மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலை 1975ஐ விட ஆபத்தானது
இன்றைய அரசியல் சூழலை கடந்த காலத்துடன் நேரடியாக ஒப்பிட முடியா விட்டாலும், தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது. எந்த நாடும் சர்வாதிகார நாடு என்று பெருமையாகச் சொல்வதில்லை; ஜனநாயக நாடு என்றே தங்களைப் பெரு மைப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இன்று இந்தியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கு எதிரான கொடூரமான செயல்பாடுகளாகும்.
அரசியலமைப்பின் அடிப்படை மாண்புகள்
ஜனநாயகம், மதசார்பின்மை, அறிவியல் பார்வை, சமூகநீதி, கூட்டாட்சி கோட்பாடு - இந்த ஐந்தும் இந்தியாவின் அரசியலமைப்பின் அடிப்படை மாண்புகள். அரசியலமைப்பு பல திருத்தங்களைக் கண்டிருக்கிறது, பல சவால் களை சந்தித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் தெளிவாகக் கூறியது: “நாடாளுமன்றத்திற்கு சட்டம் இயற்ற உரிமை உண்டு, ஆனால் அப்படி இயற்றும் சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை மாண்புக ளை சீர்குலைப்பதாக இருக்கக்கூடாது.” பாஜக அரசின் கடுமையான தாக்குதல்கள் அரசியலமைப்பின் மீது தொடுக்கப்படும் போது, அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப் படையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் மதச்சார்பற்ற சக்திகளும் குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.
1975 அவசர நிலையின் உண்மையான பின்னணி
1975 அவசர நிலையை இந்திராகாந்தியின் பதவி இழப்பு அச்சம் என்று எளிதாகச் சொல்லலாம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை அப்படிப் பார்க்கவில்லை. அப்போது பல அரசியல், பொருளாதார, சமூகக் காரணங் கள் இருந்தன. அது போராட்டங்கள் நிறைந்த கால கட்டமாக இருந்தது. ஆளும் வர்க்கம் அதைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்தது. அப்போது டாடா “நாடாளுமன்ற அமைப்பு நமக்குச் சரிப்படாது” என்றார். அவர் சரிப்படாது என்று சொன்னது தொழிலாளர்களுக்கு அல்ல, கார்ப்பரேட்டுகளுக்கும் முதலாளிகளுக்கும். இதனால்தான் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது பெரும்பாலான முதலாளி கள் அதை ஆதரித்தார்கள். அவசர நிலைக்கான ஒப்புதலைப் பெற நாடா ளுமன்றம் கூட்டப்பட்டபோது, சிபிஎம் எம்பிக்க ளின் தலைவராக தோழர் ஏ.கே.கோபாலன் எழுந்து பேசினார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கான காரணம் இந்திராகாந்தி தனிப்பட்ட முறையில் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்கத்தான் என்று அவர் தெளிவாகக் கூறி னார்.
ஆர்எஸ்எஸ்ஸின் சரணாகதி
அவசர நிலையின்போது ஆர்எஸ்எஸ் தயாரித்த ஆவணத்திற்கு “சரணாகதி ஆவணம்” என்றே பெயர் வைத்தார்கள். இந்த ஆவணத்தில் கையெழுத்துப் போட்டு இந்திராகாந்தியிடம் கொடுப்பதற்கு முன்னதாகவே அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்றைக்கு வாய்கிழிய ஜனநாயகத்தைப் பற்றிப் பேசும் மோடி தங்களது கடந்த காலங்க ளை மறைக்க முயல்கிறார். ஆர்எஸ்எஸ்ஸின் வழி காட்டுதலில் செயல்படும் பாஜக அவசர நிலை யைப் பற்றியோ, ஜனநாயகப் பறிப்பைப் பற்றியோ பேசுவதற்கு சிறிதளவும் அருகதை இல்லை.
