articles

மோடி அரசின் தாக்குதல்களும் ஆம் ஆத்மியின் தவறுகளும்

தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்த லில் பாஜக 45.6 சதவீத வாக்குகளைப் பெற்று 48 இடங்களைக் கைப்பற்றி வெற்றி  பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியானது 43.6  சதவீத வாக்குகளைப் பெற்று 22 இடங்களைப் பெற்றிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடை யேயான வாக்கு வித்தியாசம் என்பது வெறும்  2 சதவீதமே என்ற போதிலும், பாஜக, ஆம்  ஆத்மி கட்சியை விட கூடுதலாக 26 இடங்களைப்  பெற்றிருக்கிறது.

ஊதுகுழல்களின் விமர்சனம்

தில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பல்  வேறு நிலைபாடுகளில் நின்று ஆய்வு செய்யப் பட்டுக்கொண்டிருக்கிறது. தில்லியில் பாஜக 27 ஆண்டு காலத்திற்குப் பின்னர் வெற்றி பெற்றி ருப்பது என்பது அக்கட்சிக்கும், மோடி அர சாங்கத்திற்கும் ஊக்கத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதே  சமயத்தில் பத்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி தோற்கடிக்கப்பட்டிருப்பது என்பது குறிப்பிட்ட ஒரு வழியில் வியாக்கியானம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. கார்ப்ப ரேட் ஊடகங்களும், ஒன்றிய ஆட்சியாளர்  களின் ஊதுகுழல்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விமர்சகர்களும் முன் வைத்திடும் கருத்து என்னவெனில், ஆம்  ஆத்மி கட்சி செய்த தவறுகளாலேயே வாக்கா ளர்களால் அது தண்டிக்கப்பட்டிருக்கிறது என்ப தாகும். ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தில்  தோன்றிய ஆம் ஆத்மி கட்சி, தற்போது ஊழல்  குற்றச்சாட்டுகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ள தாகவும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரி வாலின் பிம்பம் கறைபடிந்துள்ளதாகவும் கூறப்  படுகிறது. மற்றொரு பிரபலமான கூற்று என்ன வென்றால், ஆம் ஆத்மி கட்சி தனது முதல் முழு  பதவிக்காலத்தில், ஒரு வீட்டிற்கு 200 யூனிட்  வரை இலவச மின்சாரம்; இலவச நீர் விநியோ கம் மற்றும் மொஹல்லா மருத்துவமனைகள் அமைத்தல் மற்றும் அரசுப் பள்ளிகளை மேம்  படுத்துதல் போன்ற ஏழை மக்களின் நலனுக்கா கப் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி யது. ஆனால் அது இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்தபின்னர், மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தியதைத் தவிர  மற்றெதையும் செய்யத் தவறிவிட்டது என்பதா கும். துணைநிலை ஆளுநருக்கும் ஆம் ஆத்மி  அரசுக்கும் இடையிலான மோதலும் ஒரு கார ணமாகக் கூறப்படுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி

எனவே, மோடியின் உத்தரவாதங்கள் மற்றும் இரட்டை எஞ்சின் அரசாங்கம் மக்களின்  ஆணையைப் பெற்றதன் மூலம், ஆம் ஆத்மி  கட்சிக்கு எதிராக அதிகரித்து வந்த எதிர்ப்பு உணர்வு அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்  படுத்தியுள்ளது என்று முடிவு செய்யப்பட்டி ருக்கிறது. ஆம் ஆத்மி அரசாங்கத்தின் இரண்டாவது தடவை பதவிக்காலத்தில் (2020-25), அதன் முக்கிய வாக்குறுதிகளில் சிலவற்றை நிறை வேற்ற முடியவில்லை என்பது உண்மைதான். சாலைகள், கழிவுநீர், குப்பை அகற்றல் மற்றும்  குடிநீர் வழங்கல் போன்ற உள்கட்டமைப்பு வசதி கள் சீரழிந்து வந்ததானது நடுத்தர வர்க்கத்தின ரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

