articles

img

பாதிக்கப்பட்டவள் என்பதிலிருந்து மீண்டெழுந்த போராளியாக... - பிருந்தா காரத்

“எதற்காக சுதந்திரத்தை நாம் பெற்றுள்ளோம்? நமது அடிப்படை உரிமைகளோடு முரண் படுகிற அசமத்துவம், பாரபட்சம் மற்றும் இதர விஷயங்கள் நிறைந்துள்ள நமது சமூக அமைப்பை சீர்திருத்தவே இந்த சுதந்திரத்தை நாம் பெற்றுள்ளோம்.” இந்த ஆண்டு மகளிர் தினத்தை அனு சரிக்கும்போது பாபாசாகேப் அம்பத்கர் அவர்களின் விவேகத்துடனான இந்த வார்த்தைகளை நாம் நினைவு கூர்கிறோம்.  நோய்த்தொற்று ஏற்பட்டதால் விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுசரிக்க இயலாது போன இத்தினத்தை இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று பல லட்சக்கணக் கான பெண்கள் உலகம் முழுவதும் அனுசரிக்கிறார் கள். எண்ணற்ற அறிக்கைகள் சுட்டிக் காட்டியதுபோல், உழைக்கும் மக்கள் அனைவரும் பெருமளவில் இழப்பு களை அனுபவித்தாலும் பெருஞ்செல்வந்தர்கள் பலன டைந்த அதே நேரத்தில், பெண் தொழிலாளர்களும், ஏழை, எளிய மக்கள் பிரிவைச் சார்ந்தவர்களும் தான் நோய்த்தொற்றின் மோசமான விளைவுகளைச் சந்தித் துள்ளனர். இவர்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருந்த அதிகரித்து வரும் பொருளாதார, சமூக சுமைகளில் இவை பிரதிபலித்தன. 

பாலின மதிப்பீட்டு ஆய்வு

பாலினம் மற்றும் வயது அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது ஏற்பட்டுள்ள சீரற்ற தாக் கத்தை ஐநா அமைப்பால் தொகுக்கப்பட்ட 2020-21ஆம் ஆண்டிற்கான விரைவான பாலின மதிப்பீட்டு ஆய்வு வெளிப்படுத்துகிறது. தொழிலாளர்களாக உள்ள ஆண் மற்றும் பெண்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் வேலையிழப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் வேலை செய்யும் வயதுடைய தாய்மார்களில் 29 சதவீதத்தினரும், குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் வேலை செய்யும் வயதுடைய ஆண்களில் 20 சதவீதத்தினரும் தங்க ளது வேலைகளை இழந்துள்ளனர். குழந்தைகளுடன் வசித்து வரும் இளம்பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கூலியுடனான வேலைநேரம் குறைந்துள்ளதை இளம்பெண்களில் 56 சதவீதத்தி னர் எதிர்கொண்டுள்ள நேரத்தில் குழந்தைகளுடன் உள்ள இளைஞர்களில் 44 சதவீதத்தினர் எதிர் கொண்டுள்ளனர். பராமரிப்பு மற்றும் வீட்டுவேலை யைப் பொறுத்தவரை, வீட்டு வேலை (67 சதவீத பெண்க ளும் 63 சதவீத ஆண்களும்) மற்றும் குழந்தைப் பரா மரிப்பு (70 சதவீத பெண்களும் 65சதவீத ஆண்களும்) தொடர்பான பணிச்சுமை அதிகரித்திருப்பதாக குழந் தைகளோடு வசித்து வரும் பெண்கள் தெரிவிக்கின்ற னர். தங்களது வேலையின் தீவிரம் அதிகரித்திருப்ப தாகவே (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேலை களுக்கு செலவிடப்பட்ட நேரம் குறித்த வரையறை யின்படி) பெரும்பாலானோர் தெரிவிப்பார்கள். இத்த கையதொரு பின்னணியில்தான் சமத்துவத்துடனான, சமூக நீதியுடனான உலகத்தை ஏற்படுத்திட மார்ச் 8ஆம் தேதியன்று பெண்கள் தங்களது கரங்களை உயர்த்தி சூளுரைப்பார்கள். 

