8,05,402 வேலை நாட்களை உருவாக்கிய சாதனை - எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், கேரள உள்ளாட்சி மற்றும் கலால் வரித்துறை அமைச்சர்.
“பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய அரசு சாத்தியமாக்கிய சாதனைகளை அடிப்படையாகக்கொண்டு உள்ளாட்சித்துறை நிரந் தரமான வளர்ச்சி முன்மாதிரியை நடைமுறை உண்மையாக மாற்றி வருகிறது. ஏழை எளிய மக்களின் நலன்சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு கேரள அரசு மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. லைஃப்மிஷன் மூலம் கட்டித்தரப்படும் வீடுகள், வீடு தேடி வந்து அளிக்கும் சேவைகள், தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் முதலான பயனுள்ள திட்டங்கள் ஏராளம் உள்ளன. அத்துடன் நாளைய தலைமுறை எதிர்பார்க்கும் நவீன வேலை வாய்ப்புகளும் மாநில மெங்கும் உருவாக்கப்படுகின்றன.” சுற்றுலாப்பயணிகள் மற்றும் சாதாரணப் பயணிகள் ஆகியோருக்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலையோரங்களில் நவீன வசதிகளுடன் கூடிய இளைப்பாறும் மையங்களை உருவாக்கும் ‘டேக் எ பிரேக்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் ஆட்சி நிர்வாக நடைமுறை கள் மற்றும் சேவைகளை வெளிப்படையாகவும் எளி தாகவும் மாற்றுவதன் பகுதியாக பிரதேச ஆட்சி நிர்வாக முறையான ஐ.எல்.ஜி.எம்.என் மாநிலமெங்கும் மேலும்150 கிராம ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிடைக்கப் பெறுகின்ற சேவைகள் குறித்த விவரங்கள் அனைத்தும், மக்களுக்கு விரல்நுனியில் கிடைக்கும் விதத்தில் ‘சிட்டிசன் போர்ட்டல்’ எனும் இணைய சேவை துவங்கப்பட்டுள்ளது. ‘பசியற்ற கேரளம்’ என்னும் திட்டத்தின் பகுதியாக ‘குடும்பஸ்ரீ’ மகளிர் குழுக்கள் மூலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் மக்கள் உணவகங்களின் தரவரி சைப் படுத்தும் பணி முடிக்கப்பட்டது. நிர்ணயிக்கப் பட்ட சிறப்புப் புள்ளிகளின் அடிப்படையில் தான் 1095 மக்கள் உணவகங்களின் தரவரிசைப் படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களில் செயல்படும் மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகி யோருக்கு தொடர் பயிற்சிகள் மற்றும் செயல்முறை அறிவுகள் கிடைக்கச் செய்யும் நோக்கில் இடுக்கியில் மாவட்ட அளவிலான பயிற்சி மையம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் வாயிலாக 8,05,402 வேலை நாட்கள் உருவாக்கப் பட்டு அதன்மூலம் 26.42 கோடி ரூபாய்க்கான திட்டச் செலவுகள் நடத்தப்பட்டுள்ளன. நூறு நாள் வேலைத் திட்டம் மூலமாக 240.82 லட்சம் வேலை நாட்கள் உரு வாக்கப்பட்டன. அதன் மூலம் 10.13 லட்சம் குடும் பங்கள் வேலைவாய்ப்புப் பெற்று பயனடைந்தன.
