articles

பாதுகாப்புத் துறை தனியார்மயம் : மோடி அரசு தீவிரம் - பி.குஹதகுர்தா

2014-இல் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மத்திய ஆட்சி க்கு வந்தவுடன், அதன் ஆரம்பகால மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்று, பாதுகாப்புத் துறையின் தனியார்மயமாக்கலைத் தொடங்குவதாக இருந்தது. ஒரு குறிப்பிடத்தக்க தொடக்கப் புள்ளியாக, ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி அரசு நிறுவனங்கள் (DPSUs) தயாரிக்கும் பொருட்க ளின் மீது கலால் வரி விதிப்பதாக இருந்தது. வரலாற்று ரீதியாக, இந்த நிறுவனங்கள் இத்தகைய வரிகளிலி ருந்து விலக்கு பெற்றிருந்தன. ஏனெனில் இந்த பரி வர்த்தனைகளில் உற்பத்தி செய்பவரும் நுகர்வோ ரும் பாதுகாப்பு அமைச்சகமே. இதனால், அரசாங் கத்தின் வரவு, செலவில் எந்த இடையூறும் ஏற்பட வில்லை. எனினும், புதிய அரசாங்கம் வாதிட்டது:  பாதுகாப்பு உற்பத்தித் துறையில் தனியார் தொழில் முனைவோரை ஈர்க்க, எல்லா அம்சங்களிலும் “சம நிலை” ஏற்படுத்துவது அவசியம் என்று.

கொள்கை மாற்றங்கள் மற்றும்  புதிய வகைப்பாடுகள்

முதல் பெரிய கொள்கை மாற்றம், பாதுகாப்பு கொள்முதல் மற்றும் வாங்குதல் கொள்கை மறுசீர மைப்பு என்ற வடிவில் வந்தது. இதன் அறிவிக்கப்பட்ட நோக்கம் உற்பத்தி, எம்ஆர்ஓ (MRO) (பராமரிப்பு, பழுது மற்றும் மேம்படுத்துதல்), ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பிற பகுதிகளில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிப்பதாகும். தனியார்மயத்தை மேலும் எளிதாக்க, அரசாங்கம் சோதனை மற்றும் பரிசோதனை செயல்முறைகளை ‘எளிமை’ப்படுத்தியது. ‘தரம்’ மற்றும் ‘செயல்திறன்’ போன்ற முக்கிய தரநிலைகளின் வரையறைகள் GSQR (பொது ஊழியர் தரத் தேவைகள்) மற்றும் JSQR (கூட்டு சேவைகள் தரத் தேவைகள்) போன்ற சொற்களின் கீழ் மறுவரையறை செய்யப்பட்டன; இது முன்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்த பிரிவுகளில் தனி யார் நுழைவை மிகவும் எளிதாக்கியது.

ஆயுத தொழிற்சாலைகளின்  மீதான கட்டுப்பாடுகள்

அதே நேரத்தில், பொதுத்துறை ஆயுத தொழிற் சாலைகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, அவற்றின் செயல்பாடுகளை தனியார் துறையால் சாதாரணமாக செய்ய முடியாத மிக முக்கிய உற்பத்தி பணிகளுக்குள் அரசு மட்டுப்படுத்தியது - இதன் மூலம் அவற்றின் எல்லையை குறைத்து, அந்த இடத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிக்க வழி வகுத்தது. பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை (DPP) மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குதல் செயல் முறை (DAP) ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ததன் மூலம் பல பெரிய நடவடிக்கைகள் தொடர்ந்தன. இது மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று. ராணுவ -போர் முக்கியத்துவம் வாய்ந்த கனரக தள வாடங்கள் மற்றும் ஆயுதங்களை தனியார் நிறுவனங்க ளிடம் வாங்கவும் அல்லது, கூட்டாக உற்பத்தி செய்ய லாம் என விதிகள் திருத்தப்பட்டன. இதன்படி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள்; ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச போர் வாகனங்கள் போன்றவற்றின் உற்பத்தி, கொள்முதல் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு (AIDEF), இந்த தீவிரமான தனியார்மயக் கொள்கை யின் விளைவுகள் குறித்து கடுமையான கவலை களை எழுப்பியுள்ளது. பொதுத் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைசார் நிபுணர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், பாதுகாப்புத் துறையில் தனியார்மயத்தை நோக்கிய மோடி அர சாங்கத்தின் தொடர்ச்சியான உந்துதல், இந்தியாவின் பாதுகாப்புத்துறை உற்பத்தி சூழலின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் சுயாட்சி மீது கடும் கேள்விக் குறியை முன்வைத்துள்ளது. 

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி- ஜூன்-8)