சாமானியர் அணுக முடியாத நிலை

ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்தமற்ற அணுகு முறையே அதற்கு மிகப்பெரும் பாதிப்பாக உரு வானது. ஆர்எஸ்எஸ்/பாஜகவின் வெறித்தன மான இந்துத்துவா அரசியலுக்குப் போட்டி யாக, ஆம் ஆத்மி கட்சியும் இந்து மத அடையா ளங்கள் மற்றும் உணர்வுகளுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து மக்களைத் தங்கள் பக்கம்  இழுக்க முயன்றது. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின ரால் முஸ்லீம் சிறுபான்மையினர் தாக்கப்பட்ட போது, அதற்கு எதிராக ஒரு நிலையான நிலைப்  பாட்டை எடுப்பதைக் கவனமாகத் தவிர்த்தே வந்தது. ஆம் ஆத்மி அரசாங்கமும் சாமானி யர்களால் அணுகமுடியாத ஒன்றாக மாறிப் போனது. தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் மக்களின் பல்வேறு பிரிவின ரின் குறைகளை ஆம் ஆத்மி அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இறுதியாக, ஆம் ஆத்மி கட்சி என்பது ஊழ லற்ற கட்சி என்றும், அது சாமானியர்களின் கட்சி  என்றும் தன்னைக் கூறிக் கொண்டதும், முதல மைச்சர் இல்லத்தை விலையுயர்ந்த முறை யில் புதுப்பித்ததன் மூலம் சிதைந்தது. இதற்கெ திராக பாஜக மேற்கொண்ட பிரச்சாரம் கணிச மான வாக்காளர்களின் மத்தியில் எதிரொலித்தது.

மோடி அரசு, பாஜகவின்  தொடர் தாக்குதல்கள்

இவை அனைத்துக்கும் மேலாக, மோடி அர சாங்கமும் பாஜகவும் ஆம் ஆத்மி அரசாங்கத்  தின் மீதும் அதன் தலைமை மீதும் மேற்கொண்ட தாக்குதல்களும் கொஞ்சநஞ்சமல்ல. தேசியத் தலைநகரான தில்லியில் மோடி அரசாங்கமும், பாஜகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பவை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காதவைகளாகும். அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான வழி முறைகளைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசு மாநில அரசைக் கைப்பற்றியது. 1991ஆம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி, துணைநிலை ஆளுநர் மூலம் காவல் துறை, சட்டம்-ஒழுங்கு மற்றும் நிலம் ஆகியவற்றை ஒன்றிய அரசின் கீழ் கொண்டுவந்து தில்லி  அரசாங்கத்தின் அதிகாரங்களைக் கட்டுப் படுத்தியது. ஆயினும் 2020 நடைபெற்ற தேர்த லில் ஆம் ஆத்மி கட்சியை அதனால் தோற்க டிக்க முடியவில்லை. பின்னர் தில்லி அர சாங்கத்திடமிருந்தும், அதன் அமைச்சகத்திடமி ருந்தும் அவற்றின் நிர்வாக சேவைகளின் கட்டுப்  பாட்டைப் பறிக்கும் ஒரு கொடூரமான திட்டத்தை யும் மோடி அரசாங்கம் மேற்கொண்டது

. அதிகாரத்தை பறித்த அவசரச் சட்டம்

தில்லி அரசாங்கத்தின் அதிகாரிகளை நிய மனம் செய்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்ற அதிகாரங்களை துணைநிலை ஆளு நர் பயன்படுத்தத் தொடங்கினார். தில்லி அர சாங்கத்தின் அதிகாரிகள், தில்லி அரசாங்கத் தின் அமைச்சர்களின் பேச்சைக் கேட்பதை நிறுத்தி விட்டு, துணைநிலை ஆளுநரின் உத்தரவு களுக்காகக் காத்திருந்தனர். இதனை எதிர்த்து  தில்லி அரசாங்கம் உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் 2023 மே மாதத்தில் ஒரு தீர்ப்பில், பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும்  நிலம் ஆகிய துறைகளைத் தவிர இதர நிர்வாக  சேவைகளின் மீது தில்லி அரசுக்கு கட்டுப்பாடு உள்ளது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை  ஒன்றிய உள்துறை அமைச்சரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த சேவைகளை உட னடியாக துணைநிலை ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் ஒப்படைக்கும் விதத்தில் ஓர் அவ சரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இது பின்னர்  தில்லி அரசாங்கச் சட்டத்தில் ஒரு திருத்தமாக இணைக்கப்பட்டது.

