articles

விளக்கம் கேட்பது மலிவான அரசியல், அபத்த நாடகம் - ச.வீரமணி

விளக்கம் கேட்பது மலிவான அரசியல், அபத்த நாடகம்

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ வேண்டிய காலக்கெடு குறித்த முந்தைய உத்தரவு குறித்து விளக்கம் கோரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உத்தரவின் பேரில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நீதிமன்றத்திற்கே அனுப்பிடும் சமீபத்திய முடிவு தொடர்பாக புதுதில்லி யில் தற்போது நடைபெற்று வரும் மலிவான அரசியல் நாடகம், ஓர் அபத்த நாடகமே தவிர வேறல்ல. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தன்னிச்சையானது அல்ல. அது ஏராளமான தீர்ப்பு களால் வடிவமைக்கப்பட்டு நீண்டகாலமாக நிறு வப்பட்ட நீதித்துறை தீர்வறிக்கைகளுக்கு அடித் தளமாகும்.

கிடப்பில் போடக்கூடாது

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடத்தை குறித்த முந்தைய உத்தரவு தொடர்பாக பதினான்கு கேள்விகளை எழுப்பி, அரசமைப்புச்சட்டத்தின் 143(1)ஆவது பிரிவை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள் ளார். உண்மையில் தமிழக சட்டமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றும் இதில் தலையிட வேண்டும் என்றும் தமிழக அரசுதான் இந்தப் பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர்கள், ஒரு சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவர் அதன்மீது “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக” (“as soon as possible”) ஒப்புதல் அளித்திட வேண்டும் அல்லது திரும்ப அனுப் பிட வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்தி ருக்கின்றனர். “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வ ளவு விரைவாக” என்பது மிகவும் கண்ணியமான சொற்றொடர் ஆகும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளை கிடப்பில் போட்டுவைப்பது கூடாது.

கருத்துப் பெறுவது  கட்டுப்படுத்திடாது

வேறுசில அரசமைப்புச்சட்டங்களைப் போலல்லா மல் நம்முடைய அரசமைப்புச்சட்டத்திற்கு சவால் விடுக்க குடியரசுத் தலைவரின் பரிந்துரை தேவை யில்லை. எந்தவொரு குடிமகனும் கீழமை நீதிமன்றத்தி லிருந்து உச்சநீதிமன்றம் வரை, நீதிமன்றங்களை அணுகலாம். நீதிமன்றத்தின் கருத்தைப் பெறு வதற்கான ஏற்பாடு தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த விதியின் கீழ் அத்தகைய கருத்து கோரப்படும்போது கூட, அது எவரையும் கட்டுப்படுத்திடாது. இவற்றின் அடிப்படையில் ஒன்றிய  அரசு நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தைப் பார்க்கும்போது,  பாஜக அல்லாத மாநில அரசாங் கங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை சுதந்திரமாகப் பயன்படுத்துவதை அது விரும்பவில்லை என்பது நன்கு தெரிகிறது. தமிழ்நாடு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, எந்தக் கூக்குரலும் இல்லை. ஆளுநர் வெளிப்ப டையாகவே அமைதியாக இருந்தார். ஆனாலும், அரசியல் களத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தூண்டப்பட்டார். தீர்ப்பை மேற்கோள் காட்டி, உச்ச நீதிமன்றம் ஒரு “சூப்பர்-நாடாளுமன்ற மாக” மாறிவிட்டது என்று அவர் கடுமையான கருத்தைத் தெரிவித்தார். இதற்கிடையில், ஆளுநர் ரவி எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டார். பல தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகும், அவர் மலை வாசஸ்தலமான ஊட்டியில் துணைவேந்தர்களின் கூட்டத்தை கூட்டினார்.

மறு ஆய்வு மனுச் செய்வது அல்லது சட்டமியற்றுவது

ஒரு தீர்ப்பின் மீதான அதிருப்திக்கு வழக்கமான சட்டப்பூர்வ தீர்வு என்பது மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதேயாகும். ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாண்டி எந்த மேல்முறையீடுகளும் செய்ய முடியாது. அரிதான சூழ்நிலைகளில், ஒரு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணை யர்களை நியமிப்பதற்கான தேடல் குழுவின் அமைப்பை அரசாங்கம் செய்தது போல, தீர்ப்பின் விளைவை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது மற்றொரு வழி. ஆனால் இந்த வழிகளில் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற விஷயங்க ளுக்கான அரசமைப்புச்சட்ட அதிகாரியான அட்டர்னி ஜெனரலையும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வில்லை.

