articles

img

பாசிசத்தின் சமகால வடிவ மாற்றங்கள் - சி.முருகேசன்

பாசிசத்தின்  சமகால வடிவ மாற்றங்கள் - சி.முருகேசன்

பாசிசம் இப்போதும் நம்மைச் சுற்றி உள்ளது. சில நேரம் சாதாரண பிரச்ச னைகளில் யாராவது முன்வந்து “நான் வதைமுகாம் (ஓஷிட்ஸ்) மீண்டும் திறக்க விரும்பு கிறேன், இத்தாலியின் சதுக்கங்களில் கருப்பு உடை அணிவகுப்பை மீண்டும் நடத்த நான் விழைகிறேன்” என்று கூறியிருந்தால் நமக்கு மிக எளிதாகி இருக்கும். ஆனால், வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. பாசிசம் மிகவும் குற்றமற்ற வேடங்களில் திரும்பி வரலாம். நமது கடமை, அதனை வெளிப்படுத்துவதும், அதன் புதிய வடிவங்களை அனைத்து நாட்களிலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சுட்டிக் காட்டுவது மாகும்.

புதிய வடிவம்; புதிய புரிதல்கள்

உலகின் பல்வேறு பகுதிகளில் நவ பாசிச நட வடிக்கை தலைதூக்குவதைக் காணலாம். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு கட்சி தயாரித்துள்ள நகல் அரசியல் தீர்மானம் நவ பாசிசம் குறித்து மிகவும் முக்கியமான முன்னறிவிப்பை அளித்திருப்பது இந்த பின்னணியில்தான். ஆனால், இதில் தவறான விளக்கமளிக்கும் முயற்சிகளும் பெரிய அளவில் நடந்து வருகின்றன. இப்போது பழைய வழக்கமான பாணி பாசிசம் குறித்தும் அதன் நவீன வடிவத்தைக் குறித்ததுமான நமது புரிதல்களை மேலும் தெளிவு படுத்த வேண்டியதாக உள்ளது. இடதுசாரி அரசியலை எதிர்கொள்ள 1920-களில் முசோலினிதான் தீவிர தேசியவாதத்தை ஒரு கரு வியாகக் கொண்டு, பாசிசம் என்கிற அரசியல் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மிக கடுமையான பொ ருளாதார சிக்கலின் பின்னணியில் முதலாளித்துவம் தோல்வியைத் தழுவியிருந்தது. இதே காலத்தில், 1920-களின் இறுதியில் ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிச அரசியல் பிறந்தது; அது உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய அரசியல் துயரங்களுக்கு வழிவகுத்தது. தீவிர தேசிய வாதத்துக்கு இணையாக இனப் பாகுபாட்டை பரவலாக்கி ஹிட்லர் தனது பாசிச அரசியலை நகர்த்தினார்.  பாசிசம் குறித்தான தனது ஆய்வில், தோழர் டிமிட்ரோவ் சரியாகவே மதிப்பீடு செய்துள்ளார்:  “தங்களது வாழ்வாதார வாய்ப்புகளில் இருந்து விரட்டி யடிக்கப்பட்ட குட்டி பூர்ஷ்வா பகுதியினர் மற்றும் தொழி லாளி வர்க்கத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சில பகுதியினரின் ஆதரவைப் பெற, நயவஞ்சக மாக சமூக அடிமைத்தனத்தின் திரைமறைவில் பாசி சத்தால் சாத்தியமானது; ஒவ்வொரு நாட்டிலும் அதன் வரலாறு, சமூக, பொருளாதார சூழ்நிலைகளுக்கும் தேசிய சிறப்புகளுக்கும் சர்வதேச பதவிகளுக்கும் சாத கமாக பாசிசத்தின் வளர்ச்சியும் பாசிச எதேச்சதிகாரமும் தனக்கே உரித்தான முறையில் வடிவம்கொள்கிறது”.  பழைய பாணியில் பாசிசத்தை மதிப்பீடு செய்யும் அதேவேளையில், அதன் பன்முக வடிவத்தை டிமிட்ரோவ் சுட்டிக் காட்டுகிறார்.

