கேள்வி: ஏன் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் போட்டுள்ளது? அதில் திமுகவின் பங்கு என்ன?
பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22, 23, 24வது அகில இந்திய மாநாடுகள் நடை பெற்ற காலகட்டங்களில் ஒன்றிய ஆட்சியில் பாஜக இருந்து வருகிறது. இந்தக் கட்சி முழுக்க முழுக்க மதச்சார்புள்ள கொள்கையை யும் மதவெறி அரசியலையும் கடைப்பிடிக்கிறது. பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிப்ப தால், இந்த ஆட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்பது வரலாற்றுக் கட்டாயம். அந்த வகை யில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அத்தகைய சக்திகளுடன் இணைந்த பயணத்தையும் போராட்டத்தையும் சிபிஎம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரு கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகிறது. அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ள நிலையில், அந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் வேரூன்றிட முடியாது; கூடாது; எந்த வகையிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது. எனவே மதச்சார்பற்ற அணியை மேலும் வலுப்படுத்த வேண்டும். இதில் திமுகவுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது.
கேள்வி: அதிமுகவை கூட்டணி என்ற பெயரில் கைப்பற்றியுள்ள பாஜக, தமிழ்நாட்டில் தீவிரமாக ஊடுருவுகிறதே... அது எடுபடுமா?
பதில் : மத்தியில் தொடர்ச்சியாக பத்தாண்டு காலத்திற்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருப்பதால், அதிகார பலம், பண பலம், பல்வேறு பதவிகள் வழங்குதல், ஒன்றிய அரசின் திட்டங்களை சிலருக்கு வழங்கி ஆட்களை தங்கள் பக்கம் இழுத்தல் போன்ற பல்வேறு வாய்ப்புகளையும் தமிழ்நாட்டில் பயன்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக பரவலாக காலூன்றி யுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை. அது மேலும் வலு வடைந்துள்ளது. வளர்ந்து வரும் பாஜகவின் அரசியலுக்கு எதிரான போராட்டத்தையும் நடத்த வேண்டியுள்ளது. இம்மாதம் 22ஆம் தேதி மதுரையில் இந்துத்துவா சக்திகளின் ஏற்பாட்டில் நடைபெற இருப்பது முருக பக்தர்கள் மாநாடு அல்ல. அது ஓர் அரசியல் மாநாடு. 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக தனது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது. அதிமுக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போதும் சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி பெயர் மட்டுமே இருக்கும். பல மாநிலங்களில் பல மாநிலக் கட்சிகளை அழித்தது தான் பாஜகவின் உண்மை வரலாறு.
தமிழ்நாடு முழுவதும் 2025 ஜூன் 11 முதல் 20 வரை, 10 நாட்கள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நடைபயணம், இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இந்த முடிவை அமலாக்குவதில் கட்சி அணிகளும், ஆதரவாளர்களும் முழுமையாக ஈடுபட்டு கிளர்ச்சி பிரச்சாரத்தை வெற்றிப் பெற செய்ய வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பிரச்சாரம் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ‘தீக்கதிருக்கு’ சிறப்பு நேர்காணல் அளித்தார். அதன் முக்கியப் பகுதி :
கேள்வி: தமிழ்நாட்டில் பாமக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு என்ன?
அவை எந்த கூட்டணியில் சேரும்? பதில் : பாமகவை, பாஜக - அதிமுக அணியோடு சேர்ப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி போன்றோர் அனுப்பப்படுகின்றனர். அவரும் குருமூர்த்தியும் சிறந்த நண்பர்கள் என்று சொல்லி, அதன் அடிப்படையில் சந்தித்தோம் என்று கூறிக்கொள்வதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். அப்பா, மகன் என்று பிரிந்து கட்சி உடைந்து சிதறிவிட்டால் அது கூட்டணிக்கு எந்த வகையிலும் பயன்படாது. அதில் எந்த இலாபமும் கிடையாது. தந்தையும் மகனும் ஒற்றுமையாக ஒரே பாமக-வாக பாஜக அணியில் சேர வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன்தான் குருமூர்த்தி, சைதை துரைசாமி போன்றோர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை பொறுத்தவரை, எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறது. எந்தக் கதவு வழியாக யார் வந்தாலும் பயன்படுத்திக்கொள்வது என்ற நிலைப்பாடு மட்டுமல்ல, அந்த கதவு வழியாக வெளியில் செல்லலாம் என்ற நிலை யிலும்- அனைத்து கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது அந்த கட்சியின் தலைமை. இதன் மூலமாக இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசுவது என்கிற அணுகுமுறையை தந்திரமாக கையாண்டு வருகிறது. இறுதியாக, இந்த கட்சியும் அதிமுக - பாஜக கூட்டணியோடு செல்வதற்கான வாய்ப்புதான் அதிகம் இருக்கிறது. அப்படி போனாலும் அது ஒரு வலுவான அணியாக இருக்காது.
கேள்வி: பாஜக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளான தமாகா, புதிய தமிழகம், ஜான்பாண்டியன் கட்சி ஆகியவற்றின் பங்கு என்ன? '
பதில்: தமாகா முழுக்க முழுக்க பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் கட்சி. தமிழ்நாட்டில் எந்த வெகுஜன ஆதரவும் இல்லாத நிலையில், பாஜகவினர் ஆதரவில் மட்டுமே நிலைத்திருக்கும் கட்சி. புதிய தமிழகம், பட்டியலின மக்களைப் பின்னணியாகக் கொண்ட கட்சி, பாஜக வின் கருத்தியல் பரப்புரைக்காக பயன்படுத்தப் படும் கட்சியாக மாற்றப்பட்டு விட்டது. ஜான்பாண்டியன் கட்சி, பாஜகவின் அரசியலை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களில் பாஜக தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு இல்லாத கட்சிகள். இதனால் அதிமுக -பாஜக கூட்டணி என்பது உண்மையில் பாஜகவின் தலைமையிலான கூட்டணியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. பாஜகவின் உத்தி என்பது சிறிய சிறிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து, பெரிய கட்சிகளை உடைத்து, தங்கள் ஆதிக்கத்தை நிறுவும் நோக்கம் கொண்டது. பல மாநிலக் கட்சிகளை அழித்தது அல்லது பலவீனப்படுத்தி யது தான் பாஜகவின் உண்மை வரலாறு. அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சியை நிறுவுவதே அவர்களது இறுதி லட்சியம். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டுக்குள் பாஜகவை மேலும் வளர விடாமல் பார்த்துக் கொள்வது ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது.
கேள்வி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி பலமாக உள்ளது; அதே வேளையில் மேலும் வலுவடைய என்ன செய்ய வேண்டும்?
திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவ சியத்தை வலியுறுத்துகிறேன். தற்போதும் நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்றுவதன் மிக அதிக அவசியம் உள்ளது. அதற்கான முறையில் திமுகவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழ்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அது நிச்சயமாக நல்லதாக இருக்காது. ஆகவே, விட்டுக்கொடுப்பது திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மான மாகும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்த லின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை திமுக அரசாங்கம் மேலும் நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஆதரவான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அதிமுக - பாஜக கூட்டணியை முழுமை யாக முறியடித்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற அணி அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும்.