articles

img

கேரள லோக் ஆயுக்தா சட்டத்திருத்தம் ஏன்? - பி.ராஜீவ்

கேரள லோக்ஆயுக்தா சட்டத் திருத்தச் சட்டம் விரிவான விவாதங்களுக்குப் பிறகு வியாழனன்று (செப்.1) பேரவை யில் நிறைவேற்றப்பட்டது. விவா தத்திற்குப் பிறகு, இந்த திருத்தச்சட்டம் அரசமைப்பு மற்றும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என்ற பொதுவான பார்வைக்கு சபை வந்தது. மத்திய லோக்பால் சட்டத்தின் விதிகளின்படியும், மாநில லோக்ஆயுக்தா மாதிரிச் சட்டத்தின் பகுதிகள் மற்றும் அரச மைப்பு விதிகளின்படியும் இந்த திருத்தம் செய்யப்பட்டது. லோக்ஆயுக்தா சட்டத்தின் கீழ், விசாரணை மற்றும் ஆய்வுக்கு இந்த அமைப்பு பொறுப்பா கும். இது சட்டத்தின் முன்னுரையிலேயே அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. மத்திய லோக்பாலும் மாநில லோக் ஆயுக்தாவும் அந்தந்தச் சட்டங்களின் கீழ் உள்ள விசாரணை வழிமுறைகளாகும். அதனால்தான் இந்தச் சட்டங்கள் எதிலும் தண்டனை விதிக்கவும் செயல் படுத்தவும் வழிவகை செய்யும் விதிகள் எதுவும் இல்லை. அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது பிரபல மாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜன லோக்பால் மசோதாவிலும், கேரள லோக்ஆயுக்தாவின் 14ஆவது பிரிவிலும் அதற்கு இணையான பிரிவுகள் இடம் பெறவில்லை.

அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான பிரிவு

நவீன உலகில், ‘ஒம்புட்ஸ்மேன்’ முறை முதலில் ஸ்வீடனிலும் பின்னர் பிற நாடுகளிலும், பரிந்துரை செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பாக அறி முகப்படுத்தப்பட்டது. இந்தபின்னணி யில் கேரள லோக்ஆயுக்தாவின் பிரிவு 14 வேறுபட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர் கள் ராஜினாமா செய்வதை அறி விக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தா வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாய விதியும் இதில் உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகில் எங்கும் இதேபோன்ற அமைப்புக்கு விசாரணை நடத்தவும் தண்டனை விதிக்கவுமான, சட்டத்திற்கு புறம்பான அதிகாரம் இல்லை. இதுமட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, முதல்வராக நீடிப்பது, சபையின் பெரும்பான்மையின் அடிப்ப டையில்தான். அமைச்சர்கள் தொடர்வது முதல்வரின் நல்லெண்ணத்தின் அடிப்ப டையிலாகும். முதல்வரின் பரிந்துரை யில் ஆளுநர் கொண்டுள்ள நம்பிக்கை யின்படி இது நடக்கிறது. இந்த அரச மைப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை, அவர்களை பதவி விலக உத்தரவிட நீதிமன்றங்களுக்குக் கூட அதிகாரம் இல்லை என்பதை உயர் நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே, அரசமைப்புக்கு முரணான, சட்டத்தின் எல்லைக்கு புறம்பான, பொது நீதிக்கு முரணான பிரிவை மாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. சட்டசபை அதைச் செய்துள்ளது. எந்தவொரு சட்டத்தையும் அரசமைப்புக்கு முரணான தாக அறிவிக்க நீதிமன்றங்களுக்கு அதி காரம் உள்ளது. எவ்வாறாயினும், எந்த வொரு சட்டத்திலும் தவறு இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதை ரத்து செய்யவோ அல்லது திருத்தவோ சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு

லோக்ஆயுக்தாவுக்கு நீதித்துறை அதிகாரம் உள்ளதாகவும், நீதித்துறை முடிவின் மேல்முறையீட்டு அதிகாரமாக நிர்வாகமே மாறுகிறது என்பதும், இது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்பதும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் முக்கிய விமர்சனம். நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா- நீதிபதி சிவராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கேரள மாநில அரசு - எதிர் - பெர்னார்ட் (State of  Kerala v Bernard- 2002 KHC 765) வழக்கில், இது ஒரு புல னாய்வு செய்யும் அமைப்பு மட்டுமே என்றும், தண்டனை விதிக்கவோ அல்லது அதை நிறைவேற்றக் கட்டா யப்படுத்தவோ அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்தது. லோக்ஆயுக்தா, நீதிமன்றத்துக்குச் சமமானதல்ல என்று உயர்நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு, “லோக் ஆயுக்தாவிற்கு குற்றச்சாட்டின் மீதான விசாரணையைத் தவிர தீர்ப்பை வழங்கும் அதிகாரமோ அல்லது அதன் முடிவுகளை அமல்படுத்தும் அதிகாரமோ இல்லை என்பதாகும். கே.டி. ஜலீல் வழக்கில் மேல்முறையீட்டு விசயங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பெர்னார்ட் வழக்கின் தீர்ப்பு இந்த வழக்குடன் இணைத்து குறிப்பிடவோ, அந்த தீர்ப்பின் முக்கிய கண்டுபிடிப்புகள் ரத்து செய்யப்படவோ இல்லை. ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட அமைப்பு என்பதால், அதற்கு நீதித்துறை அதிகாரங்கள் இருக்கும் என்ற விசித்திரமான வாதத்தையும் எதிர்க் கட்சிகள் எழுப்பின. யார் எங்கு அமர்கி றார்கள் என்பதல்ல, எந்த விதிகளின் கீழ் அமர்கிறார்கள் என்பதுதான் அடிப்ப டைப் பிரச்சனை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை தலைவராகவும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் உட்பட உறுப்பினர்களாக இருக்கும் மனித உரிமைகள் ஆணை யத்தின் உத்தரவுகளும் விசாரணை ஆணைய சட்டப்படி உள்ள இதர ஆணை யங்களின் உத்தரவுகள் சட்டப்படியான நீதித்துறை உத்தரவுகள் ஆகாதது அதனால்தான்.

திருத்தம் செய்ய நடந்த முயற்சிகள்

ஏ.கே.ஆண்டனி முதல்வராக இருந்த போது, லோக்ஆயுக்தாவுக்கு நீதித்துறை அதிகாரம் வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இத்தகைய திருத்தம் நீதி அமைப்பில் ஊடுருவும் வகையில் அமையும் என்ற சட்டத்துறையின் கருத்தின் அடிப்படையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டாம் என ஏ.கே. அந்தோணி அமைச்சரவை முடிவு செய்தது. நீதித்துறை ரீதியான முடிவெ டுக்கும் அதிகாரம் லோக்ஆயுக்தாவுக்கு அரசமைப்பு ரீதியாகவும் சட்டப்படியும் இல்லை என்பதால் மேல் நீதிமன்றங்க ளில் முறையீட்டு அதிகார வரம்பு அதற்கு வழங்கப்படவில்லை. லோக் ஆயுக்தா அறிக்கை மற்றும் பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டும் அல்ல; அதன் பிரிவு 15இன் கீழ் குற்றம் நடந்ததாக உணர்ந்தால், எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரும் அதிகாரமும் உள்ளது. உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சென்னித்தலா, 2013இல் லோக்பால் சட்டம் அமலுக்கு வந்த பிறகு,  அதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ள தாக சட்டப்பேரவையில் பதில் அளித்தி ருந்தார். அந்த பணியையும் இந்த திருத்தம் நிறைவேற்றியுள்ளது.

பிரதமர், முதல்வர்களுக்கு விலக்களித்த சட்டம்

லோக்ஆயுக்தாவை சட்டப்பூர்வமான அமைப்பாக மாற்றுவதற்கு எதிராக எழுப்பப்பட்ட மறுப்புகள் சபையில் அம்பலமாயின. 1968இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோ தாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யக் கூட காங்கிரஸ் தயாராக இல்லை. நாற்பத்தைந்து ஆண்டுக ளுக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்தில் முதலில் பிரதமர் இடம்பெற வில்லை. பெரும் அழுத்தத்திற்குப் பிறகு பிரதமர் சேர்க்கப்பட்ட போதும், பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது அமைதியை பாதிக்கும் என்று நினைத்தாலும் அந்த புகாரை ஏற்க வேண்டியதில்லை. ஏதேனும் புகார் வந்தால், உள்அறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கான காரணத்தை புகார்தாரர் உட்பட யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பிரத மருக்கு திறம்பட விலக்கு அளிக்கும் சட்டத்தை மத்தியில் கொண்டு வந்த காங்கிரஸ், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட சட்டங்களின் வரம்பிற்குள் முதல்வர் இல்லை. அப்படி யென்றால் இங்கே நடந்த நாடகம் எவ்வளவு அபத்தமானது? முன்பு குறிப்பிடப்பட்ட பெர்னார்டு வழக்கில், உயர்நீதிமன்றம் சட்ட மன்றத்தின் முக்கியத்துவத்தை தெளிவு படுத்துகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சபை விவாதிக்கும் போது பொதுக் கருத்து உருவாகிறது என்ற உயர் நீதிமன்றத்தின் கண்டறிதல் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படியும் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படியும் சட்டத்தின் நோக்கங்களின்படியும் நிறைவேற்றப் பட்ட சட்டத் திருத்தம் சட்டமன்றத்தின் பொறுப்பை நிறைவேற்றுவதாகும்.

நன்றி: தேசாபிமானி, 
தமிழில்: சி.முருகேசன்