தொழிலாளர்களின் உரிமைகளுக்கான தினமாக மே தினத்தை அனுசரிப்பதோடு, சர்வதேச அளவில் மிகவும் பரவலாக அனுசரிக்கப்படும் நாட்களில் ஒன் றாக மார்ச் 8ஆம் தேதி இருக்கக்கூடும். இத்தகைய பரவ லான ஆதரவு இத்தினத்திற்கு இருப்பதன் காரணமாக, “பெண்களின் பணிச்சுமையை குறைக்க” என்ற பெய ரில் வீட்டுப் பொருட்களையும், “உன்னை அழகுப் படுத்திட” என்று சொல்லி அழகுசாதனப் பொருட்களை யும் விற்கும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிறது. அதன் பின்னர், மகளிர் தினம் என்பது உலகம் முழுவதிலும் அரசுகள் சார்பில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தங்களது ஆட்சியின் கீழ் பெண்களின் நிலை சீர ழிந்து வருகின்ற உண்மை நிலையை மூடி மறைத்து, தங்களது அரசின் “பெண்களுக்கு ஆதரவான கொள்கைகளை” தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வாய்ப்பாகவே இத்தினம் அரசுகளால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. புரட்சிகரமான வரலாற்றில் வேரூன்றியிருக்கும் மகளிர் தினத்தின் செய்தியை மேற்கூறப்பட்டவாறு நீர்த்துப் போகச் செய்யப் படுவதை தடுத்திட பல ஆண்டுகளாக உலகம் முழுவ திலும் மாதர் அமைப்புகள் பாடுபட்டு வருகின்றன. இத்தினத்தின் வரலாற்றுப் பின்னணியை நினைவு கூர்வது இன்றியமையாததாகும்.

வாக்குரிமைக்கான போராட்டத்திலிருந்து...

1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று நடை பெற்ற சர்வதேச சோசலிச பெண்கள் மாநாட்டில், கிளாரா ஜெட்கின், அலெக்சாண்ட்ரா கொலந்தாய் போன்ற புரட்சிகரமான தலைவர்கள் “சர்வதேச மகளிர் தினத்தை” அனுசரிப்பதற்கான தீர்மானத்தை முன்வைத்தனர். பெரும்பாலான நாடுகளில் வாக்கு ரிமை என்பது உடைமை வர்க்கங்களின் ஆண்க ளுக்கான உரிமையாக மட்டும் இருந்த காலத்தில், அனைவரும் வாக்குரிமை என்பதற்கான பெண்க ளின் அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான அழுத்தத்தை இத்தீர்மானம் கொண்டிருந்தது. வாக்களிப்பதற்கான அரசியல் உரிமையை மையமா கக் கொண்ட பெண்களின் வாக்குரிமைக்கான போராட் டத்திலிருந்து மாறுபட்டு, உழைக்கும் பெண்களது நிலையின் கொடூரமான அவலத்தை முன்னிறுத்தி பொருளாதார சமத்துவத்திற்கான போராட்டத்தோடு அரசியல் சம உரிமைக்கான போராட்டத்தை சோசலிச பெண்கள் மாநாடு இணைத்தது.

“சோசலிசத்திற்கான போராட்டத்தில் பெண்களுக் கான வாக்குரிமை என்பது நமது பலத்தை ஒன்றிணைக் கும்” என்பதே வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மாநாட்டின் முழக்கமாக இருந்தது. இம்மாநாடு விடுத்த அறை கூவலை ஏற்று ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல லட்சக்கணக்கான உழைக்கும் பெண்கள், 8 மணி நேர வேலை, பிரசவத் திற்கான காப்பீடு உள்ளிட்ட தங்களது நியாயமான கோரிக்கைகளின்பால் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆதரவை தெரிவித்தும், தெருக்களில் ஆர்ப்பாட்டங்க ளையும், போராட்டங்களையும் நடத்தி மகளிர் தினத்தை அனுசரித்தனர். முதல் உலகப் போர் நடைபெற்ற தருணத்தில், போருக்கு எதிரான அமைதிக்கான முழக்கத்தையும் இணைத்து மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. இருந்த போதும், ரஷ்யப் புரட்சி நடைபெறும் வரை மகளிர் தினத்தை அனுசரிப்பதற்கு என எந்தவொரு குறிப்பான தேதியும் முன்வைக்கப்படவில்லை. அமைதி மற்றும் ரொட்டி எனும் முழக்கத்தை முன்வைத்து மார்ச் 8ஆம் தேதியன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பல்லாயிரக்க ணக்கான உழைக்கும் பெண்கள் தங்களது தொழிற் சாலைகளிலிருந்தும், வயல்களிலிருந்தும் வெளியேறினர். ஜார் ஆட்சியை தூக்கி எறிய வழிவகுத்த புரட்சிகர எழுச்சி க்கு இந்த பெண்களின் ஆர்ப்பாட்டம் கட்டியம் கூறியது.  ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், மகளிர் தினத்தை ஒட்டி மார்ச் 8ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக 1922ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் அறிவித்தது. அதன் பின்னர், உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பெண்கள் மார்ச் 8ஆம் தேதியன்று மகளிர் தினத்தை  அனுசரிக்கத் துவங்கினர். 