இன்றைய அறிவிக்கப்படாத அவசர நிலை
அன்று நடந்த அவசர நிலையோடு இன்றைய நிலையை நேரடியாக ஒப்பிட முடியாது. ஆனால் இன்றைய நிலைமை அதைவிட ஆபத்தானது, குணாதிசயத்தில் வேறுபட்டது. ஊடகத் துறையில் கட்டுப்பாடு: அன்று இந்திராகாந்தி பத்திரிகைகள் மீது நேரடியாகத் தணிக்கையை விதித்தார். ஆனால் இன்று பாஜக அரசு தணிக்கையைத் திணிப்பதில்லை. பல பத்திரிகைகளை மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகி றார்கள், விளம்பரம் கொடுக்க மறுத்து நிதிப் பட்டினி போட்டு தங்கள் வசம் இழுத்துக் கொள்கி றார்கள். இதனால் பத்திரிகை சுதந்திரத்தில் 180 நாடுகளில் 151வது இடத்தில் இந்தியா இருப்பது தற்செயலானது அல்ல. அரசு இயந்திரங்களின் தவறான பயன்பாடு: அன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் நேரடியாகக் கைது செய்யப்பட்டார்கள். இன்று மத்திய அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற அரசு முகமைகளை வைத்து எதிர்க்கட்சி களை வேட்டையாடுகிறார்கள். தேர்தல் அமைப்பின் சீர்குலைவு: தேர்தல் ஆணையர்கள் நியமனக்குழுவில் மூன்றில் இரண்டு பேரை அரசு நியமிக்கிறது. இதனால் தேர்தல் ஆணையத்தையும் தேர்தலையும் தங்களுக்குச் சாதகமாக நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஒரே நாடு கொள்கையின் ஆபத்து : “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு” என்பது ஜனநாயக விரோதம். கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஜனநாயக உரிமை. மாநில உரிமை களைக் காலில் போட்டு மிதிக்கும்போது ஜன நாயகம் பாதிக்கப்படுகிறது. மொழி அடிப்படையிலான பாகுபாடு: கடந்த பத்தாண்டுகளில் ஒரு மொழிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கும் நிதியைவிட, தமிழ் உள்பட ஐந்து மொழிகளுக்கு அவர்கள் ஒதுக்கியிருக்கும் நிதி மிகமிகக் குறைவு. கல்விக் கொள்கையில் மூளைச்சலவை : தேசியக் கல்விக் கொள்கை இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக மக்களை, மாணவர்களை மூளைச்சலவை செய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. சிந்திக்கவிடாமல், கருத்து வேறு பாடுகளைச் சொல்லவிடாமல், வாழ்வைப் பற்றி யோசிக்கவிடாமல், அவர்கள் சொல்வதை மட்டும் கேட்கவும் கீழ்படியவும் வேண்டும் என்ற ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது ஜனநாயக விரோதச் செயல். சர்வதேசப் பின்னணி: உலகின் பல நாடு களில் தீவிர வலதுசாரிச் சக்திகள் ஆட்சியைப் பிடித்துள்ளன. சர்வதேச நிதி மூலதனம் பொரு ளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஏகாதி பத்தியத்திற்குச் சாதகமாக இருக்கும் இந்தப் பின் புலத்தில்தான் பாஜக இந்தியாவில் அறிவிக்கப் படாத அவசர நிலையை நடத்துகிறது.
கருத்தியல் போராட்டத்தின் அவசியம்
பாஜக, ஆர்எஸ்எஸ் நடவடிக்கையை எதிர்ப்பது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் களத்தில் மட்டுமல்ல. ஆண்டு முழுவதும் இடைவிடாமல் கருத்தியல் ரீதியாக அவர்கள் விதைக்கும் நச்சுக் கருத்துக்களை எதிர்த்து; நமது வர்க்கக் கருத்துடன் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர் சங்கத்தை விட்டு ‘நான் இந்து’ ‘நீ முஸ்லிம்’ என தொழிலாளர்கள் தங்க ளுக்குள் மோதும் நிலை உருவாகும்.
தமிழகத்திற்கான எச்சரிக்கை
இன்று தமிழகத்தில் அதிமுக-பாஜக ஒன்றா கச் சேர்ந்து ஒரு அணியாக வந்துள்ளன. தமிழ கத்தில் இவர்கள் காலூன்றினால் வடமாநிலங்க ளில் சந்திக்கும் கொடுமைகளைத் தமிழக மக்க ளும் சந்திக்கும் நிலைமை ஏற்படும். அவர்கள் பொ றுப்பிற்கு வந்தால் தொழிலாளர், விவசாயிகளின் எல்லா உரிமைகளும் பறிபோகும். பாஜக, ஆர்எஸ்எஸ் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும், தனிமைப்படுத்தப்பட வேண்டும், தோற்கடிக்கப்பட வேண்டும். இதுதான் நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய அரசியல் கடமை. மிக மோசமான எதேச்சதிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளி முறியடிக்க நடக்கும் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் முன்வரி சையில் இருக்கிறோம் என்பதை நாம் பெருமை யோடு பார்க்க வேண்டும். பாஜகவை முறியடிப்பது காலத்தின் கட்டாயம். இந்த மிகப்பெரிய ஆபத்தைத் தனிமைப்படுத்தித் தோற்கடிக்கும் முயற்சிகளைச் செய்வது நமது அரசியல் கடமையாகும்.