நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்த லில், மக்கள் பிரச்சனைகள் பெரிதும் விவா திக்கப்பட்டன. வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், மக்களின் வாங்கும் சக்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி - இவையெல்லாம் எதிர்க்கட்சி களால் தேர்தல் களத்தில் விவாதமாக வைக்கப் பட்டன.
கணக்கீடுகளும், அரசின் நிலைபாடும்
சிட்டி குழுமம் (CITI group) 2024 ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, வரும் 10 ஆண்டுக ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 1.2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே, ஒவ்வொரு வருடமும் வேலை தேடி சந்தையில் நுழை பவர்களின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்க இயலும்; ஆனால் ஒவ்வொரு வருடமும் 80லிருந்து 90 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுவதாக அது குறிப்பிட்டது. தன்னை விமர்சிக்கும் எந்தத் தரவு களையும் ஏற்க மறுக்கிற, அவதூறு செய்கிற மோடி அரசு இந்தப் புள்ளி விபரங்களையும் மறுத்தது.
2017-18 முதல் 2021-22 காலகட்டத்தில் 8 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக KLEMS அறிக்கையை மேற்கோள்காட்டி, மோடி அரசின் விருப்பத்திற்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் சொல்லப் பட்டது. அப்படியென்றால் சராசரியாக ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள்! ஆனால் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது, 2017-18 முதல் 2021-22 காலகட்டமென்பது பல்வகையான நெருக்க டிகளை இந்த தேசம் சந்தித்த காலம். 2016ல் எந்த வித முன்னறிவிப்புமின்றி அமல்படுத்தப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, பின்னர் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, அதன் பின்னர் வந்த கோவிட் பெருந்தொற்று - இவை இந்தியப் பொருளா தாரத்தை மேலும் நெருக்கடிக்கு இட்டுச் சென்றன. இந்தக் கால கட்டத்தில் வேலை இழப்புகள்தான் ஏற் பட்டன. ஆனால் இக் கால கட்டத்தில் 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக KLEMS அறிக்கை சொல்வதும், அதனை மோடி அரசு உயர்த்திப் பிடிப்ப தும் நம்பத் தகுந்தவை அல்ல.
“இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்” ஜூன் 2024ல் வேலையின்மை 9.2% ஆக (மே 2024ல் 7%) உயர்ந்துள்ளதாகச் சொல்கிறது. 2023-24 நிதி ஆண்டில் 3.7 கோடிப் பேர் வேலை தேடுபவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்கிறது.
இந்த அமைப்பு, வேலை தேடி சலித்துப்போய் வேலை தேடுவதை நிறுத்தியவர்களையும் கணக்கி லெடுத்துக் கொள்கிறது. அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் இதனை அங்கீகரிப்பதில்லை.
இந்தியாவில் அமைப்புசார் நிறுவனத் தொழிலா ளர்கள், முறைசாரா தொழிலாளர்கள்என இரண்டு வகையினரும் உள்ளனர். அமைப்புசார் தொழிலா ளர் குறித்த விபரங்களை ஆண்டுதோறும் வெளியிடப் படும் புள்ளி விவரங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால் முறைசாரா தொழிலாளர் என வரு கின்ற போது அது எளிதானதாக இல்லை. இந்திய தொழி லாளி வர்க்கத்தின் 94%பேர் முறைசாரா துறைகளில் பணி புரிகின்றனர். இவர்களிடம் சர்வே செய்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆகையினால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் (சென்சஸ்) ஒன்றிய அரசின் “புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Program Implementation)” சார்பாக வெளியிடப்படும் “இணைக்கப்படாத துறை நிறுவனங்கள் குறித்த ஆண்டுக் கணக்கீடு” (Annual Survey Of Unincor porated Sector Enterprises ASUSE) வெளியிடும் விபரங்களும் தான் சரியான புள்ளி விவரங்களைத் தர முடியும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு க்கு பின்னர் இன்னும் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. எனவே, பலவீனமான புள்ளி விபரங்களைக் கொண்டே மோடி அரசு வாதங்களை முன்வைக்கிறது.