இந்தியாவில் முதல் முறையாக... 

இந்தியாவில் 1931ஆம் ஆண்டு லாகூரில் முதல் முறையாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. பெண் சமத்துவத்திற்கான கோரிக்கைகள் தேச விடுதலைக் கான கோரிக்கைகளோடு இணைக்கப்பட்டு, பெண் விடுதலை தேசவிடுதலையோடு இணைக்கப்பட்டு, சமூக-பொருளாதார காரணிகளை பரந்த அளவில் ஆய்வு செய்து இந்தியப் பெண்களின் அடுத்தடுத்த இயக்கங்களுக்கான கட்டமைப்பை உறுதியாக அமைத்து தீர்மானம் லாகூரில் நிறைவேற்றப்பட்டது.      காலனியாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தின் ஆட்சியையும் எதிர்த்துப் போராடுகின்ற பெண்கள், சோசலிசத்திற்காக போராடுபவர்கள், 1960கள் மற்றும் 70களில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் புரட்டிப் போட்ட மாதர் இயக்கங்கள் என எப்போதும் விரிவ டைந்து வரும் பெண்களின் பகுதியை இணைத்துக் கொண்டு மகளிர் தினத்தை அனுசரிப்பது என்பது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வேகமாகப் பரவி யது. இறுதியாக, 1975ஆம் ஆண்டில் மார்ச் 8ஆம் தேதியை “சர்வதேச மகளிர் தினமாக” ஐநா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவ்வாறாக, சுரண்டல் ஆட்சியதிகாரங்களுக்கு எதிரான, நாடுகளுக்கிடையேயும், வர்க்கங்களுக்கிடை யேயும், ஆண்கள்-பெண்களுக்கிடையேயும் காணப் படும் அசமத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பெண்களின் தியாகங்களோடு மார்ச் 8 இணைக் கப்பட்டது. ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்ட மாக இருந்ததைப் போலவே இது முதலாளித்து வத்திற்கும், அதன் மலிவான பெண் தொழிலாளர்க ளின் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான போராட்டமா கவும் இருந்து வந்தது.

இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு டையவை ஆகும். பெண்கள் மிகுந்த விழிப்பு ணர்வை பெற்றதோடு, சுயேச்சையான, தன்னாட்சி பெற்ற குடிமக்களாக தங்களது மதிப்பை உறுதிப் படுத்தியதால் மார்ச் 8 அன்று மாதர் இயக்கங்கள் எழுப்பும் கோரிக்கைகள் விரிவடைந்தன. பெண்களுக் கெதிரான பாலியல் ரீதியான மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பிரச்சனைகள், பெண்களின் உடல்களை கவர்ச்சியான பொருளாகக் கருதுவதற்கு எதிரான போராட் டங்கள், பாலின சிறுபான்மையினரின் உரிமைகள், குடும்ப அமைப்பினுள் சமத்துவத்திற்கான போராட்டம் ஆகியன இதற்கான உதாரணங்கள் ஆகும். 

குடும்ப அமைப்பினுள்...