குடியரசுத் தலைவரின் குறிப்பு  அரசு ஏற்காததன் அடையாளமே!

இந்த விஷயத்தில் எவ்விதமான குழப்பத்திற்கும் இடமில்லை. அரசமைப்புச்சட்டத்தின் 74ஆவது பிரிவின் 42ஆவது திருத்தத்திற்குப்பிறகு, குடியரசுத் தலைவர், அரசமைப்புச்சட்டத்தின்படி, அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்பேரில் செயல்படக் கடமைப்பட்டுள்ளார் என்பது தெள்ளத்தெளிவான ஒன்று. எனவே இப்போது இவ்வாறு குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்பியிருப்பது ஓர் அரசி யல் செய்தியைத் தவிர வேறல்ல. இது, “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக” (“as soon as possible”) என்கிற உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தை அரசாங்கம் ஏற்கவில்லை என்பதற்கான ஒரு அடையாள வலியுறுத்தலேயாகும்.

 தீர்வறிக்கைகளுக்கு முரண்...

இந்த நிலைப்பாடு என்பது பல ஆண்டு காலமாக நீதித்துறையால் நிறுவப்பட்ட தீர்வறிக்கைகளுக்கு (rulings) முரணானது. குறிப்பாக, ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும் என்றும், இங்கிலாந்தின் மன்னர்கள் அல்லது அமெ ரிக்காவில் உள்ள ஜனாதிபதிகள் போன்ற சுதந்திர முக வர்கள் அல்ல என்றும் கூறும் 1974ஆம் ஆண்டு ஷம்ஷேர் சிங் வழக்கின் தீர்வறிக்கைக்கு முரணானதாகும். இவ்வாறுதான் நாம் இந்த அபத்தமான நாடக அரங்கில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். உச்சநீதி மன்றம், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்குப் பதில ளிக்கலாம் அல்லது பதிலளிக்காமல் இருக்கலாம். அது பதிலளித்தாலும்கூட, இதில் கூறப்படும் கருத்து எவரையும் கட்டுப்படுத்தாது.

ஒற்றையாட்சி அரசுக்காக  ஆழமாகச் செல்கிறது...

மோடி அரசாங்கம், வெளித்தோற்றத்தில் தீங்கற்ற  ஆடம்பரமானதாகத் தோன்றினாலும், குறிப்பாக அது தற்போது எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு ஆழமாகச் சென்றுகொண்டிருப்ப தைக் காணத் தவறிவிடக் கூடாது. இவர்கள் நடத்தும் நாடகம் வெறும் அரசியல் நாடகம் என்று கருதுவது அப்பாவித்தனமாகும். உண்மையில் இந்த அரசாங்க மானது இந்துத்துவா சித்தாந்தத்தால் வழிநடத்தப்படு வதாகும். இந்த சித்தாந்தமானது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளையும், நடைமுறை களையும் நிராகரித்திடும் ஒன்றாகும். எம்.எஸ். கோல்வால்கரை முதன்மை சித்தாந்தவாதியாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் கூட்டம், கூட்டாட்சிக் கோட் பாட்டை (federalism) ஒருபோதும் அதன் உண்மை யான அர்த்தத்தில் ஏற்றுக்கொண்டதில்லை. அது எப்போதும் சிறிய மாநிலங்கள் மற்றும் மையப்படுத் தப்பட்ட ஒற்றையாட்சி அரசாங்கத்திற்காகவே வாதிட்டு வந்திருக்கிறது.

விளக்கம் பெறுவதல்ல  சட்டமன்ற அதிகாரத்தை அரித்தல்...

அடிப்படை இலட்சியங்களின் மீதான இந்த படை யெடுப்புகளுக்கு எதிராக அரசமைப்புச்சட்டம் இன்று ஓர் அரணாக நிற்கிறது என்பது, சாராம்சத்தில், அபத்தமான இவர்களின் நாடகத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது. இவர்களின் உண்மையான நோக்கம் அரசமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடரான “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக” என்பதற்கான அரச மைப்புச்சட்டத்தின் விளக்கத்தைப் பெறுவது அல்ல. மாறாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் இறையாண்மை அதிகாரத்தை அரித்து வீழ்த்திட வேண்டும் என்பதேயாகும். மே 21, 2025,  தமிழில் : ச.வீரமணி