மாறுபட்ட கள நிலவரம்
ஆனால் கள நிலவரம், அரசு சொல்கின்ற புள்ளி விபரங்களிலிருந்து முற்றிலும் மாறானதாக உள்ளது. இந்திய நாட்டின் இளைஞர்கள் ஒரு நிரந்தர வேலைக் காக கடுமையான போராட்டத்தை நடத்துகின்றனர். இதற்கு பல சம்பவங்களை நாம் குறிப்பிட்டுக் காட்ட முடியும்.
கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 60,000 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப் பட்ட போது, அதற்கு 47 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. 2022ம் ஆண்டு, ரயில்வே துறையில் தொழில் நுட்பமற்ற துறைகளுக்கான 35,000 பணியிடங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டபோது 1.25 கோடிப் பேர் அதற்கு விண்ணப்பித்தனர். 2022 ம் ஆண்டு அக்னிபாத் திட்டம் மோடி அரசால் அறிவிக்கப் பட்ட போது, பீகார், உத்தரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தகுதிக்குக் குறைவான பணிகள் (Underemploy ment) என்பது இந்தியாவில் ஒரு பொருட்டாகவே பார்க்கப்படவில்லை. அது குறித்த புள்ளிவிவரங்க ளைச் சேகரிப்பதையும் அரசு ஒரு முக்கியப் பணி யாக நினைக்கவில்லை. இன்று ‘கிக்’ (Gig) வேலை களில் தகுதிக்குக் குறைவான பணிகளையே (Under employment)இந்தியாவில் பல இளைஞர்கள் மேற் கொள்கின்றனர்.
பல்கிப் பெருகும் கிக் பொருளாதாரம்
“நிதி ஆயோக்” அமைப்பின் சமீபத்திய ஒரு அறிக் கையின்படி, இந்தியாவில் கிக் பணி புரிவோரின் எண்ணிக்கை, 2029-30ல் 2.35 கோடிகளாக உயரும். இது, 2020-21ல் இருந்த 07.7 கோடியில் இருந்து மூன்று மடங்காகும்.
ஊபர் நிறுவனத்தில் 10 லட்சம் பேர் இந்தியா முழு வதும் ஓட்டுநராக பணி புரிகின்றனர். சொமாட்டோ நிறு வனத்தில் 3.5 லட்சம் பேர் டெலிவரி பார்ட்னர்களாக பணிபுரிகின்றனர். அர்பன் கம்பெனியில் 40,000 பேர் பணி புரிகின்றனர். இவர்கள் அனைவருமே ‘பார்ட்னர் கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனை வருக்குமே செயல்திறனுக்கேற்றவாறு ஊக்குவிப்பு தொகையே வழங்கப்படுகிறது. (Performance based Incentive). அது ஊதியம் என அழைக்கப்படுவ தில்லை. அவர்கள் தொடர்ந்து அப் பணியில் தொடர வேண்டுமெனில் அவர்களுக்கு மதிப்பீடுகள் (Rating) உள்ளன. அந்த ரேட்டிங்கை அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனில் பணியிலிருந்து நீக்கப்படு வார்கள். உதாரணத்திற்கு அர்பன் கம்பெனியில் 4.5 என்கிற ரேட்டிங்கை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு கிடை யாது. சமூக நலத் திட்டங்கள் எதுவும் கிடையாது. இந்தியாவில் ‘கிக் பொருளாதாரம்’ ஒரு வளரும் பொருளாதாரம் எனவும், அதனுடைய ஆண்டு வளர்ச்சி 17 சதவீதமாக இருப்பதாகவும், இந்த ஆண்டில் (2024) அதன் வளர்ச்சி 455 பில்லியன் டாலர்களை கடந்து விடும் என்றும், இந்தியாவின் முதலாளிகள் அமைப் பான “அசோசியேட்டட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி” சொல்கிறது.
