நெல்லிக்குப்பம் என்றாலே முதலில் நினைவுக்கு வருது ஈஐடி பாரி சர்க்கரை ஆலை தான், தொழில் வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பிலும், இனிப்பான செய் தியை கொடுத்துக் கொண்டிருந்த அந்த ஆலை, தற்போது அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு வியாதிகளை கொடுத்துக் கொண்டிருப்பதுதான் கசப்பான உண்மை.
நெல்லிக்குப்பத்தில் உள்ள ஈஐடி பாரி சர்க்கரை ஆலை 1988 ஆம் ஆண்டு பாரி என்ற ஆங்கிலேயரால் இந்தியா வில் முதல்முறையாக தொடங்கப் பட்ட சர்க்கரை ஆலை மற்றும் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த சர்க்கரை ஆலை 1842ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த நிறுவனத்தை முருகப்பா குழுமம் நிர்வகித்து வருகிறது.
சர்க்கரை ஆலையால் தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு விவசாயிகளின் கரும்பு உற்பத்தி உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இருந்தாலும், ஆலையால் நெல்லிக்குப்பம் நகரில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலையின் பாய்லரிலிருந்து புகை யுடன் கூடிய சாம்பல் பறந்து கொண்டே இருப்பதால் அந்த சாம்பல் குடியிருப்பு பகுதிகளின் மேல் படிந்து விடுகிறது. அதிலிருந்து ரசாயனம் கலந்த துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூச்சுவிட சிரமப்படுகிறார்கள். கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் பாசன வாய் கால்வாய்களில் விடுவதினால் நெல்லி க்குப்பத்தை சுற்றியுள்ள வைடிப்பாக்கம், எவரெஸ்ட் புரம், மோரை, திருவள்ளுவர் நகர். மேல் பாதி, கீழ்பாதி பகுதி மக்க ளுக்கு தோல் அலர்ஜி, நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு அப்பகுதி மகளுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்ப தாக தெரிய வருகிறது.
சர்க்கரை ஆலை கழிவு நீர்
நெல்லிக்குப்பத்தை கடந்து கடலூர் கெடிலம் ஆறு வரை இந்த ஆலையின் கழிவுகள் கலப்பதால் கடலூர் பகுதியும், அதனை ஒட்டி உள்ள வயல்வெளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஜெய பாண்டியன் கூறும் போது, மாவட்ட நிர்வாக மும், மாசுக்கட்டுப்பாட்டு துறையும் ஆலை யிலிருந்து வெளியேறும் கழிவுகளை மறு சுழற்சி செய்யவும். சாம்பல் பறப்பதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார், அப்பகுதி மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சி.கோவிந்தராஜன் நெல்லிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், ஈஐடி பாரி தொழிற்சங்க தலைவராகவும் இருந்த போது நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதாரம், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஈஐடி பாரி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதனை அமல்படுத்த வேண்டும். நெல்லிக்குப்பம் இ ஐ டி பாரி ஆலையின் சமூகபொறுப்புநிதியை (சி.எஸ்.ஆர்) பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம், குடி தண்ணீர், அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
ஆலையில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது நெல்லிக்குப்பம் நகரம் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஈஐடி பாரி சக்கரை ஆலை நிர்வாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியரும், தொழிலாளர் நலத்துறையும் தலையிட்டு குறைந்தபட்ச கூலியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியறுத்தினார்.
எம்.ஜெயபாண்டியன்
சிபிஎம் பகுதி செயலாளர்