கலால் துறை
ஆலப்புழை மாவட்டத்தில் டிஜிட்டல் ஒயர்லஸ் தகவல் தொடர்பு முறை அமல்படுத்தப்பட்டது. கலால் துறையில் 64 வகையான சேவைகள் இணைய மயமாக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களுக்கு அடிமையான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதையிலிருந்து மீட்கும் விதத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள நெய் யாற்றின் கரை பொது மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை மையம் செயல்படத் துவங்கியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே நிலவி வரும் சில விரும்பத்தகாத போக்குகளிலிருந்து, அவர்களை மீட்கும் வகையில் பள்ளிகளில் ‘உணர்வு’ என்ற பெயரில் விளையாட்டுப் பயிற்சித் திட்டம் துவங்கப் பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி பெற்ற கேரளம் - வீணா ஜார்ஜ், கேரள சுகாதாரத்துறை அமைச்சர்,
“கேரளம் சமீப காலத்தில் கோவிட், நிபா, பெரு வெள்ளம், ஜிகா வைரஸ், ஒமைக்ரான் என பல கடினமான சவால்களை எதிர்கொண்டுள் ளது. இருப்பினும், கேரளம் அச்சவால்களு க்கு எதிராக அறிவியல்பூர்வமாக தடுப் பரண்கள் எழுப்பி துணிவுடன் நின்றது.நாம் இச்சவால்களை எதிர்கொண்ட முறையானது பல நேரங்களிலும் தேசிய, சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ச்சியாக தடைகள் பல வந்தபோதும் சுகாதாரத்துறையில் தேசிய அளவில் முதலிடத்தைத் தக்கவைக்க முடிந்தது பெருமை கொள்ளத்தகுந்த ஒன்றாகும். தேசிய அளவில் மிகவும் குறைந்த குழந்தை மரண விகிதம் உள்ள மாநிலமாக கேரளம் உள்ளது. இந்தியா வில் தேசிய சராசரி 30 என்றிருக்கும் வேளையில் கேர த்தின் குழந்தை மரண விகிதம் 6 மட்டுமே. இந்த விகிதத்தையும் குறைக்கவேண்டும் என்ற கடின இலக்கை நோக்கிக் கேரளம் செயல்படுகிறது. 2023 –ஆம் ஆண்டு முற்றிலும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற சிறப்புச் செயல் திட்டத்துடன் கேரளம் முன்னேறுகிறது.”
சுகாதாரத் துறை
சுகாதாரத் துறையில் வளர்ச்சித்திட்டங்களுக்கு கோவிட் பெருந்தோற்று காலத்திலும் தடையற்ற முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டது. அரசின் ‘நூறு தின திட்ட’ த்தின் பகுதியாக 217 மருத்துவ நிறுவனங்க ளில் 94.2 கோடி ரூபாயின் திட்டங்கள் செயல்வடிவம் பெற்றன. ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் ஆயுஷ் நிறுவ னங்களில் 5.17 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 4 மாவட்ட மருத்துவமனைகள் 4 தாலுகா மருத்துவ மனைகள் 7 சமூக சுகாதார மையங்கள் 83 குடும்ப சுகாதார மையங்கள் 34 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் 132 அரசு மருத்துவமனைகள் ஆகியவற்று க்கு என்.க்யு.எ.எஸ் –ன் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. சமூகத்தில், அடையாளம் காணப்படாது மறைந்து கிடக்கும் காச நோயாளிகளைக் கண்டுபிடிக்க ‘எனது காசநோயற்ற கேரளம்’ என்ற திட்டத்தின் பகுதியாக ‘காசநோயற்ற கேரளம்’ என்னும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. உடலுறுப்பு தானத்தை நெறிப்படுத்தி வெளிப்படையாக்கிட ‘கேரள ஸோட்டோ’(Kerala State Organ and Tissue Transplant Organisation) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைமுறை அடிப்படையிலான நோய்களைக் கண்டறிய சிறப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் துவங்கப் பட்டுள்ளது. புற்று நோயாளிகளுக்கென புற்றுநோய்ப் பதிவேடு உருவாக்கப்படும். இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடத்தும் விதத்தில் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தயார்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சுகாதாரத்துறையுடனான தாய்சேய் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த வரைவறிக்கை உருவாக்கும் முதல்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள் ளது. குழந்தைகளுக்கு நிமோனியா போன்ற நியுமோ காக்கல் நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த அக்டோபர் 1 முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. உலகளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திட்டத்தின் பகுதியாக புதிதாக சேர்க்கப் பட்டுள்ள நியுமோகாக்கல் காஞ்சுகேட் வாக்சின் (பி.சி.வி) செலுத்தும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.
