articles

img

பூமியில் மிக மோசமான நகரமானது காசா - கே.பி.பெருமாள்

பூமியில் மிக மோசமான நகரமானது காசா!

காசாவில் ஒரு இனப்படுகொலை நடந்து வருகிறது. கடந்த 18 மாதங்களில் இஸ்ரேல், தொடர்ச்சி யான இராணுவத் தாக்குதல்களால் குறைந்தது காசாவில் 55 ஆயிரம் பேரை கொன்றுள்ளது. இறப்பு  எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும்  சில பதிவுகள் தெரிவிக்கின்றன. காசாவில் 20 லட்சத் திற்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானோர் பல முறை வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் போரில் - பட்டினியை (உணவு கிடைக்கா மை) ஆயுதமாக பயன்படுத்துகின்றது இஸ்ரேல்.  காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 2023 அக்டோபர் 7இல் தொடங்கியது.  காசாவில் உள்ள 90 சதவீத வீடுகளை அழித்துவிட்டது அல்லது சேதப் படுத்தியுள்ளது. மேலும் உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து மற்றும் பிற உயிர்காக்கும் உதவிகள் காசாவிற்குள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளது. மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்து கொண்டி ருக்கிறார்கள். மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளது. அகதிகள் முகாம்களில் உள்ள வீடுகளை இஸ்ரேல் இராணுவம் இடிக்கும் வேலைகளை செய்கிறது. கிராமங்களில் மக்களை வசிக்க விடாமல் செய்து வருகிறது. இதனால் மேற்கு கரையில் ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர். 

முற்றுகையின் கீழ் காசா காசா மக்கள் இஸ்ரேல் விதித்த முற்றுகையின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். காசாவில் வாழும் மக்களின் பயணம், வர்த்தகம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. இத னால் சொல்லொண்ணா துயரங்களையும் இழப்புக ளையும் காசா மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இப்போது விரிவாக்கப்பட்ட முற்றுகை தொடங்கப் பட்டுள்ளது. இதனால் முன்பை விட கூடுதலான விளை வுகளை, கொடூரங்களை இழப்புகளை காசா மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஏனெனில்,  G    காசாவில் 80 சதவீதம் மக்கள் உயிர்வாழ்வதற்கு சர்வதேச உதவியை நம்பியுள்ளனர்.  G    மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமா னோர் வேலையில்லாமல் உள்ளனர்.  G    மருத்துவமனைகளில் தேவையான பொருட்கள் மற்றும் மருந்துகளில் 40 சதவீதம் வரை தொடர்ந்து தீர்ந்து போயுள்ளன. G    காசாவில் உள்ள தண்ணீரில் தோராயமாக 96 சத வீதம் குடிக்க முடியாதது.  G    மின்சாரம் அவ்வப்போது மட்டுமே கிடைக்கிறது.  மேலும் இந்த முற்றுகை வன்முறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவம் காசாவுக்குள் ஊடுருவுவது வாரந்தோறும் நிகழ்கி றது. இஸ்ரேலிய படைகள் தினமும் காசாவுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றன. காசா மீதான குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நிகழ்கின்றன.  புதிதாக பிறந்த குழந்தைகள் காசாவில் கொடிய போருக்கு மத்தியில் புதிதாக பிறந்த குழந்தைகளும், இன்னும் கருப்பையில் உள்ள சிசுக்களும் கடுமையான சூழ்நிலைகளால் மோச மாகப் பாதிக்கப்படுகின்றனர். கடுமையான உணவுப் பற்றாக்குறையினால் பத்து புதிய குழந்தைகளில் ஒன்று எடைகுறைவாகவோ அல்லது முன்கூட்டியே பிறப்பதாகவோ ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. கருச்சிதைவுகள், இறந்த பிறப்புகள் மற்றும் பிறவி குறைபாடுகளும் அதிகரித்துள்ளது. காசாவில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு “அம்னோடிக் திரவம்” போதுமான அளவில் இருப்பதில்லை.  இதனால் குழந்தைகள் முழு வளர்ச்சி அடைய முடியவில்லை என்றும் இந்த குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சோர்வு காரணமாக ஏற்படு வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக காசாவில் பெண்கள் தங்கள் கூடங்களிலே மருத்துவ உதவியின்றி பிரசவிக்க வேண்டி யுள்ளது. காசாவில் இப்போது மருத்துவமனைக்குச் சென்று பிரசவிக்கும் பெண்களை மூன்று அல்லது நான்கு மணிநேரத்தில் வீட்டிற்கு அனுப்பிவிடு கிறார்கள். அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்த பெண்களை 24 நேரத்திற்கு பின் வெளியே அனுப்பி விடுகிறார்கள். 32 வாரத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தை களைக் கூட மருத்துவமனையில் வைத்து சிகிச்சை  அளிப்பது கிடையாது. அவர்களையும் வெளியேற்றி யிருக்கிறார்கள்.  கடந்த 20 மாத காலப்போரில் இஸ்ரேலிய இராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனைகளை பலமுறை தாக்கியுள்ளது. அடிப்படை சுகாதார பராமரிப்பு இப்போது காசாவில் மிகவும் கடின மாக இருப்பதால் ஐநாவின் மதிப்பீட்டின் படி 55 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள், வழக்கமான பிரச வத்திற்கு முந்தைய பரிசோதனைகளை பெற முடிய வில்லை. காசாவில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் அவர்களின் பிறக்காத குழந்தைகள் சரியாக கண்கா ணிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல; அவர்க ளுக்கே போதுமான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை. இதனால் குழந்தைகள் எடைகுறைவாகவும் அல்லது பிற சிக்கல்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கவலைப்படுகிறார்கள். மேலும் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் கொடுப்பது அல்லது பாதுகாப்பான பால் கலவையை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்று அவர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர் என்று நாசர் மருத்துவமனையின் குழந்தை மற்றும் மகப்பேறு பராமரிப்புத் துறை தலைவர் டாக்டர் அஹ்மத் அல்ஃபர்ரா தெரிவிக்கிறார். 

எதிர்ப்பு இயக்கங்கள்

காசாவின் சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளி யிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த 600 நாட்களில் 50,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது மொத்த மக்களில் 44 பேரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒரு நாளைக்கு 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள், காயமடைந்தவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் மற்றும் உலகிலேயே அதிக தனிநபர் குழந்தை மாற்றுத் திறனாளிகள் காசா நகரில் உள்ளனர் என்று மற்றொரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.  இந்த இனப்படுகொலை சம்பவங்களைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்களும், பேர ணிகளும், கண்டனக் குரல்களும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள அதிகமான நாடுகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவுஜீவிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் காசாவில் உள்ள மக்களை மறுகுடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் கோரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா- இஸ்ரேல் நாடுகளின் நரவேட்டைக்கு எதிராக இந்தியா உட்பட உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனாலும் அமெரிக்காவும், இஸ்ரேலும் காசாவை குறிவைத்து தாக்குகிற போக்கு தொடர்கிறது. இதனை  நிறுத்த உலக அளவில் இடதுசாரிகள், ஜனநாயக எண்ணம் கொண்ட அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதியினரும் முன்பை விட வேகமாக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை நமக்கு தெரியப்படுத்துகிறது. எனவே, நாம் ஒன்றிணைவோம். அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டணியை உலக மக்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்வோம். கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)