இந்தியாவில் தேயிலை, காப்பி, ரப்பர் மற்றும் ஏலக்காய் என்ற பெருந்தோட் டப்பயிர்கள், அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநி லங்களில் சுமார்18 லட்சம் விவசாயிகளால் 19 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படுகின்றன, இது நாடெங்கும் உள்ள சுமார் 20 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை வழங்குகிறது. அவர்களில் பெரும் பாலோர் பெண்கள். பெருந்தோட்டப்பயிர் களின் மதிப்பு, நமதுநாட்டின் மொத்த உள் நாட்டு விவசாய உற்பத்தியில் 2 சதவிகித மாகும். தமிழ்நாட்டில், பெருந்தோட்டப்பயிர்கள் கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மலை மாவட்டங்களில் சுமார் 1.26 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யபட்டு, சுமார் 1.2லட்சம் நபர்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.தமிழ்நாட்டில் பெருமளவில் தேயிலைதான் முக்கிய தோட்டப்பயிராக உள்ளது. காப்பி மற் றும் ரப்பர் கணிசமான அளவில் சாகுபடி செய் யப்ப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் 2022-ஆம் ஆண்டு 1,58,000 டன் தேயிலை, 18,000 டன் காப்பி, 22,000 டன் ரப்பர் மற்றும் 1375 டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்பட்டது.
பொதுவாக, பெருந்தோட்டத்தொழில் ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது பல வகையில் தனித்துவமானது. இது ஒரு விவசா யம் சார்ந்த தொழில்துறையாகும், இது மாறு பட்ட காலநிலை நிலைமைகளைக் கொண்ட, கிராமப்புற மற்றும் மலைப்பாங்கான நிலப் பரப்புகளை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் பருவநிலை மற்றங்ககளுக்கு ஏற்ப உற்பத்திதிறன் கொண்டது. செங்குத் தான நிலப்பரப்பு பரந்த அளவிலான நிலப் பரப்புகளைப்போல இயந்திரமயமாக்கலுக்கு உகந்ததாக இல்லை. எனவே, இந்தத்தொழில் பெருமளவில் மனித உழைப்பையே நம்பியுள் ளது. இதன் காரணமாக, தொழிலாளர் ஊதி யங்கள் மற்றும் ஊதியம் தொடர்பான சமூக நல செலவுகளின் மதிப்பு, மொத்த உற்பத்தி செலவில் 60 பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தொழில்களில் மொத்த உற்பத்திச் செலவில் ஊதியச்செலவு என்பது 20-25 விழுக்காட்டுக்கு மிகாமல் இருப்பதால், வேறு எந்த முறைசார் தொழிலும் இத்தகைய சிக்கலால் பாதிக்கப்படுவதில்லை. ஏனைய விவசாய விளைப்பொருட்களை போலவே, பெருந்தோட்ட தொழிலும் உற்பத் திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடை யில் பெருமளவில் வேறுபாட்டை காண வேண்டியுள்ளது. தோட்டங்களின் செயல்பாடு கள் விவசாயத்தன்மை கொண்டவை என்ற போதிலும், இதனை ஒரு உற்பத்திப் பெருந் தொழிலாகவே கருதி, ஒன்றிய அரசு தோட்டத் தொழிலை தனது வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பட்டுக்குள் எடுத்துக்கொண்டது. இக் காரணத்தினால், பெருந்தோட்டங்களுக்கு விவசாயத்துறைக்கு வழங்கப்படும் சலுகை கள், நிதி உதவிகள், கொள்முதல், விலை நிர்ணயம் மற்றும் மானியங்கள் போன்றவை பல காலமாக மறுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், மாநில