மறுபுறம், 2021-31 கால கட்டத்தில் இந்தியாவில் வேலை தேடும் வயதில் உள்ள இளைஞர்களின் (Working Age Population) எண்ணிக்கை 9.7 மில்லி யனாக இருக்கும் எனவும், இது சமூகத்தில் பயங்கர மான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
ஏமாற்று வேலையே
ஆனால் மோடி அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் இவை எவற்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வில்லை. மோடி அறிவித்துள்ள பயிற்சித் திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலைக்கு வருபவர்களுக்கு முதல் மாத ஊதியத்தை அரசே கம்பெனிக்குக் கொடுக் கும் என்கிற அறிவிப்பும் , பிரதமரின் 12 மாத பயிற்சித் திட்ட அறிவிப்பும் நிரந்தர வேலைவாய்ப்புகளை உரு வாக்குவதற்கும், அதிகரிப்பதற்கும் எவ்வகையிலும் உதவப் போவதில்லை. மேலும் இப் பயிற்சித் திட்டங்க ளெல்லாம் ஒரு குறுகிய கால வேலைவாய்ப்புகளா கவே இருக்கும். இது, எதிர்காலத்தில் வேலைவாய்ப் பற்றோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதற்கே இட்டுச் செல்லும்.
“ILO (சர்வதேச தொழிலாளர் அமைப்பின்) அறிக்கை உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் 12லிருந்து 14 சதவீதமாக தேக்க நிலையில் உள்ள தாக எச்சரிக்கை செய்கிறது. கோவிட் பெருந்தொற் றிற்குப் பின்பு, வேளாண் துறை அற்ற இடங்களிலி ருந்து தொழிலாளர்கள் வேளாண் துறை நோக்கி நகர்வதாகவும் கூறியது. பல்வேறு அறிக்கைகளும் 2022-23ல் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 45.76%பேர் வேளாண் துறையிலேயே பணிபுரிவ தாகச் சொல்கின்றன. அரசாங்கம் மந்திரத்தால் நிலை மையை மாற்றிவிட முடியாது. எனினும், தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் வேண்டும். தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகள், மக்களின் வேலைச்சுமையைக் குறைப்ப தற்கே தவிர, அவர்களின் வாழ்வில் தடைக்கற்களை ஏற்படுத்துவதற்கு அல்ல. வேலை இழப்புகளைத் தடுப் பதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதற்கும், தொழிலாளர் நல அமைச்சர், தொழிலாளர் நலச் சட்டங்களைத் தாண்டி கடுமையான நோய் தீர்க்கும் மருந்தினை யோசிக்க வேண்டும். வேளாண் உற்பத்தியை தொழில்மயமாக்குவதற்கு, அரசின் முதலீட்டையும், கூட்டுறவு முதலீட்டையும் அரசு கணக் கில் கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்புகளை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி, சமூக மற்றும் அரசியல் கிளர்ச்சிகளை ஏற் படுத்தும் என்பதனை சமீபத்திய உலகளாவிய அனுப வங்கள் உணர்த்துகின்றன” என ஆங்கில இந்து பத்திரி கையின் (18.7.2024) தலையங்கம் கூறுகிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றுகிற ஒரு அரசால், வேலையின்மைப் பிரச்ச னைக்கு நேர்மையான, நியாயமான தீர்வினைத் தர இயலாது.
மோடி அரசு வேலைவாய்ப்புக்களை உருவாக்கு வதில் யதார்த்த கள நிலவரங்களை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. வேலையின்மையைக் களைய வேண்டும் என்கிற அரசியல் உறுதிப்பாட்டோடு இந்த அறிவிப்புகள் செய்யப்படவில்லை. வேலை என்கிற பெயரில் இது ஒரு ஏமாற்று வேலையே.