img

பிர்சா முண்டாவின் பெயரைச் சொல்ல உங்களுக்கு அருகதை இருக்கிறதா?-சி.ஸ்ரீராமுலு

மனித சமூகம் எவ்வளவு தான் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் என்பது இன்னமும் முன்னேற்றம் அடைய வில்லை. அதிலும் குறிப்பாக பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அந்த மக்கள் தங்கள் வாழ்வில் சந்தித்து வரும்  இன்னல் கள் சொல்லிமாளாது. அப்படிப்பட்ட மக்களின் உரிமை களுக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஒருவர் போராடியிருக்கிறார். அவர் தான் பிர்சா முண்டா. 

சோட்டா நாக்பூர்  முண்டா என்னும் பழங்குடியின வழித் தோன்றலான பிர்சா முண்டா, நாடு விடு தலைக்கு முன்பு சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு முண்டா தம்பதிக்கு 1875 நவம்பர் 15 அன்று பெங்கால் பிரசி டென்சி உலிஹதி என்னும் கிராமத்தில்  பிறந்தவர். குடும்பத்தின் வறுமையால் அங்குள்ள காட்டுப்பகு தியில் ஆடு மேய்ப்பது, சிறு சிறு வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

இளமைப் பருவத்தில் கிறித்துவ மதத்தின் மீது  பற்று கொண்டு அந்த மதத்திற்கு மாறியவர். அதன் பிறகு, தான் பிறந்த முண்டா பழங்குடி சமூ கத்தையும், பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்டார். 

இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசாங்கம் ‘காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் எங்களுக்கு சொந்தம்’ எனும் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படை வீரர்களால் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதை கண்டு வெகுண்டெ ழுந்தார். அதை துணிச்சலோடு எதிர்த்துப் போராடி னார். அன்றைக்கு அவரது வயது 19.

இளம் போராளி!

19ஆம் நூற்றாண்டில் தொடக்க காலத்திலும் பண்ணையார்கள், ஜமீன்தாரர்கள் உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடி மக்களின் நிலங் களை பறித்த போது  ஆங்கிலேய அரசின் அடக்கு முறைக்கு எதிராக தற்போதைய பீகார், ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களை திரட்டி கிளர்ந்து எழுந்த இளம் போராளி. “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்று போராடியதால் அவரது பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படுகிறது. பழங்குடியினரின் விடுதலைப் போராளிகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் ‘சூப்பர் ஹீரோ’ என்றே அழைக்கப்படுகிறார். 

அந்நிய தேசத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த வர்கள் நமது நாட்டு மக்களையும்,  பூர்வகுடிகளான பழங்குடி சமூகத்தையும் ஒடுக்கி  சொத்துக்களைச் சுரண்டி சென்றனர்.  வட்டிக்குக் கடன் கொடுக்கிறோம் என்ற போர்வையில் பழங்குடிகளின் நிலத்தை பிடுங்கிய ஜமீன்தாரர்களுக்கு ஆதரவாக இயற்றிய ஆங்கிலேயர் சட்டங்களால் பழங்குடி மக்களின் வழக்குகள் தோல்வி அடைந்தன. இதனால் சொந்த நாட்டு மக்கள் நில உடமைதாரர்களிடம் அடிமையாக வும் கூலிகளாகவும் வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

அன்றைக்கு, ஒட்டுமொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும் என முழங்கியது மட்டு மின்றி, பிரிட்டிஷ் ராஜ்யத்தை எதிர்த்து ‘பிர்சா’ என்கிற ஒரு அமைப்பை உருவாக்கினார்.  இந்தியாவை, இந்திய மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என 1886-1890 களில் பிர்சா முண்டாவின் கிளர்ச்சிப் போராட்டம் பழங்குடி மக்களை ஒன்று திரட்டியது. அந்த நேரத்தில், இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. அப்போது, இதை சமாளிக்க முடியாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் 1895 ஆம் ஆண்டில் பிர்சா முண்டாவை கைது செய்து சிறையில் அடைத்து கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கியது.

இரண்டு ஆண்டுகள் தண்டனை முடிந்து 1897-ல் வெளியில் வந்த அவர், பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பழங்குடி மக்களின் வாழ்வாதா ரத்திற்கும்

இதில் அம்புகளை மட்டும் கொண்டு எதிரிகளை வீழ்த்தும் முறையை கையாண்டார். இந்தத் தாக்கு தலில் ஆங்கிலேய அரசின் அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நிலப்பிரபுக்களின் வீடுகள் பழங்குடி மக்களால் தாக்குதலுக்குள்ளாயின. இந்தப் போராட் டத்திற்கு ‘உல்குலான்’ என்றும் பெயரிட்டார். இதுவே  பழங்குடி மக்களுக்காக இந்தியாவில் நடந்த முதல் போராட்டம் என்றும் அறியப்படுகிறது. நிலத்திற்குமான போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தினார். 1899 ஆம் ஆண்டில் பிரிட்டி ஷாரின் படையை எதிர்த்து கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தை பயன் படுத்தினார்.  

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பிரிட்டிஷ் அரசு முண்டாவின் தலைக்கு 500 ரூபாய் சன்மானம் அறிவித்தது. இந்த தகவலை அறிந்ததும் அவர் தலைமறைவானார். அன்றைக்கு அவரைத் தேடும் முயற்சியில் 500க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை சுட்டுக் கொன்றது ஆங்கிலேயர்களின் படை. 

