articles

img

தனுஷ்-விஜயஸ்ரீ வழக்கும் ஏடிஜிபி அதிகார துஷ்பிரயோக சர்ச்சையும் - கே. பாலகிருஷ்ணன்

தனுஷ்-விஜயஸ்ரீ வழக்கும் ஏடிஜிபி அதிகார துஷ்பிரயோக சர்ச்சையும்

சிறப்புச் சட்டம் அவசியம் என்பதற்கு இது உதாரணம்!

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு பகுதியைச் சார்ந்த தனுஷ், விஜயஸ்ரீ ஆகிய காதலர்கள் பதிவுத் திருமணம் செய்து  கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை பிரிக்க பெண் குடும்பத்தாரும், போலீஸ் அதிகாரி களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் நடத்திய ஆள்கடத்தல் சம்பவம் நடந்தது. இதன் விளைவாக: - சென்னை உயர்நீதிமன்ற தலையீடு - ஏடிஜிபி ஜெயராம் கைது செய்ய உத்தரவு - உச்சநீதிமன்ற தலையீடு - உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து - ஏடிஜிபி சஸ்பென்சன் ரத்து செய்ய உத்தரவு - தமிழ்நாடு அரசு ஏடிஜிபி சஸ்பென்சன் உத்தரவு நீடிக்கும் என அறிவிப்பு - வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் -என பரபரப்பு நிறைந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

திருமணம் மற்றும் எதிர்ப்பு

தனுஷ்-விஜயஸ்ரீ இருவரும் காதலித்து மே மாதம் 12ந் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை ஏற்க மறுத்த பெண்ணின் தகப்பனார் தேனி மாவட்டத்தைச் சார்ந்த தொழில் அதிபர் வனராஜா என்பவர் இவர்களைப் பிரிக்க சட்டவிரோத ஆள்கடத்தல், கூலிப்படைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட காரியங்களில் மேற்கொண்டுள்ளனர். இவருக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும், காவல்துறையினரும் கூட களமிறங்கியுள்ளனர்.

