articles

பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசு!

இந்தியா முழுவதும் சீரற்ற முறையில் கொட்டும் மழை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை சவால் நிறைந்ததாக மாற்றிவிட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலையேற்றம் கடந்த மாதம் மிக வேகமாக பதிவாகியது. ஐந்து மாதமாக இறங்கு முகமாக இருந்து வந்தது, கடந்த மே மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. 28 புள்ளிகள் அதிகரித்து 4. 08 லிருந்து 5.08 ஆக உயர்ந்தது.எதிர்பார்த்தது போலவே உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான் இதற்கு காரணம். 

நுகர்வோர் உணவு விலை குறியீடு தரவுகளின் அடிப்படையில் உணவு விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 67 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதாவது 9.36 % ஆக உயர்ந்தது கவலை அளிக்கிறது.மேலும் கடந்த 11 மாதங்களில் அது உயர்ந்து கொண்டே சென்றது.இது  மிக மோசமான விலையேற்றம் .உணவு விலை உயர்வதை துல்லியமாக கணிக்க முடியாத தன்மையைத்தான்( 3. 17 சதவீதம் அது உயர்ந்த போது)பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் (Monitory Policy Experts) வட்டி விகிதங்களை மாற்ற முடியாமல் போனதற்கு காரணமாக கூறி தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்திய பொருளாதாரம் உணவுப் பொருட்கள் விலையின் தாறுமாறான தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கடந்த மாதம் நிதி குழு கூட்டத்தில் துணை ஆளுநர் மைக்கேல் தேவப்பிரதா பத்ரா குறிப்பிட்டார்.இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து விழிப்போடு இருக்கவும் பணவீக்கத்தின் பிற கூறுகளையும் உன்னிப்பாக கவனித்து செயலாற்றினால் தான் முடியும்.

கூரையைப் பிய்த்துச் சென்ற விலை

நுகர்வோர் விலை குறியீட்டின் (சர்க்கரை, சுவையூட்டிகள்  தவிர) எட்டு  துணை பிரிவுகள் கடந்த எட்டு மாதமாக தொடர்ந்து விலை உயர்வை பதிவு செய்து வருவதை உணவு விலை தரவுகள் காட்டுகின்றன. காய்கறிகளின் விலை உயர்வு தான் மிக அதிகம்.கடந்த 11 மாதங்களில் 11.2% லிருந்து  29.3% எகிறி உள்ளது. குறிப்பாக  பெரும்பான்மை மக்கள் மிகவும் அதிகமாக நுகரும் உருளை, வெங்காயம், தக்காளியின் விலை கூரையை பிய்த்துச்  சென்றது. அவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது முறையே 56.7%,58.5 %,மற்றும் 26.4 % என்ற அளவிற்கு உயர்ந்து நுகர்வோரை வாட்டியது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்த தரவுகள் ஆறுதலை தரவில்லை.நுகர்வோர் விவகாரங்கள் துறையின் (Consumer Affairs  Price Monitoring Division) விலை கண்காணிப்பு பிரிவின் இணைய தளம் உருளை, வெங்காயம் ஆகியவற்றின் விலை ஜூலை 15 வரை தாறுமாறாக உயர்ந்து வந்ததை  கண்ணில் நீர் வரவழைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இரண்டின் விலை ஏற்றமும் கடந்த ஆண்டை விட முறையே 56 % மற்றும் 67% கூடுதலாக இருந்தது. தக்காளியின் விலை 12 மாதங்களுடன் ஒப்பிடும்பொழுது 43 சதவீதம் குறைந்தாலும் கடந்த ஜூன் ‘23  அளவோடு ஒப்பிடுகையில் 76 % அதிகரித்துள்ளது.

உணவுத் தொகுப்பின் மிகப்பெரிய அங்கமான தானியங்கள் மற்றும் அரிசி, கோதுமையின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 10% மற்றும் 6 % அதிகரித்துள்ளது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானியல் ஆய்வுத்துறை ஜூலை 14 ஆம் தேதி நிலவரப்படி  ஜூன் 1 முதல் நாடு தழுவிய அளவில் பதிவான மழைப்பொழிவில்    2 சதவீதம் பற்றாக்குறை தான் என சுட்டிக்காட்டி உள்ளது. 36 வானிலை துணைப் பிரிவுகளில் 11 இல்  பற்றாக்குறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் போன்ற உணவு உற்பத்தி பகுதிகளில் மழை பற்றாக்குறை ஆக இருப்பது பண வீக்கத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால்  கொள்கை வகுப்பாளர்கள் அதாவது மோடி கூட்டணி அரசு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

தி இந்து தலையங்கம் 17/7/24
தமிழில்: கடலூர் சுகுமாரன்