அரசுகளின் நிலச்சீர்திருத்த விதிமுறைகள் மற்றும் வனச்சட்டங்கள் தோட் டங்களை மாற்றுப் பயிர்கள்கொண்டு நடவு செய்ய அனுமதிப்பதில்லை என்பதால், காலங் காலமாக தொடர்ந்து ஒரே தோட்டப்பயிரையே நம்பியிருக்க வேண்டிய சட்ட நிர்பந்தம் அம லில் உள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல், வர்த்தக உலக மயமாக்கல் கொள்கையின் காரணமாக, கென்யா, மலாவி, வியட்நாம் போன்ற புதிய போட்டிநாடுகள் மலிவு பொருளாதார அனு கூலத்தைக் கொண்டுள்ளன. அந்நாடுகளில் இருந்து குறைந்த விலையில் தோட்ட விளை பொருட்கள் இந்தியாவிற்க்குள் இறக்குமதி செய்யப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. பல வருடங்களாக பெரிய அளிவில் ஏற்ற இறக்கங்கள் கொண்ட தேயிலை ஏல மையங் களில் சராசரி விலையளவுகளும், ஆனால் அதேவேளையில் தொடந்து ஏறுமுகமாக உள்ள தோட்டத் தொழிலாளர் ஊதிய அளவு களும் தெளிவாக விளங்கும். (விபரம்: பட்டி யலில்) தற்சமயம் இளையதலைமுறையினர் பெருந்தோட்டத்தில் வேலை செய்ய மிகவும் தயங்குகின்றனர். கடந்தபல வருடங்களாக, உள்ளூர் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் மலைபகுதிகளில் இருந்து சமவெளிகளுக்கு மாற்று தொழில் வாய்ப்பு களைத்தேடி, பெரியஅளவில் இடம் பெயர்ந் துள்ளனர். உள்ளுர் தொழிலாளர்களின் பற் றாக்குறையை நிவர்த்தி செய்ய தோட்ட நிர் வாகத்தினர் வடமாநிலங்களிலிருந்து தொழி லாளர்களை வரவழைக்க வேண்டிய கட்டா யத்தில் உள்ளனர்.
உற்பத்தி செய்யப்படும் தேயிலையை, ஒன்றிய வர்த்தக அமைச்சகத்தின்கீழ் தேயிலை வாரியத்தின் கட்டுப்பாட்டிம் இயங் கும் பொது தேயிலை ஏல மையங்கள் மூலம் கட்டாய விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், பால் மற்றும் சர்க்கரை போன்ற வற்றிற்க்கு நிர்ணயிக்கப்படும் அரசு கொள் முதல் விலை போன்று தேயிலைக்கு நிர்ண யிக்கப்படுவதில்லை. தென்னிந்தியாவில் தேயிலை ஏல மையங்கள் கொச்சி, கோவை மற்றும் குன்னூரில் அமைந்துள்ளன. ஏல மையங்களில், தேயிலைக்கான விலையை ஒருசில தனியார் கொள்முதல் வியாபாரிகளே நிர்ணயம் செய்கின்றனர். தற்போது, தேயிலை ஏல மையங்களில் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் விலைக்கும், இறுதி நுகர்வோர் வாங் கும் தேயிலையின் சில்லறை விலைக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. விநியோகச்சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்தி லும், அதாவது தரகர்கள், மொத்த விற்பனை யாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற் பனையாளர்கள் மற்றும் பலவற்றில் ஏற்படும் செலவு அதிகரிப்பும், கலவை, பேக்கிங் மற்றும் ஊடக விளம்பரம் ஆகியவற்றில் ஏற்படும் செல வும் இதற்கு முக்கிய காரணங்களாகும். சில் லறைவணிகத்தில் தோட்ட விளைபொருள் உற் பத்தியாளர்கள் நேரடி சந்தை பங்கைப் பெற முடிந்தால், அது அவர்களுக்கு பெரும் பொரு ளாதார நன்மையாக இருக்கும். பிசினஸ்-டு-கன்ஸ்யூமர் (பி-2-சி) இ-காமர்ஸ் முயற்சி போன்றவை, உற்பத்தியாளர்களுக்கு அதிக நேரடி சில்லறை சந்தை வாய்ப்புகளை அளிக் குமா? என்பது குறித்து தீவிரமாக ஆராயப் பட வேண்டியுள்ளது.