‘பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி’ என்கிற புகழ்பெற்ற கட்டுரையின் முன்னுரையில், தோழர் இ.எம்.எஸ்.சுட்டிக்காட்டும் கீழ்காணும் பகுதி முக்கிய மானதாகும்: “உலக பாசிசத்தின் முக்கியத்துவமும் அதன் வளர்ச்சிக்கு காரணமான உலக அரசியல் சூழ்நிலைகளும் அதேவிதமாக இன்றும் நிலை கொள்ளாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைய ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ, அரசியல் கட்சியையோ அது பாசிசத்திற்கு அளிக்கும் முன்னு ரிமை அடிப்படையில் மதிப்பீடு செய்ய முற்படுவது பொருத்தமற்றதாக இருக்கும்.” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “பாசிச தன்மைகொண்ட ராஸ்ட்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) வழி காட்டுவதாலும் ஆளுமை வகிப்பதாலும் பாஜக  என்பது சாதாரண முதலாளித்துவ கட்சியல்ல; பாஜக அதி காரத்தில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்திலும் அரசமைப்பு நிறுவனங்களிலும் தலையிட ஆர்எஸ்எஸ் அமைப்பால் சாத்தியமாகிறது; அரசமைப்புச் சாச னத்தின் மதச்சார்பின்மை அடித்தளத்தில் கடுமை யான பாதிப்பு ஏற்படுகிறது”. 22 ஆவது அகில இந்திய கட்சி மாநாட்டின் (ஏப்ரல்  2018) அரசியல் தீர்மானம், நரேந்திர மோடி ஆட்சியை இவ்வாறு மதிப்பீடு செய்தது:

 “ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதற்கு மேற்கொள்ளும் தந்திர மான முயற்சிகள் நமது நாட்டின் மதச்சார்பற்ற அரசி யல் சட்டப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்; தலித்து களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான வன் முறைகள் பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கை களின் தொடக்கமாகும்; அமெரிக்காவுடனான கொள்கை அளவிலான கூட்டையும் வலுப்படுத்தி அதன் இளைய பங்காளியாக செயல்படுவதும் நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கு கடிவாளமிட்டு அரசமைப்புச் சாசன நிறுவனங்களையும் ஜனநாயக உரிமைக ளைப் பறித்தும் எதேச்சதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது”.

ஒரு பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் ஹிட்லரின் ஜெர்மனியில் இருந்து ஊக்கம் பெற்று செயல்படு வது கவலையளிப்பதாகும். முசோலினியை நேரடி யாக சந்தித்து பாசிச வன்முறைப் பயிற்சியும் வழிமுறை யும் கற்ற டாக்டர் மூஞ்சேயின் செல்வாக்கை, ஆர்எஸ்எஸ் பயிற்சி முறைகளில் காணலாம். ஆர்எஸ் எஸ் பிரச்சாரகரான நரேந்திர மோடி மூன்றாவது முறை யாகவும் பிரதமராக பொறுப்பேற்றதோடு பாசிச ஆட்சி முறைக்கு இந்தியா மாறிவிட்டதா என்பது, நமது தீவிரமான துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகும். பாசிச குணம் படைத்த ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் மோடி அரசு இந்தியா வில் ஒரு பாசிச ஆட்சியை வெளிப்படையாக நிறுவு வதை நோக்கி நகர்வதற்கான சாத்தியப்பாடு கடும் அச்சுறுத்தலாக நீடிக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்கிறது. அதை தடுக்க வகுப்புவாத – பாசிச எதிர்ப்பு சக்திகளின் விரிவான ஒத்துழைப்பை சாத்திய மான அனைத்து தளங்களிலும் உருவாக்க வேண்டும் எனவும் வரைவு அரசியல் தீர்மானம் வலியுறுத்தி கூறுகிறது.