அமைச்சர்கள் பேச்சை  கேட்காத அதிகாரிகள்

இந்தக் காலகட்டம் முழுவதும், அதிகாரிகள்  அமைச்சர்களின் பேச்சைக் கேட்காதது மட்டு மல்லாமல், பெரும்பாலும் அமைச்சர்கள் வழங்கிய வழிகாட்டுதலுக்கு எதிராகவும் செயல்படும் ஒரு காட்சி வெளிப்பட்டது. துணை நிலை ஆளுநரும் மூத்த அதிகாரிகளும் அமைச்  சர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்ப தில் உடந்தையாக இருந்தனர். இதற்கு மேல்,  மூத்த அமைச்சர், துணை முதல்வர் மற்றும்  இறுதியாக முதல்வர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்  பட்டனர். தண்ணீர் போன்ற பல அத்தியாவசி யப் பொருட்கள் ஒன்றிய அரசின் அதிகார அப கரிப்பால் பாதிக்கப்பட்டன. உதாரணமாக, தில்லி சட்டமன்றம் 2024 பிப்ரவரியில் பட்ஜெட் ஒதுக்கீட்டில் தில்லி ஜல் வாரியத்திற்கு 3,000  கோடி ரூபாய் ஒதுக்கியது. இது சட்டமன்றத் தால் சட்டமாக நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டில்  செய்யப்பட்ட ஒரு விதியாகும். இருப்பினும், நிதிச் செயலாளர் இந்த நிதி ஜல் வாரியத் திற்குச் செல்வதைத் தடுத்தார். இந்த விஷ யத்தில் நிவாரணம் பெற தில்லி அரசு, உச்ச நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

மோடி அரசின் நாசவேலையும் ஆம் ஆத்மியின் செயலற்ற தன்மையும்

இவ்வாறு மோடி அரசாங்கம் மூத்த அதிகாரி களுடன் இணைந்து   மேற்கொண்ட நாச வேலை களும், ஆம் ஆத்மி கட்சியின் செயலற்ற தன்மை யும் சேர்ந்து அதற்கான விலையை இப்போது ஆம் ஆத்மி கட்சி செலுத்தியுள்ளது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்து வத்தின் மீது பாஜகவின் மோசமான தாக்குத லைத் தோற்கடிக்க அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற  அழைப்பாக தில்லியில் நடைபெறும் இந்தத் தேர்தல் போர் இருந்திருக்கும் என்று ஒருவர்  நினைத்திருக்கலாம். ஆயினும் இது நடக்க வில்லை. ஆம் ஆத்மி கட்சி இந்தப் பிரச்சா ரத்தை மக்கள் மத்தியில் சக்திவாய்ந்த முறை யில் கொண்டு செல்லவில்லை.

காங்கிரசின் தவறான அணுகுமுறை

இந்தத் தேர்தல்களில் காங்கிரஸின் நிலைப் பாட்டை ‘இந்தியா’ கூட்டணியின் இதர கட்சிகள் சரியாகவே விமர்சித்திருக்கின்றன. காங்கிரஸ்  தேர்தல் பிரச்சாரம் ஆம் ஆத்மி கட்சியைத்  தோற்கடிப்பதிலும், அதன் தலைவர் கெஜ்ரி வாலை ஊழல்வாதி என்று முத்திரை குத்துவதி லும்தான் அதிக கவனம் செலுத்தியது. ராகுல்  காந்தியே இந்தப் பிரச்சாரத்திற்கான தொனியை  அமைத்தார். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்த லில் 4.26 சதவீதத்தை மட்டுமே பெற்ற காங்கி ரஸ் கட்சி, ஆம் ஆத்மியுடன் எந்தப் புரிதலும்  இல்லாதபோது, சட்டமன்றத்தில் உள்ள 70  இடங்களிலும் போட்டியிட்டிருக்கக் கூடாது. ஆம் ஆத்மியின் தோல்விக்கு முக்கியக் கார ணம், அதிலிருந்து பெரிய விலகல்தான் என்றா லும், ஆம் ஆத்மி தோல்வியடைந்த 13 இடங்க ளில், காங்கிரஸ் தோல்வியின் வித்தியாசத்தை விட அதிக வாக்குகளைப் பெற்றது என்பதும் உண்மை. ஆம் ஆத்மி தலைவர்கள் - கெஜ்ரி வால், மனிஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ் - அனைவரும் காங்கிரஸ் பெற்றதை விட குறை வான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தனர். மதச்சார்பற்ற-ஜனநாயக எதிர்க்கட்சி களுக்கு இந்த முடிவுகள் ஏமாற்றத்தை அளித்தா லும், கிட்டத்தட்ட 44 சதவீத வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பதும் அவர்களில் பெரும்பகுதியினர் ஏழை கள் மற்றும் பெண்கள் என்பதும் உண்மை யாகும்.