தில்லியில் சங்கமித்த உழைக்கும் மக்கள் சபதம்!\
கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை அமல்படுத்தி இந்திய உழைப்பாளி மக்களை துன்பத்தில் தள்ளி இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம் என்று சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் நடத்திய எழுச்சிமிகு பேரணியில் செங்கட லெனத் திரண்ட உழைப்பாளி மக்கள் உறுதியேற்றனர். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய மூன்று பெரும் வர்க்க அமைப்புகளின் சார்பில் ஏப்ரல் 5 தில்லியில் நாடாளு மன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இப்பேரணியில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக கடந்த ஆறு மாத காலமாக இந்திய நாடு முழுவதும் கிராமங் களிலும், நகரங்களிலும் வீடு, வீடாக மக்களை சந்தித்து, மோடி அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கை களுக்கு எதிராகவும், மக்கள் ஆதரவு கொள்கைகளை முன்வைத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டன. அதன் முத்தாய்ப்பாக ஏப்ரல் 5 புதனன்று தில்லி ராம் லீலா மைதான த்தில் லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் அணி திரண்டனர். கைகளில் செங்கொடியோடும், கண்களில் நம்பிக்கையோடும் ‘மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம், மக்கள் நலக் கொள்கைகளை முன்னெடுப்போம்’ என்ற முழக்கங்களோடு அங்கு திரண்டனர்.
திரண்டது ‘வியர்வை இந்தியா’
அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட மான பேரணி - பொதுக்கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயராகவன் ஆகியோர் தலைமையேற்று பேசினர். இப்பொதுக் கூட்டத்தில் ஹரி யானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிர தேசம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், சத்தீஸ்கர், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழி லாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆயிரமாயிரமாய் - சாரை சாரையாய் வந்து பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி. வெங்கட், இந்த இயக்கத்தின் வரவேற்பு குழு தலைவர் பிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மற்றும் காப்பீடு, வங்கி, மத்திய, மாநில அரசு ஊழியர் உள்ளிட்ட 12 அமைப்பு சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் உரையாற்றினர்.
2024 தேர்தலில்...
தலைவர்கள் உரையாற்றுகையில், “தில்லியில் செங்கடல் புகுந்தது போல் உழைக்கும் மக்கள் அணி திரண்டு இருக்கிறார்கள். மோடி அரசு பின்பற்றும் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் காரணமாக இந்திய உழைப்பாளி மக்களிடம் நாள்தோறும் அதிகரித்து வரும் கொந்தளிப்பைக் காட்டுவதாக இந்த பேரணி வெற்றிகர மாக அமைந்துள்ளது. இந்திய நாட்டின் செல்வ வளங்களையும், உழைக்கும் மக்களின் வியர்வையில் உருவான பொதுத் துறை நிறுவனங்களையும், மோடி அரசு பெரும் கார்ப்பரேட் முத லாளிகளுக்கு தாரை வார்த்து வரு கிறது. உழைக்கும் மக்களின் உரிமை களைப் பறிக்கும் தொழிலாளர்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி யுள்ளது, விவசாயிகளுக்கு அளித்த குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைத்து சின்னா பின்னப்படுத்தி வருகிறது. எனவே மோடி அரசை 2024 நாடாளு மன்றத் தேர்தலில் தோற்கடிப்போம். இந்திய மக்களுக்குத் தேவை யான வேலைவாய்ப்பு, கல்வி, சுகா தாரம், சட்டப்படியான ஊதியம், சமூக நலப் பாதுகாப்பு, பொதுத்துறைகளை பாதுகாப்பது; கார்ப்பரேட், மதவெறி அரசியலை முறியடிப்பது உள்ளிட்ட மக்கள் நலக் கொள்கைகளை முன் னெடுப்போம்” என்று சபதமேற்றனர்.
தமிழக உழைப்பாளிகள் பங்கேற்பு
முன்னதாக, ராம்லீலா மைதானத் தில் சங்கமிக்கும் பொருட்டு தமிழ்நாட்டின் உழைப்பாளி மக்கள் பங்கேற்ற பேரணி புதுதில்லி ரயில் நிலையம் அருகே உள்ள அஜ்மீர் கேட் பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பெ.சண்முகம், சி.ஐ.டி.யு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், க.திருச்செல்வன், கே.ஆறுமுக நயினார், மாநிலத் துணைத் தலைவர் எம் சந்திரன், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், பொரு ளாளர் கே.பி.பெருமாள், விவசாயத் தொழிலாளர்கள் சங்க அகில இந்தி யத் துணைத் தலைவர் ஏ. லாசர், மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், பொருளாளர் அ.பழ னிச்சாமி ஆகியோர் தலைமையில் தமிழக தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்று பேரணி யாக ராம்லீலா மைதானம் சென்றடைந்தனர்.
எம்.பி.,க்கள் பங்கேற்பு
உழைக்கும் மக்களின் இந்த பேரியக்கத்துக்கு ஆதரவு தெரி விக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோரும் இப்பேரணியில் பங்கேற்றனர். ராம்லீலா மைதானத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், தேசியச் செயலாளர்கள் ஆர். கருமலையான், ஏ.ஆர்.சிந்து உள்பட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதுக்கூட்டம் துவங்கிய போது, சிஐடியு மூத்த தலை வர்களில் ஒருவரான சுனீத் சோப்ரா மறைவுக்கு ராம்லீலா மைதானத்தில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பேரணி வந்த போது தில்லி நகரத்து உழைப்பாளிகள் ஆர்வத்து டன் பார்த்து, உற்சாக ஆதரவு தெரி வித்து கையசைத்தனர். தில்லி அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்து நின்ற போது தனது செல்பேசியில் வீடியோ எடுத்தார். பேரணியில் சென்றோருக்கு கரம் உயர்த்தி ஆதரவு தெரிவித்தார். இது போல் ஏராள மானோர் உழைப்பாளி மக்களின் இந்த மாற்று அரசியல் போராட்டத்திற்கு உற்சாக ஆதரவு தெரிவித்தனர்.