ஜோஹ்ரம் மம்தானி: அமெரிக்காவின் புதிய அரசியல் ‘அடையாளம்’
அமெரிக்காவில் பலரது தூக்கத்தைக் கெடுத்துள்ளார் ஜோஹ்ரம் மம்தானி. ஜோஹ்ரம் மம்தானி என்ப வரை “100 விழுக்காடு கம்யூனிஸ்ட் பைத்தியக் காரன்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வசை பாடியதிலிருந்தே மம்தானி பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. மம்தானி மீது டிரம்ப் இந்த அளவுக்குப் பாயவேண்டியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் அவர், நிற வெறிக்கு எதிராகப் பேசுகிறார். உழைக்கும் மக்க ளின் உரிமையை வலியுறுத்துகிறார். வலதுசாரி அரசியலை எதிர்க்கிறார். எனவேதான் மம்தானி போன்றோர் மேயராகப் போவது அபத்தம் என்று புலம்பும் நிலைக்கு வந்திருக்கிறார் டிரம்ப்.
நியூயார்க் மேயர் தேர்தலில் எதிர்பாராத வெற்றி
நியூயார்க் மாநகர மேயர் தேர்தல் நவம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனநாய கக் கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று கட்சிக்குள் விவாதங்கள் எழுந்த நிலையில், அக்கட்சி சார்பில் போட்டியிட நியூயார்க் நகர மக்க ளுக்குப் பெரிதும் அறிமுகமில்லாத ஜோஹ்ரம் மம்தானி போட்டியில் குதித்தார். முன்னாள் கவர்னர் ஆண்ட்ரிவ் கியூமோவும் போட்டியில் இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகை யில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தலைவரான ஜோஹ்ரம் மம்தானி வேட்பாளர் தேர்வில் வெற்றிபெற்றார். நகர மக்களிடமும் மகத்தான ஆதரவைப் பெற்று வருகிறார்.
பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணி
யார் இந்த ஜோஹ்ரம் மம்தானி? இவரது தாயார் மீரா நாயர், ஒடிசாவைச் சேர்ந்தவர்; பிரபல திரைப்பட இயக்குநர். ‘சலாம் பாம்பே’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். மம்தானி தந்தை மஹ்மூத் மம்தானி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம். இவர் நியூயார்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட இந்திய-உகாண்டா கல்வி யாளர், எழுத்தாளர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல், அரசியல் அறிவியல் மற்றும் ஆப்பிரிக்கா குறித்த ஆய்வு களுக்கான பேராசிரியராகவும் உள்ளார். 1965-இல் அமெரிக்காவில் மனித உரிமை களை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்ற வெளிநாட்டு மாணவர். அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த ஜோஹ்ரம் மம்தானி ஒரு வர்த்தகர். 2021-ல் நியூயார்க் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின் தற்போது மேயர் தேர்தலில் போட்டியிட விரும்பி ஜனநாயகக் கட்சி சார்பில் புதுமையான பிரச்சாரங்களை முன்னெ டுத்தார். நகர மக்களின் பிரச்சனைகளைப் பேசினார். நிறவெறிக்கு எதிராகத் தமது குரல் எப்போதும் ஒலிக்கும் என்றார். நியூயார்க் நகரம் அனைவருக்குமானது என்றார். இதுவே இவரை எல்லோரும் எதிர்க்கக் காரணமானது.
சோசலிஸ்ட் அடையாளம் மற்றும் அரசியல் நிலைப்பாடு
ஜோஹ்ரம் மம்தானியை மற்றவர்கள் கம்யூ னிஸ்ட் என்று அழைத்தாலும், அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல. ஏழைகளின் துயரத்தைத் துடைக்க ஜனநாயகக் கட்சி முன்வரவேண்டும் என்கிறார். ஈரான் நாட்டிற்குள் நுழைந்து அமெ ரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலை இறை யாண்மை மிக்க நாட்டின் மீதான தாக்குதல் என்று கடுமையாகச் சாடினார். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்கிறார். இப்படி இவர் பேசுவதால்தான் இவரைக் கம்யூ னிஸ்ட் என்று குறிப்பிட்டு, டொனால்டு டிரம்ப்பும் இந்தியாவில் உள்ள கங்கனா ரனாவத் போன்ற அரைவேக்காடுகளும் திட்டித் தீர்த்து வரு கின்றனர்.
