இந்தியாவில் இருபது கோடி வேலைகள் இல்லை. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டங்களில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கான உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நகர்ப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதம் அறிவிக்கப்படவில்லை.
நாடு முழுவதும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக வேலையின்மை மாறி இருக்கும் சூழலில் ஒன்றிய நிதியமைச்சர் 2022-23நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இருக்கிற வேலைவாய்ப்பினை பாதுகாப்பது குறித்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றியும் ஏதாவது திட்டங்கள் உள்ளதா?
வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டியதின் அவசியம்
ஓர் மனிதன் வாழ்விற்கு அடிப்படை வருமானம் ஆகும். வருமானத்தை ஈட்டுவதற்கு வேலை என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட நான்கு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 1. ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்புச் சந்தை யில் 50 லட்சம் பேர் இணைந்து வருகின்றனர். 2. தற்போது நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வரக்கூடிய 3 கோடி இளைஞர்களின் எதிர் காலத்தை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. 3. இரண்டாண்டு காலத்தில் கோவிட்-19 ஏற் படுத்திய தாக்கத்தாலும் ஒன்றிய மோடி அரசின் மோச மான பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவும் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். அதேபோல மாதாந்திர சம்பளதாரர் கள் ஆக இருந்து தற்சமயம் அன்றாடக் கூலி பெறுப வர்களாகவும் மற்றும் சுய தொழில் செய்பவர்களா கவும் மாறி உள்ள லட்சக்கணக்கான தொழிலா ளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. 4. உடல் உழைப்பு மற்றும் குறைந்தபட்ச திறன் கொண்ட முறைசாராத் தொழிலில் உழைக்கும் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் சமூகப் பாதுகாப்பற்ற வேலைவாய்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய கௌரவமான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
கிராமப்புற வேலை உத்தரவாத சட்டம்
2022-23 ஆம் ஆண்டில் ஊரக வேலை வாய்ப்பு சட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்துக்கு ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.98,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. ஆனால், நடப்பு ஆண்டில் இந்தச் சட்டத்துக் கான ஒதுக்கீடு திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 25% குறைவாகும். கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பில் ஈடுபட்டு வரக்கூடிய மக்களின் சம்பளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் நாடாளுமன்ற கேள்வி ஒன்றில், ‘‘நாடு முழுவதும் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பேர் புலம் பெயர்ந்த தொழிலா ளர்களாக ஊருக்குத் திரும்பி உள்ளதாக தெரி வித்துள்ளது’’. இதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 14 லட்சம் பேரும் தமிழகத்தைச் சேர்ந்த 72 ஆயிரம் பேரும் அடக்கமாகும். பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு 1951ஆம் ஆண்டு 53 சதவீதமாக இருந்தது. தற்சமயம் 2022ஆம் ஆண்டில் 18 சதவீதமாக உள்ளது. இத்துடன் விவசாயம் சார்ந்த மற்றும் சாராத வேலை வாய்ப்புகளில் கூலி என்பது குறைந்து வருகிறது.
2022 ஜனவரி 28 வரை மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் 2.91 பில்லியன் நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 6.71 கோடி குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைத்த குடும்பங்களின் எண்ணிக்கை 30 லட்சம் மட்டுமே ஆகும். அதாவது மொத்தம் உள்ள நான்கு சதவீதம் குடும்பத்திற்கு மட்டுமே சட்டத்தின்படி வேலை வாய்ப்பு மோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் தொண்ணூற்று ஒரு லட்சம் குடும்பத்தினருக்கு ஓரு நாள் கூட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. வேலை கேட்டு விண்ணப் பித்தும் வழங்கப்படாத குடும்பங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 சதவீதமாகும். இப்பொழுது அளவிற்கு சராசரியாக ரூபாய் 209.31 கூலி தரப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது புள்ளிவிபரங்கள் காட்டுகிறது.
வேலையின்மை நிலவரம்...
தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, இளைஞர்கள் கடு மையான வேலை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களாக உள்ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் 9 லட்சம் காலிப் பணி யிடங்களும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், ராணுவம், நீதித்துறை, வங்கிகள், துணை இராணுவப் படைகள் உள்ளிட்ட பிரிவுகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே துறையில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 225 இடங்களும் ராணுவத் துறையில் இரண்டரை லட்சம் இடங்களும், உள்துறையின் 1.28 லட்சம் இடங்களும் காலியாக உள்ளன.
கோவிட்-19 மருத்துவ பேரிடர் காலத்தில் சுகாதா ரத்துறையில் பத்தாயிரம் மருத்துவர் பணியிடங்களும், 9000 அறுவை சிகிச்சை நிபுணர்களும், 9000 தொழில் நுட்ப பணியாளர்களும், பதினெட்டாயிரம் செவிலியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இத்துடன் ஊரக சுகாதாரப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 1.68 லட்சம் பணியிடங்கள் சுகாதாரத்துறையிலும், 2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப் படும் என அறிவிப்பு வந்தபோதும் ஒதுக்கீடு உயர்த்தப்பட வில்லை. இதில் 1.76 பணியிடங்கள் அங்கன்வாடி மையங்களிலும் காலியாக உள்ளன.
ரயில்வே துறையில்
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டின் ஆர்ஆர்பி - என்டிபிசி (RRB-NTPC) தேர்வுகளில் 35,000 பணியிடங்களுக்கு, 1.25 கோடி பேர் விண்ணப்பித்தனர். இத்தேர்வில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. ஒன்றிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு சுமார் 1 லட்சம் காலியிடங்களை அறிவித்தார். சுமார் 2.42 கோடி விண்ணப்பங்கள் (24 மில்லியன்) குவிந்தன. இந்த தேர்வின் மூலமாக ரயில்வேக்கு விண்ணப் பித்தவர்களிடமிருந்து கட்டணமாக மட்டும் ரூ.1,400 கோடி கிடைத்தது. இந்நெருக்கடியின் காரணமாக பீகாரில் விண்ணப் பித்த இளைஞர்கள் போராடிய போது காவல்துறை யின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இத் தாக்குதலை கண்டித்து மிகப்பெரிய பந்த் போராட்டமே நடைபெற்றுள்ளது.
புதியது எனும் ஏமாற்று
இந்தியாவில் இருபது கோடி வேலைகள் இல்லை. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டங்களில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கான உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நகர்ப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதம் அறிவிக்கப்படவில்லை. அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் வேலை யின்மையால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், ஒன்றிய மோடி அரசு, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தது போல் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்று அரசு வாக்குறுதி அளித்தும் பட்ஜெட்டில் எந்த திட்டமும் பார்க்க முடியவில்லை.
சிறு மற்றும் குறு தொழில்
கோவிட் 19 தாக்கத்தினால் சிறு மற்றும் குறு தொழில் துறையினர் பட்ஜெட்டில் கூடுதலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், கடன் தருவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இத்துறையில் 13 இலட்சம் வேலை வாய்ப்புகள் மோசமான நிலையில் உள்ளது. சந்தையை அணுகுவதில் உள்ள சிரமத்தை போக்குவதற்கும், வரி சிக்கல்களை தீர்ப்பதற்கும், உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற வகையில் மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கும் இந்த பட்ஜெட் உரிய திட்டமிடுதலை மேற்கொள்ளவில்லை. இதனால் சிறு குறு தொழில்க ளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே ஆகும். சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உற்பத்தியுடன் இணைக் கப்பட்ட ஊக்கத்தொகை, (பிஎல்ஐ) இந்த திட்டமானது 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் திறன் கொண்டது என்ற சில கற்பனையான அறிக்கைக ளைத் தவிர வேறு இல்லை. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இந்தியாவில் உள்ள இளைஞர்களின் வாழ்வா தாரத்தின் மீதான நீதி, நெறியற்ற கொடூரமான தாக்குதல் அன்றி வேறில்லை.