இப்போராட்டக் களத்தில் பெயரற்ற, அங்கீகரிக்கப் படாத கணக்கிலடங்கா வீராங்கனைகள் உள்ளனர். இருப்பினும் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக இருந்தனர். பல தலைமுறையைச் சார்ந்த பெண்களால் கட்டியெழுப்பப்பட்ட இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இயக்கத்தை பாலினங்களுக்கு இடையேயான போராட்டமாக சுருக்குவது முட்டாள்தனமானதும், அற்பமானதும் ஆகும். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெண்கள் தங்களது சுதந்திரத்தை வலி யுறுத்துவது பாரம்பரியம், மரபு மற்று குடும்பம் ஆகிய வற்றின் பெயரில் கடுமையான எதிர்தாக்குதலை எதிர்கொள்கிறது.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்முறைச் சம்பவங்களும், இத்தகைய வழக்கு கள் பலவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகா ரத்தில் இருப்பவர்களால் பாதுகாக்கப்படுவதும் அதி கரித்து வருவதில் இத்தகைய எதிர்தாக்குதலின் யதார்த் தத்தை நாம் தற்போது இந்தியாவில் பார்த்து வருகி றோம். பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள் மீதே அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்கான பழியை சுமத்தும் பாலியல் ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப் படுவதை நாம் கண்டும், கேட்டும் வருகிறோம். 

ஆடைக் கட்டுப்பாடுகள் திணிக்கப்படுவதையும், சாதி வேறுபாடுகளைக் கடந்து இளம் வயதினர் சுய மாகத் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந் தெடுக்கும்போது “கௌரவக் கொலைகள்” அல்லது “லவ் ஜிகாத்” என்ற பெயரில் தாக்குவதையும், தலித் பெண்களுக்கு எதிரான கொடூரமான சாதியக் குற்றங்க ளையும், ஆதிவாசிப் பெண்கள் எதிர்கொள்ளும் இடப் பெயர்வின் கொடூர நடைமுறைகளையும் நாம் கண்டு வருகிறோம். குடும்ப அமைப்பினுள் பெண் இரண்டாம் தரமானவளாக நடத்தப்படுவதை பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியம் என ஏற்றுக் கொண்டு, அதைப் போற்றுகிற பெண்ணையே ஆதர்ச பெண்மணியாக முன்னிறுத்தும் சித்தாந்தங்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். 

இன்றைக்கும் பொருத்தமாய்...

பெருஞ்சுமையை பெண்களை சுமக்கச் செய்யும் பொருளாதார அசமத்துவத்தின் அருவருக்கத்தக்க வளர்ச்சியை நாம் பார்க்கிறோம். தொழிலாளர்க ளுக்கு எதிரான தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அறி முகப்படுத்தப்பட்டதன் மூலம், மார்ச் 8 ஐ அனுசரிக்கத் துவங்கிய நாட்களில் முன்வைக்கப்பட்ட முழக்கங்க ளான சமஊதியம் மற்றும் 8 மணி நேர வேலை ஆகியன ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இருந்ததைப் போன்று இன்றைக்கும் பொருத்தமானவையாகவே உள்ளன. வாக்குரிமையை நாம் வென்றெடுத்துள்ளோம். ஆனால், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளில் சம வாய்ப்பு நமக்கு இன்னமும் மறுக் குப்பட்டு வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கிடப்பில் போடப்பட்டிருப்பதில் இதைக் காண முடிகிறது.  பெண்களின் போராட்டங்கள், பெண்களின் முன்னேற்றம் மற்றும் இந்தியாவில் பல துறைகளில் உள்ள தடைகளை தகர்த்தெறிவது ஆகியவற்றில் எதிர்த்துச் செயலாற்றும் சக்தியாக இருப்பது பெண்க ளின் மீள்சக்தி, வலிமை மற்றும் துணிச்சலின் பிரதி பலிப்பாகும். இப்போராட்டப் பாதையில் இதற்கு முன்னர் பயணித்தவர்களால் இப்பாதை எளிதாக ஆக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் தேதியின் வரலாறு இத்தகைய போராட்டத்தில் பொதிந்துள்ளது.  கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் நடிகை பாவனா தனது பயணம் குறித்து சமீபத்தில் கூறி யதைப் போல், “பாதிக்கப்பட்டவள் என்பதிலிருந்து மீண்டெ ழுந்தவளாக நான் மாறியிருக்கிறேன்”. ஆம், இந்த மார்ச் 8ஆம் தேதியன்று – பாதிக்கப்பட்டவள் என்பதிலிருந்து மீண்டெழுந்த போராளியாக பெண்கள் முன்னேறுகி றார்கள். இதுவே மார்ச் 8ஆம் தேதியன்று நாம் அனு சரிக்கும் நமது வரலாறு ஆகும்.   

நன்றி : என்டிடிவி.காம், 
தமிழில் : எம்.கிரிஜா