350 அரசு மருத்துவமனைகளில் இ-ஹெல்த் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் முன்கூட்டியே சிகிச்சைக்கான நேரத்தை பதிவு செய்வதை இணையம் மூலமாக செய்யும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. 300 –க்கும் அதிகமான அரசு மருத்துவமனைகளில் இ-ஹெல்த் மருத்துவ மனைகளில் முன்பதிவு செய்வதன் வாயிலாக குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிகளில் மருத்துவர்களின் சேவையை பெறுவதை எளிதாக்கியுள்ளது. வெளி நோயாளிகளுக்கான அனுமதிச்சீட்டுகள், வில்லைகள் ஆகியவற்றை இணையம் மூலமாக பெற்று அச்சிட்டுக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில், சுகாதாரத்துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. பிறவியிலேயே ஏற்படும் வளைவுபாத (Club Foot- பிறவி வளைவுபாதம்) பிரச்சனையை முற்றிலும் ஒழிக்க சர்வதேச கருத்த ரங்கம் நடத்தப்பட்டது. பெருந்தொற்று காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே மருத்துவரைக் காணும் படியான இ-சஞ்சீவனி சேவை தீவிரப்படுத்தப்பட்டது. சிறப்புச் சிகிச்சை பிரிவு சேவைகளும் இ-சஞ்சீவனி மூலம் கிடைக்க வழி செய்யப்பட்டது. 4700 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இ-சஞ்சீவனி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் இ-சஞ் சீவனி மூலம் டாக்டர் டூ டாக்டர் என்னும் சேவை விரிவு படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் நோய்ப்பரவல் உறுதி செய்யப்பட்ட வேளையிலேயே முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மாநிலமெங்கும் ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் போதுமான அளவில் வெண்டி லேட்டர் வசதியுள்ள படுக்கைகளையும் உறுதிபடுத்தி நோயை எதிர்கொள்ள முன் தயாரிப்பு மேற்கொள்ளப் பட்டது. கோவிட் மூன்றாம் அலையை முன்னுணர்ந்து 50-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களும் நிறுவப்பட்டன.
பெருந்தொற்றிலும் முன்னேறிய கல்வியின் காலம் - வி.சிவன்குட்டி, பள்ளிகல்வித்துறை கேரள அமைச்சர்
மாநிலத்தின் பொதுக்கல்வி பெரும் மாற்றத்தின் பாதையில் தொடர்ந்து முன்னேறுகிறது. பொதுக்கல்வி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் பள்ளிகளின் அடிப்ப டைக் கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது பள்ளிகளின் தோற்றச் சூழல்களில் மிகவும் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டுள் ளன. புதிய பள்ளி கட்டிடங்களும் சிறந்த ஆய்வ கங்களும் அதிநவீன வகுப்பறைகளும் கனவுகளாக இல்லாமல் எதார்த்தமாக மாறியுள்ளது.
பள்ளி கல்வித்துறை
கமாக கல்விநிலையங்களில் பாடத்திட்டம் குறித்த பிராதன திட்டம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு குறித்த பிராதன திட்டமும் தயார் செய்யப் பட்டுள்ளது. தினம் ஒரு செயல் திட்டம் அடிப்படையிலான 100 நாள் செயல்திட்டத்தின் பகுதியாக 48 மேல்நிலைப்பள்ளி களில் ஆய்வகங்களும் 3 மேல்நிலைப்பள்ளி நூல கங்களும் துவங்கப்பட்டுள்ளன. கிஃப்பி, நபார்டு போன்ற நிதியாதாரங்களை பயன்படுத்தி புதிதாக 92 பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டிமுடிக்கப் பட்டுள்ளது. 107 பள்ளிக் கட்டிடங்களின் பணிகள் துவங் கப்பட்டுள்ளன. மாநிலத்தில் 12302 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மழலையர் வகுப்பு துவங்கி எட்டாம் வகுப்புவரையிலுமான 29,52,919 குழந்தைக ளுக்கு உணவு தானியங்கள் மற்றும் உணவுப்பொ ருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பெருந்தொற்று காலகட்டத்தில் 2021-2022 கல்வி யாண்டின் வகுப்புகள் 2021 ஜூன் 1 கைட் விக்டர்ஸ் அலைவரிசையில் துவங்கப்பட்டது. ஃபர்ஸ்ட்பெல் 2.0 என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்ட டிஜிட்டல் வகுப்புக ளோடு ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரை யாடும் விதத்தில் இணைய வகுப்புகளும் நடைமுறைப் படுத்தப்பட்டன. கூகிள் இந்தியாவுடன் இணைந்து கைட்ஜி-ஸியுட் இணைய செயலியும் உருவாக்கப் பட்டது. கோவிட் நெறிமுறைகளைக் கடைபிடித்து மாநிலக் கல்விநிலையங்கள் நவம்பர் 1 முதல் செயல்படத் துவங்கின. தகுதியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் +1 இடச்சேர்க்கையை நிவர்த்தி செய்யும் விதத்தில் 79 அதிக வகுப்புகள் அனுமதிக்கப்பட்டன.