மோடி மீதான கடுமையான விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது, “அவரை ஜனநாயகக் கட்சி வரவேற்கக் கூடாது, ஏனென்றால் அவரது கைகள் ரத்தக்கறை படிந்தவை. குஜராத் வன்முறையில் ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தவர்” என்று மம்தானி கடுமை யாகக் கூறியிருந்தார்.
வரலாற்று முக்கியத்துவம்
மேயர் தேர்தலில் போட்டியிடும் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சா வளி வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜோஹ்ரம் மம்தானி தன்னை சோசலிஸ்ட் என்று அறிவித்துக்கொண்டவர். அவருக்கு அமெ ரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி ஆதரவு அளிக் கிறது. கம்யூனிஸ்டுகளும் இடதுசாரிகளும் தார்மீக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஜோஹ்ரம் மம்தானி வெற்றிபெற்றால், அவர் நியூ யார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக இருப்பார். மேலும் அவரது போட்டியாளரான முன்னாள் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ ஏற்க னவே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்.
இந்திய ஊடகங்களின் கள்ள மவுனம்
இப்படி இந்தியாவுடன் தொடர்புடைய நியூ யார்க் நகர மேயர் தேர்தல் குறித்த செய்தியை வழக்கம்போல் ‘கோடி மீடியாக்கள்’ கண்டு கொள்ளவில்லை. இவரது வெற்றிச் செய்தியைக் கேட்டு இந்திய ஊடகங்கள் தாமதமாகத்தான் விழித்துக்கொண்டன. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் இந்துத் துவ அரசியல் அதிகாரம் செலுத்துவதால், பிரிட்டன் முன்னாள் உள்துறை செயலரும் கன் சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவருமான பிரிதி படேல் மற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் போன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்களை மட்டும் இந்திய ஊடகங்கள் கொண்டா டின. ஆனால் இந்தியாவின் முன்னணி ஊட கங்கள் ஒரு பொழுதுபோக்கிற்குக் கூட மம்தானி யின்வெற்றியைப் பதிவு செய்யவில்லை. வலது சாரிகளுக்கு எதிரானவர் என்பதால் இந்திய ஊடகங்கள் தொடர்ந்து கள்ள மவுனம் காத்து வருகின்றன.
நியூயார்க்கின் பிரம்மாண்டம்
நியூயார்க் நகரம் மிகப்பெரியது. கிட்டத்தட்ட 85 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நகரம் அமெரிக்காவின் 12 மாநிலங்களைவிடப் பெரி யது. அதன் பட்ஜெட் 110 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம். இது தில்லி மாநிலத்தை விடப் பத்து மடங்கு அதிகம். உலகின் மிக முக்கிய மான நிதி மற்றும் படைப்பாற்றல் நகரங்களில் ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தீவிரமான சோசலிச ஆதரவாளரான மம்தானி ஏற்க உள்ளார் என்பதே பெரிய விஷயம்தான்.
தெற்காசியர்களின் ஒற்றுமை
வளைகுடா நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற மேற்கத்திய நாடுகளி லும் வசிக்கும் இந்தியர்களும் பாகிஸ்தானியர்க ளும் இப்தார் விருந்தில் பங்கேற்கும்போதும் மற்ற நிகழ்வுகளில் சந்திக்கும்போதும், சகோதர பாசத்தோடு பழகுகிறார்கள். உணவு, இசை மற்றும் திரைப்படங்களுக்காக இம்மக்கள் ஒன்றுகூடினாலும், அவர்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறார்கள். அது நாங்கள் தெற்காசியர்கள். வெளிநாடுகளில் உள்ள தெற்காசியர்கள் பெரும்பாலும் பிரிந்து நிற்பதைவிட சந்தித்து ஒன்றுபடுவதற்கான இடங்களைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள். அதற்கான விதையைத் தூவியவர்களில் மம்தானியின் தந்தை மஹ்மூத் மம்தானி மற்றும் அவரது தாயார் மீரா நாயர் போன்றோருக்குப் பெரும் பங்குண்டு.
இருதரப்பு எதிர்வினை
அமெரிக்க அரசியலில் இந்திய மற்றும் தெற்காசிய அமெரிக்கர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அமைப்பான இந்தியா இம்பாக்ட் ஃபண்ட், ஜோஹ்ரம் மம்தானியை ஆதரித்தா லும், இந்திய அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க இந்து கூட்டணி என்ற வலதுசாரிகள் அவரை எதிர்க்கிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, நரேந்திர மோடி ஆகியோரை விமர்சித்ததே இதற்குக் காரணம். அதையும் மீறி ஜோஹ்ரம் மம்தானியின் வெற்றி அமெரிக்க அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.=