இந்த நிலையில்  1900 ஆம் ஆண்டில் பிப்ரவரி 3ஆம் தேதி ஒரு காட்டுப் பகுதியில் பிர்சாவை கைது  செய்து சிறைப்படுத்தியது ஆங்கிலேய அரசு. அந்த முறை நான்கு மாத காலம் மட்டுமே சிறையில் இருந் தார்.  ஜூன் 9 ஆம் தேதி பிணமாகத் தான்அவர் வெளியில் வந்தார். அன்றைக்கு அவரது வயது வெறும் 25 தான். காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது பிரிட்டிஷ் அரசு. 

இந்திய நாட்டின் நிலப்பிரபுத்துவம்,  பிரிட்டிஷ் அரசின் அடிமைத்தனம் உள்ளிட்டவைகளை எதிர்த்து தனது 20 வயது துவங்குமுன்பே போராட் டத்தை தொடங்கியவர் முண்டா. இன்றைக்குள்ள ஒருங்கிணைந்த இந்திய நாடு அன்றைக்கு இல்லை. ஆனாலும், பழங்குடி மக்களின் கைகளிலும் அதி காரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த  மக்களையும் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார்.

இதன் விளைவு, 1908 ஆம் ஆண்டில் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் (Chotanagpur Tenancy Act 1098) கொண்டு வரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என் பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது. 

இப்படிப்பட்ட, பழங்குடியின மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த மாபெரும் நாயகன் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15ஆம் தேதியை, பழங்குடியினரின் ‘பெருமை மிகு’ கவுரவ தினமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டு வார காலம் கொண்டாடுவது என அறிவித்து மோடி அரசு நிகழ்ச்சிகளை துவக்கியுள்ளது. ஆனால், பழங்குடி மக்களின் வன உரிமைக்காக போராடிய பிர்சா முண்டாவை கொண்டாடுவதற்கோ அல்லது அவரது பெயரை உச்சரிப்பதற்கோ கூட, வன மக்களின் வாழ்வாதாரங்களை அனுதினமும் அழித்துக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கு எந்த அருகதையும் இல்லை.

பழங்குடி பெண் ஒருவரை நாட்டின் குடியரசுத் தலைவராக அமர வைத்திருக்கிறோம் என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்கிறது பாஜக கூட்டம். ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருவரை யும் புறக்கணித்தது ஒன்றிய பாஜக அரசு.  அழைப்பி தழில் கூட பெயரை போடாமல் அவமானப்படுத்தினார் பிரதமர் மோடி. இத்தகைய ஆட்சியாளர்களுக்கு, பிர்சா முண்டாவின் பெயரைச் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

தரையில் அமர வைக்கப்பட்ட பழங்குடி மக்கள்

தற்போது கூட நவம்பர் 15 அன்று, பிர்சா முண்டா பிறந்த நாளையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் நடந்த கவுரவ தின விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை காணொலி காட்சி மூலம் பல மாநிலங்களிலும் நடைபெற்ற விழாக்களில்  ஒளிபரப்பு செய்தனர். அதன்  ஒரு பகுதியாக புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற பழங் குடியினர் கவுரவ தின விழாவிலும் ஒளி பரப்பப்பட்டது. விழா நடைபெற்ற கம்பன் கலையரங்கில் சுமார் 300 நபர்கள் அமர இருக்கைகள் (நாற்காலிகள்) போடப் பட்டிருந்தன. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், முதலமைச்சர் என்.ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வ கணபதி எம்.பி, பேரவைத் தலைவர் செல்வம், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, தலைமைச் செயலாளர் ராஜிவ்வர்மா, அரசு செயலர்கள் முத்தம்மா, கேசவன், துறை இயக்குநர் இளங்கோ வன், மாவட்ட ஆட்சியர் வல்லவன் என்று அதிகாரிகள்,  முக்கிய நபர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டனர். ஆனால் இந்த விழாவுக்காக அழைத்து வரப்பட்ட பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்தனர்.

பழங்குடியின அமைப்பை சேர்ந்தவர்களை விழா மேடையில் அமரவைத்து கவுரவிக்கவில்லை என்று பழங்குடியின மக்கள் சங்கத் தலைவர் சரமாரி குற்றம் சாட்டினார். அப்போது புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி னர். அதன் பிறகு தான் அந்த விழாவில் பங்கேற்ற பழங்குடி பெண்கள் உள்ளிட்டோருக்கு நாற்காலிகள் கொண்டுவரப்பட்டது.

பாஜக- ஆர்எஸ்எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பழங்குடி மக்கள் என்பவர்கள் தீண்டத்தகாதவர்களே. அதனால்தான், விமர்சனக் குரல் எழும்வரை நாற்காலி போடவில்லை. 

இது ஒரு உதாரணம் மட்டுமே. “கவுரவ தினம்” என்று பெயரிட்டுவிட்டு பழங்குடி மக்களை இழிவு படுத்தியதுதான் இவர்களது சாதனை. பிர்சா முண்டா நடத்திய எழுச்சியைப் போல மோடி அரசுக்கு எதிராக பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகள் பறிப்புக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.