நரேந்திர மோடி என்ற மனிதர் முதலமைச்சரா கவும், பிரதமராகவும் அதிகாரத்தின் ருசி கண்ட தன் 20ஆம் ஆண்டை நாடு முழுவதும் பாஜக வினர் கொண்டாடியிருக்கிறார்கள். இந்த கொண்டாட் டத்தின் உள்ளடக்கம், இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சிப் பணியாற்றிய நபர் என்ற நற்பெயரைப் பெறுவ தற்கான முயற்சியாகத் தெரிகிறது. இந்த இருபது வரு டங்களில் மோடி என்ன செய்தார் என்பதை ஆய்வு செய்ய இந்திய மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள் ளது.
குஜராத் மக்கள் தொகையில் தொன்ணூறு சத வீதம் இந்துக்கள். முஸ்லிம்கள் ஒன்பது சதவீதம் மட்டுமே. அவர்கள் முக்கியமாக சூரத், கட்ச் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளனர். இந்துக்க ளிடையே வலுவான சாதி வேறுபாடுகளும் நிலப்பிரபுத்துவ உறவுகளும் உள்ளன. 1992 பம்பாய் கலவரத்தில் சூரத், வதோதரா ஆகிய நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அரசியலிலும் வகுப்புவாதத்தின் செல் வாக்கு அதிகரித்து, பாஜகவின் செல்வாக்கும் அதிகரித்தது. இந்நிலையில்தான் பாஜக செயலா ளர்களில் ஒருவரான நரேந்திர மோடி குஜராத் முதல்வ ராக பதவி ஏற்றார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மோடியை பயன்படுத்தி இந்துக்களிடையே சாதி ஒற்றுமையை உருவாக்க முடியும் என்ற பாஜக வின் திட்டமிடலும் இங்கே மிக முக்கியமானது.
குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற முதல் ஆண்டி லேயே 2002இல் நாட்டையே உலுக்கிய குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலை அரங்கேறியது. இந்தக் காலக் கட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட பல கொலைகள் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தாலும், பல வருடங்கள் கழித்து எந்த ஆதாரமும் இல்லை என்று கொலையாளி கள் விடுவிக்கப்பட்டதை இப்போது பார்க்கிறோம்.
குஜராத் இனப்படுகொலை நரேந்திர மோடியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பலர் நினைத்தாலும், அதற்கு நேர்மாறாக நடந்தது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மோடி வலுவாக மீண்டு வந்தார். இதற்கான முக்கியக் காரணங்கள் அன்றே மதிப்பி டப்பட்டது. குஜராத் இனப்படுகொலைக்குப் பின்ன ரும் கூட, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசால் மோடி அரசுக்கு எதிராக வலுவான அரசியல் பணி களை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. தெளிவான தலைமை கூட இல்லாத நிலை குஜராத் காங்கிரசில் இருந்தது. அங்கு இடதுசாரிக் குழுக்க ளும் தொண்டர்களும் இனப் படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பினர். ஆனால் இவர்களது எதிர்ப்பை சட்டமன்றத்துக்கான வாக்காக மாற்ற இடதுசாரி களால் முடியவில்லை. மிக முக்கியமாக, புதிய தாராள மயக் கொள்கைகளை மிகவும் திறம்பட செயல் படுத்திய மாநிலம் குஜராத். குஜராத் முதல்வராக இருந்தபோதே கார்ப்பரேட் சேவையில் முன்னணி யில் இருந்தார் மோடி. குஜராத்தின் வணிக மற்றும் பொருளாதார ஆதிக்கத்தைப் பயன்படுத்தி வெளி நாட்டு முதலீடுகள் உள்ளிட்ட மூலதனத்தை ஈர்க்க மோடி அரசால் முடிந்தது. நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள சர்தார் சரோவர் அணையின் வணிக மற்றும் விவசாயத் திறனைப் பயன்படுத்தி கார்ப்ப ரேட் விவசாயத்தை ஊக்குவிப்பதும் அதன் ஒரு பகுதி யாகும். பின்னர், மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நிலம் மறுக்கப்பட்ட டாடாவின் நானோ தொழிற் சாலைக்கான நிலத்தையும் உள்கட்டமைப்புகளையும் மோடி அரசு உடனடியாக வழங்கியது.
‘குஜராத் மாடல்’ என்பதன் பொருள்
பிற்காலத்தில் ஒன்றிய அரசின் அடிப்படைக் கொள்கையாகப் பலராலும் கருதப்பட்ட குஜராத் மாடலின் தோற்றம் இதுதான், அரசு, நிர்வாகத்தில் இருந்து விலகி, அரசின் கொள்கைகளில் முழு ஈடுபாடு கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களிடம் அரசின் பணிகளை ஒப்படைப்பது, அரசு மற்றும் தொழில் முனைவோர் செயல்பாடுகள் -ஆகியவற்றை உள்ளடக்கிய உட் கருவையே ‘குஜராத் மாடல்’ என்கிறார்கள். அரசின் நிழலில் ஆட்சியாளர்களும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் கைகோர்த்து நாட்டையே சூறையாடுகிற கூட்டுக் களவாணி முத லாளித்துவம் வளர்ந்தது. இன்றைக்கு இந்தியாவைக் கைப்பற்றத் துடிக்கும் அம்பானியும் அதானியும் குஜ ராத்தில் மோடி ஆட்சிக்கு மிகவும் நெருக்கமானவர் கள். அதே சமயம், மோடியின் 3 முறை ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமோ, உள்கட்டமைப்பு வளர்ச்சியோ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
பிரதமர் பதவிக்கு வந்து...