24 ஆவது அகில இந்திய கட்சி மாநாட்டுக்கு முன் னோடியாக கட்சி முழுமையும் விவாதித்து மாநாட்டில் முன்வைத்து உரிய திருத்தங்களுடன் அங்கீகரிக்க வேண்டிய வரைவு அரசியல் தீர்மானத்தில் ‘நவ பாசிசம்’ என்னும் புதிய நிர்ணயிப்பு, மத்தியக்குழு விவாதித்து அங்கீகரித்து அரசியல் தீர்மானத்தில் பயன்படுத்தப் பட்டது. ஆனால், இதை மேலும் தெளிவுபடுத்த வேண்டும் என கொல்கத்தாவில் ஜனவரி மாதம் கூடிய மத்தியக்குழு கூட்டம் சுட்டிக்காட்டியபடி அரசியல் தலைமைக்குழு ஒரு குறிப்பை தயாரித்து அனைத்து மாநிலக் குழுக்களுக்கும் அனுப்பியது. 

உண்மை இவ்வாறு இருக்க, வாசகர்களின் மிதமான அரசியல் உணர்வுகளை தட்டியெழுப்ப ஒரு ‘ரகசிய’ ஆவணத்தை தாங்கள் கைப்பற்றி வெளியிடு கிறோம் என்று ஒரு ஊடகம் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் அச் சிட்டு, முழுமையான வரைவு அரசியல் தீர்மானத்தோடு நவ பாசிசம் குறித்தான அரசியல் தலைமைக்குழுவின் குறிப்பையும் அச்சிட்டு, பொது வெளியில் வெளி யிட்ட நிலையில்தான் இந்த செய்தி வந்தது.

நவ பாசிசம்’ என்பதன் பொருள் என்ன?

அரசியல் தலைமைக் குழு தயாரித்து வெளியிட்ட குறிப்பு நவ பாசிசத்தை இவ்வாறு விவரிக்கிறது: 

“நவ பாசிசம் என்பதன் பொருள் என்ன? ‘நவ’  (neo) என்பதன் பொருள் புதியது என்றோ ஏதேனும் பழையதன் சமகால வடிவம் என்பதோ ஆகும். ஐரோப்பாவில் முதல் மற்றும் இரண்டாவது உலகப் போர்களுக்கு மத்தியில், முசோலினியின் இத்தாலி யைப் போலவோ ஹிட்லரின் ஜெர்மனியைப் போலவோ  வளர்ந்து வந்த பழைய பாணி பாசிசத்தில் இருந்து  வேறுபடுத்தவே, ‘நவ பாசிசம்’ (Neo -Fascism) என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கால கட்டத்தில் உலக முதலாளித்துவ நெருக்கடி 1929 முதல் 1933 வரை நீடித்த பெரும் பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் சென்றது. ஏகாதிபத்தியங்க ளுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மைய டைந்தன. முதலாவது உலகப்போரும் இரண்டாவது உலகப்போரும் ஏகாதிபத்திய முரண்பாடுகளின் விளைவாகும். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், பாசிச சக்திகள் முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கைவிட்ட தோடு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்ப தற்காக போரைப் பயன்படுத்தி ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் செய்தன. இந்த நாடுகளில் ஏகபோக மூலதனம் பாசிஸ்ட்டுகளை முழுமையாக ஆதரித்தது.  நெருக்கடியைக் கடக்க மிகத் தீவிரமான நடவடிக்கை கள் மேற்கொள்ள, ஏகபோக முதலாளிகள் பாசிச சக்திகளை தூண்டினர். நவ பாசிசத்தின் சில கூறுகள் இருபதாம் நூற்றாண் டின் முற்பகுதியில் காணப்பட்ட பாசிசத்தைப் போன்றதுதான். வரலாற்றுப் பூர்வமான தவறுகள் மற்றும்  அநீதிகளின் விளைவு என வரையறுக்கப்படும் உணர்வுகளின் அடிப்படையில் உருவாகும் தீவிர தேசியவாதம், வகுப்புவாதம், மதவாதம், இனவாதம் - ஆகியவற்றின் அடிப்படையில், ஏதேனும் ஒரு சிறுபான்மையினத்தை குற்றவாளியாக பார்ப்பது, தீவிர வலதுசாரி நவ பாசிச சக்திகளுக்கும் கட்சிக ளுக்கும் பெரும் முதலாளிகள் அளிக்கும் ஆதரவு போன்றவை முந்தையது போன்றதே. இந்தியாவில் நவ பாசிசத்தை அடையாளப்படுத்துவது ஆர்எஸ் எஸும், இந்துத்துவ அடிப்படைவாதமும் ஆகும். இவை பாசிச குணம் படைத்தவை என நமது கட்சித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அவர்களால் முடி கிறது. இந்துத்துவா அடிப்படைவாதம், புதிய தாராள மய நெருக்கடி, பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு இணங்க எதேச்சதிகாரத்தை திணித்தல் போன்றவை நவ பாசிசத்தின் துவக்க வடிவமாகும்”.