விஜயஸ்ரீயின் உறுதி ஆனால்,

மணப்பெண் விஜயஸ்ரீ இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அஞ்சாமல் உறுதியாக தான் திருமணம் செய்து கொண்ட கணவனோடு தான் வாழ்வேன் என உறுதியாக தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியதாகும். சட்டவிரோத நடவடிக்கைகள் ஆனாலும், தொழில் அதிபர் வனராஜா என்ன விலை கொடுத்தேனும் மணப்பெண்ணை கடத்தி தம்பதிகளை பிரித்து விட சதித்திட்டத்தில் இறங்கியுள்ளது பல பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஐஜி அஸ்ரா கார்க்கின் தலையீடு நிலைமை மோசமடையும் போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாக உள்ள திரு அஸ்ரா கார்க் காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும், அவ்வாறு ஈடுபட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டுமென அழுத்தமாக உத்தரவிட்ட தன் விளைவாக மாவட்ட காவல்துறை அதிகாரி கள் அமைதியாகியுள்ளனர். ஏடிஜிபி ஜெயராமின் பங்கு இதன் பின்னரே வனராஜாவுக்கு ஆதரவாக ஆயுதப்படை ஏடிஜிபி மற்றும் சில அரசியல் பிரமுக ர்களும் களமிறங்கியுள்ளனர். தனுஷினுடைய வீட்டிற்கு சென்று மிரட்டி தனுஷினுடைய தம்பி யை காரில் கடத்தியுள்ளனர். இந்த காரில் பெண்ணின் தகப்பனாரும், கூலிப்படையினரும் இருந்துள்ளது ஆதாரமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ கார் பயன்பாடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த கார் ஏடிஜிபி ஜெயராமுடைய அதிகாரப்பூர்வமான கார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான பணிகளுக்கு ஏடிஜிபி ஜெயராம் உடந்தையாக இருப்பதும் இத்தகைய கடத்தலுக்கு அவரது அலுவலக காரை பயன்படுத்துவதும் இது வரையில் தமிழகம் சந்திக்காத பிரச்சனையாகும். உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கார் கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் தெரிவித்த பின்னணி யில் உயர்நீதிமன்ற நீதிபதி ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது டன் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் நியாயம் இளம் தம்பதிகளை பிரிக்க சட்டவிரோத மாகவும், சமூக விரோதிகள் துணையோடு காரியங்கள் நடத்தப்படுவது நீதிமன்றத்தின் முன் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு நேர்மையானதே. காவல்துறையின் பாரபட்சம் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்த காவல்துறை அவரை சிறைக்கு அனுப்பவில்லை. மாறாக, காவல்நிலையத்திலேயே பிணையில் விடு வித்துள்ளதானது உயர்நீதிமன்ற உத்தரவினை காவல்துறை எந்த அளவுக்கு மதித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். சாதாரண குற்றங்களுக்கான அணுகுமுறை சாதாரண குற்றங்களுக்கும், ஜனநாயக உரிமை அடிப்படையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கும் போது அவ்வியக்கங் களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது, வீட்டுக் காவலில் வைப்பது, வழக்குப்போட்டு அலைக் கழிப்பது என்றெல்லாம் காவல்துறை செயல்படு வது வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்தவரை காவல்நிலையத்திலேயே பிணையில் விடுவதானது காவல்துறையின் பார பட்சமான செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. காவல்துறையில் உள்ளவர்கள் எத்த கைய குற்றங்களிலும் ஈடுபடுவதற்கு பச்சைக் கொடி காட்டுவதாக இச்சம்பவம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் இந்நிலையில் ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதி மன்றத்தில் மனு தொடுத்து தன் மீதான நடவடிக்கை களை ரத்து செய்ய கோரியுள்ளார். பல முக்கியத்து வம் வாய்ந்த பிரச்சனைகளில் அவசர வழக்காக விசாரிக்க மறுக்கும் உச்சநீதிமன்றம் இவரது மனுவை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற அணுகுமுறை விசாரணையின் போது ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீதான தற்காலிக பணியிடை நீக்க உத்தரவினை ரத்து செய்ய அரசின் கருத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். தமிழக அரசின் நிலைப்பாடு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில் ஏடிஜிபி ஜெயராம் சிறுவனை கடத்திய வழக்கில் ஆதாரங்கள் உள்ளதால் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் மீண்டும் இந்த வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற முடியுமா என தமிழக அரசு தெரிவிக்க வேண்டுமென மீண்டும் வழக்கை ஒத்தி வைத்தனர். மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது நீதிபதிகளின் உத்தரவுக்கு இணங்க சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றலாம் என தெரிவித்த அடிப்படையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சட்டத்தின் முன் சமத்துவம் -கேள்விக்குறி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சாதாரண குடிமகனுக்கு இத்தகைய விசாரணை முறையினை உச்சநீதிமன்றம் கடைபிடிக்குமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. காதல் திருமணங்களுக்கான பாதுகாப்பு மேலும், நாடு முழுவதும் காதல் திருமணங்க ளை மேற்கொள்ளும் தம்பதிகள் அச்சுறுத்தப்படு வதும், கொடூரமாக படுகொலை செய்வதும், தப்பிப்பிழைத்தவர்கள் அஞ்சி, அஞ்சி வாழும் சூழ்நிலையில் இத்தகைய காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், ஆணவக் கொலைகள் தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றுவதற்கும் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. ஆனாலும், காதல் தம்பதிகளின் பாது காப்பற்ற நிலை தொடர்கதையாகவே இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற முன்னுதாரணங்கள் உதாரணமாக, லதாசிங் எதிர் உத்தரப்பிரதேச அரசு, ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட இதுபோன்ற பல வழக்குகளில் சாதி மறுப்பு திருமண தம்பதியினரை அரசு பாதுகாக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பை அவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் உடனடியாக குற்றவழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முரண்பாடான அணுகுமுறை இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்புகளுக்கு நேர்மாறான நிலையினை மேற்கொண்டுள்ளது விநோதமாக உள்ளது. இத்தீர்ப்பு எதிர்காலத்தில் இத்தகைய கொடும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக அமைந்துவிடுமோ என்கிற கவலை ஏற்படுகிறது. அரசியல் கட்சிகளின் பங்கு கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவ லாக பகிரப்படும் மேற்கண்ட வழக்கு விசாரணை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உறுதியாக தலையிட்டு செயல்பட்டுள்ளது. இத்தகைய மிக முக்கியமான பிரச்சனையில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கருத்து சொல்லாமல் கடந்து போவது சட்டவிரோத, சமூக விரோத சக்திகளுக்கே ஆதரவாக அமையும் என்பதை கவனப்படுத்துகிறோம்.  தமிழக அரசின் பாராட்டுக்குரிய நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என அறிவித்த தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் இதுபோன்றே இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் தம்பதியினரை மிரட்டுவது, அச்சுறுத்துவது, ஆள்கடத்தலில் ஈடுபடுவது, கூலிப்படையை ஏவுவது உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் முழுமையான விசார ணை நடைபெறவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சம ரசமற்ற நடவடிக்கையை மேற்கொண்டு குற்ற வாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான உறுதியான நிலைபாட்டை அரசு மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். பாதிக்கப்பட்டுள்ள காதல் தம்பதியர், மற்றும் கடத்தப்பட்ட சிறுவன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பினை அரசு உறுதி செய்திட வேண்டும். இவ்வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடாமல் ஜனநாயகம் எண்ணம் கொண்ட அனைவரும் குரலெழுப்புவது இன்றியமையாத கடமையாகும்.