நரேந்திர மோடியை பிரதமராக்க பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவெடுத்த பிறகு, மோடி அறிமுகப்படுத்திய அனைத்து உத்திக ளும் அவரது குஜராத் அனுபவத்திலிருந்து உரு வாக்கப்பட்டவையே. வளர்ச்சியில் கவனம் செலுத்தி இந்தியாவை உலக வல்லரசாக ஆக்குவோம் என்று உறுதிமொழி கொடுத்த பாணி, அதுவரை பாஜக கடைப்பிடித்து வந்த ‘முற்றிலும் இந்துத்துவா’ என்ற முழக்கங்களிலிருந்து வேறுபட்டது. ஒருபுறம் சர்வ தேச மூலதனம் சுதந்திரமாகப் புழங்க அனுமதிப் பது; அதே நேரத்தில், தனது குஜராத் அனுபவத்தின் பின்னணியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதர வையும் பெற்றார். மோடியால் தொடங்கப்பட்ட “மேக் இன் இந்தியா” பிரச்சாரத்தின் அடிப்படை இதுதான். இதன் மூலம் மோடி அரசு கடைப்பிடிக்கும் புதிய தாராள மயக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தேச விரோதிகள். இந்துத்துவா அரசியலுக்கு உடன்படாதவர்களும் அவ்வாறே தேச விரோதிகளென சொல்லப்பட்டார்கள்.
மோடியின் கார்ப்பரேட் வகுப்புவாதக் கொள்கைக ளின் உண்மையான தாக்கத்தை கடந்த 7 ஆண்டுகளில் இந்த நாடு உச்சகட்ட அளவில் அனுபவித்துக் கொண்டி ருக்கிறது.
ஒட்டுமொத்தமாக மோடியின் இருபது ஆண்டுகள் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது?
பாசிசம் என்பது பரவலாகவும் அதே வேளை முழு மையற்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல். பாசிசம் ஹிட்லரின் ஆரிய புராணம் மற்றும் முசோலினியின் ரோமானியப் பேரரசு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டது. ஒரு இராணுவ ஜெனரலான பிராங்கோ வும் ஒரு பாசிஸ்டாக ஆட்சி செய்தார். சிலியில் பினோசெட் ஆட்சி செய்துள்ளார். பல வேறுபாடுகள் இருந்த போதிலும், முதலாளித்துவப் பொருளாதாரத்தையே மேற்கண்ட அனைவரும் செயல்படுத்த முயன்றனர். இவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரானவர் கள். அதிதீவிர வலதுசாரி பிற்போக்குத் தேசியவாதம் அவர்களின் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த தேசிய உணர்வை உருவாக்குவதற்கு எந்த வழியையும் பயன்படுத்துவார்கள். வெளிநாட்டினர், பிறமதத்த வர்கள், கம்யூனிஸ்டுகள் என அனைவரும் எதிரிகளா கப் பயன்படுத்தப்படுவார்கள். இத்தகைய சித்தாந்தங் கள் எந்தவொரு சமூக மக்களுக்கும் எதிரான எதிர்ப்பு கள் மட்டுமல்ல, கிளர்ச்சிகளையும். ஆட்சிகளையும் அடக்குவதற்கான வழிமுறைகளாகும். இதற்குப் பயன்படுத்தப்படும் உத்திகளும் வடிவங்களும் சூழ்ச்சிகரமானதாக, குரூரமானதாக இருக்கும்.
இந்தியா போன்ற நாட்டில் ஒரே மத ஆட்சியை நிறுவுவது எளிதல்ல. இந்தியா பல கலாச்சாரங்கள், பல மதங்கள் நிறைந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பைக் கொண்ட நாடு. வகுப்புவாத பதற்றங்கள் இந்து உணர்வை வளர்க்க உதவும் என்றாலும், அது உருவாக்கும் வன்முறையில் ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம். இந்து ராஷ்டிராவை தேசிய முழக்கமாக்குவதுதான் ஒரே வழி என பாஜக கருதுகிறது. இதற்குப் பயன்படக்கூடிய எவரையும் பயன்படுத்தி ஒற்றைக் கலாச்சார தேசியக் கண்ணோட்டத்தை உருவாக்குவதுதான் இவர்களது நோக்கம்; இந்தியாவை வல்லரசு ஆக்கு வது அல்ல! இந்தியாவை ஒரு பெரிய அரசியல் சக்தியாக மாற்றுவதோ, மற்ற வல்லரசுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இந்தியாவின் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதோ இவர்களது நோக்க மல்ல. இந்தியாவை சர்வதேச கார்ப்பரேட் ஏகபோ கங்களின் புகலிடமாகவும், அதன் அடிப்படையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்து தேசமாக வும் மாற்றுவதே இவர்களின் நோக்கம். இதுதான் ‘குஜராத் மாடலின்’ அடிப்படை.
இந்த நிலையிலிருநது மாற்றிட, கார்ப்பரேட் அடிமை களிடமிருந்து நாட்டை பாதுகாக்க அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவதும், உன்மையான தேச பக்தர்களாக மக்களை மாற்றிடவும் இந்திய தேசத்தை வலுவான வளமான தேசமாக மாற்றிடவும் ஒன்றுபட்டு நிற்போம்.
கட்டுரையாளர் : மாநில பொதுச் செயலாளர், சிஐடியு தமிழ் மாநிலக் குழு