பாஜக – ஆர்எஸ்எஸ்சின் கீழ் செயல்படும் இன்றைய அரசு இயந்திரம் ‘நவ பாசிசத்தின் போக்கு களை வெளிப்படுத்தும்’ ஆட்சி என நாம் குறிப்பிட் டுள்ளோம். அதேநேரத்தில் இந்தியாவில் இப்போதே ஒரு பாசிச ஆட்சிமுறை முழுமையான வடிவில் வந்து விட்டது என்பது, நுணுக்கமான விளக்கத்திற்கு பொருத்தமற்றது.

ஊடகங்கள் மீதும், எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் மாற்றுக் கருத்துகள் மீதும் பரவலான ஒடுக்கு முறைகள் நடக்கிறது என்பது சரியே. ஆனால், ஹிட்லரும் முசோலினியும் எதிர்க் குரல்களை ஒரேயடி யாக வெளிப்படையாக ஒடுக்கவும், ராணுவ பொது நிர்வாகம், நீதி நியாய செயல்பாடு போன்ற ஆட்சி அதிகார அமைப்புகளை முற்று முழுமையாக கைப் பற்றியது போன்ற நிலை இப்போதும் இந்தியாவில் வடிவம் பெறவில்லை. ஆனால் அதை நோக்கிய நகர்வுகளைக் காண முடிகிறது. அவசர நிலைக் காலத்தின் தீவிர அடக்குமுறையையும் பாசிசம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடவில்லை. அதுபோலவே 1972 முதல் மேற்கு வங்கத்தில் காங்கி ரஸ் கட்சியின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே தலைமை யில் நடந்த கொடிய அடக்குமுறையையும் படுகொலை களையும் தேர்தல் முறைகேடுகளையும் ‘அரை பாசிச’ ஆட்சி என்றே மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்தது

பொது சமூகத்தில் இன்றும் ஜனநாயக முறை யில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடிகிறது. அனைத்து சக்திகளையும் சரியாக அணி திரட்டினால் ஜனநாயக முறையிலான வழிகளில் தோற்கடிக்க கூடியதே ‘நவ பாசிசத்தின் இந்தியப் பதிப்பு’ என்கிற உண்மை நிலையை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது. மோடி ஆட்சி நவ பாசிசப் போக்குகளை வெளிப்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கட்சி முடிவுக்கு வருவது, அது முன்வைக்கும் பாசிச அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடாமலும், நிலவரங்களை மிகைப்படுத்திக் காட்டாமல் இருப்பதுமாகும். நோயை சரியாக அறிந்துகொள்வது என்பது அதை குணப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியமான கட்டம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படிச் செய்தால் மட்டுமே இந்திய சமூகத்தில் இன்று மேலோங்கி வந்துள்ள பாசிச அச்சுறுத்தலை முழு மையாக புரிந்து கொள்ளவும் அதற்கு எதிரான கலாச்சார – அரசியல் போராட்டங்களில் அதிக அளவில்  மக்களையும் அரசியல் அமைப்புகளையும் அணி திரட்டவும் முடியும்.   

வெளியான கட்டுரையின் தமிழாக்கம் சி.முருகேசன்