articles

img

மக்களை ஏமாற்றுவது பிரதமர் மோடி தான்!

மக்களை ஏமாற்றுவது பிரதமர் மோடி தான்!

சென்னை, மார்ச் 30 - பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தில், மக்களை ஏமாற்றுவது பிரதமர் நரேந்திர மோடி தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். ‘பெட்ரோல், டீசல், எரிவாயு குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று பிர தமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டி ருப்பதைக் குறிப்பிட்டு, பெ. சண்முகம் தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதி லளித்துள்ளார். “மிஸ்டர் மோடி அவர்களே! உண்மையை ‘வதந்தி’ என்று  கூறி நீங்கள் தான் மக்களை ஏமாற்றுகிறீர்கள். வந்து பாருங்கள்! பெட்ரோல் பங்குகளில் வரிசை கட்டி நிற்கும் வண்டிகளை!! எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய முடியாமல் மக்கள் படும் அவஸ்தைகளை!!! சிலிண்டர் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான ஹோட்டல்கள் மூடப்பட்டு இருப்பதை!!!! முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயற்சிக்க வேண்டாம்” என்று பெ. சண்முகம் சாடியுள்ளார்.