தென்னிந்திய பெருந்தோட்டங்களில் உள்ள மற்றொரு பலவீனமான நிலையானது. தேயிலை செடிகளின் வயது. தென்னிந்தி யாவில் தேயிலைத்தோட்டங்களில் 50 சத விகித செடிகள் 60வயதுக்கு மேற்பட்டவையா கும். இவை மரு நடவை செய்யப்பட வேண்டிய காலம் மேலோங்கி விட்டது. ஆனால், மறு நடவு என்பது பெரும் பொருள் செலவினம் வாய்ந்தது மட்டுமல்ல, மறுநடவு செய்த தேயிலை செடியிலிருந்து முதல் மகசூல்பெற ஐந்து வருட காலமாகும். அதுவரையிலான செலவி னம் மற்றும் நட்டத்தை தாங்கும் நிலையில் தோட்ட நிர்வாகங்கள் இல்லை. கடந்த காலங் களில் 2004ம் வருடம் வரை, தோட்ட கம்பனிகள் மீது மாநில அரசு விதித்த 65 சதவிகிதம் வரை யிலான விவசாய வருமானவரி விகிதமும் இதபோன்றஒரு தேக்க நிலை உருவாவதற்க்கு காரணமாகும். இப்படி பல்வேறு சவால்களை சந்திக்கும் தோட்டத்தொழிலானது மாநில அரசு இயந்திரத்தில் இந்நாள் வரையில் எந்தவொரு துறையின் கீழும் சேர்த்துக் கொள் ளப்படவில்லை என்பது மிகவும் தர்ம சங்கட மான நிலையாகும். தமிழ்நாட்டில் தோட்டத் தொழில்துறை எந்த மாநில அமைச்சரின் கட் டுப்பாட்டில் வருகிறது என்பது குறித்து எவ ருக்கும் இன்றுவரை விளங்கவில்லை. இதன் காரணமாக,அரசு தரப்பில் இத்தொழில்துறை யின் நலனுக்காக உரிய மற்றும் விரைவான கொள்கை முடிவுகள் எடுப்பதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுவருகிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின்னரும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின்னரும், இது போன்றதொரு நிர்வாக சீர்கேடு தொடர்வதை நிவர்த்தி செய்ய மாநில அரசு உடனடி நட வடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இதுபோன்றதொரு நிலையை சீர்செய்யும் விதமாக, கேரளாவில் அந்த மாநில அரசு தனது தொழில்துறை அமைச்சரின் கீழ் ‘தோட்டத் தொழில் இயக்கம்’ என்ற ஒரு அமைப்பினை 2022ல் உருவாக்கியுள்ளது. அதுபோன்ற ஒரு ஏற்பாட்டை தமிழ்நாட்டிலும் உருவாக்கினால் ஏதுவாக இருக்கும். 2023 மார்ச் ஆம் தேதியன்று கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் நடத்தும், ‘தமிழ் நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு’ என்பது மிகவும் சீரிய மற்றும் பய னுள்ள ஒரு முயற்சியாகும். பல்வேறு தொழில் முனைவோர் நேரிடும் தினசரி இன்னல்கள் மற்றும் சவால்களை வெளிச்சமிட்டு காட்டு வதற்கு இந்த மாநாடு மிகவும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை. மாநாடு சிறப்பாக அமைவதற்கும், அதை ஏற்பாடு செய்த சங்க நிர்வாகிகளுக்கும் தோட்டத் தொழில் சார்பாக எமது நன்றியையும் பாராட் டுக்களையும் உரித்தாக்குகிறோம்.
-பிரதீப்சுகுமார், செயலாளர், தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கம், கோவை.