articles

img

ரயில்வே சங்க அங்கீகாரத் தேர்தல் : 88.91% வாக்குப்பதிவு -அ.ஜானகிராமன்

ரயில்வேயில் நடைபெற்ற தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் தொழிலாளர்கள் மவுனப் புரட்சியை ஏற்படுத்துவார்கள் என தட்சிண ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயல் தலைவர் அ.ஜானகிராமன் தெரிவித்தார். 

ரயில்வேயில் செயல்படும் தொழிற்சங்கங் களுக்கான அங்கீகாரத் தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 76,653 பேரில் 88.91 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 

எதிரணியின் முறைகேடு முயற்சிகள்

மதுரையில் மஸ்தூர் யூனியன் நிர்வாகி களால் பெண் தோழர்கள் தாக்கப்பட்டனர். புத்தூரில் டிஆர்இயு கிளைச் செயலாளர் சுரேஷ் தாக்கப்பட்டார். மாற்று சங்க  தலைமையான ஏஐஆர்எப், எஸ்ஆர்எம்யு  ஆகியவை ஜி-பே மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.2,000, ரூ.1,000, சில இடங்களில் ரூ.500 மற்றும் பிரியாணி டோக்கன் என பல்வேறு பொருட்களை விநியோகம் செய்தனர். 

 மஸ்தூர் யூனியனின் ஆதிக்கம் 

கடந்த பத்தாண்டுகளாக ஒரே அங்கீகாரம் பெற்ற மஸ்தூர் யூனியன் தொழிலாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. ஒவ்வொரு பிரச்சனையைத் தீர்க்க வும் தொழிலாளர்களிடம் பேரம் பேசியே செயல்பட்டனர். பணம் வாங்கியும் சில விஷயங்களை முடிப்பதில்லை. தொழி லாளர்களை மிரட்டி பணம் பறிப்பது, தாக்கு வது என நேரடியாக ரவுடித்தனத்தில் ஈடுபட்டனர். 

 டிஆர்இயுவின் மக்கள் பணி 

டிஆர்இயு தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது. தேர்தல் பிரச்சா ரங்களில் டிஆர்இயு கிளை நிர்வாகிகள், டிவிஷன் நிர்வா கிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி னர். டிப்போ வாரி யாக, கிளை வாரி யாக, செக்‌ஷன் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். 

வடமாநில தொழிலாளர்களின் ஆதரவு 

வடமாநில தொழிலாளர்களின் இடமாற்றல் கோரிக்கையை முதல் கோரிக்கையாக ஜிஎம், பிஎன்எம் கூட்டத்தில் வைத்து தீர்வு காண்போம் என டிஆர்இயு வாக்களித்தது. இது பெருவாரியான வடமாநில தொழிலாளர்களை டிஆர்இயுவின் ஆதரவாளர்களாக மாற்றியது. 

பல்வேறு அமைப்புகளின் ஆதரவு 

டிஆர்இயுவை ஆதரித்து 9 அமைப்புகள் கடிதம் அளித்தன: 
- லோக்கோ பைலட்கள் சங்கம்
- நிலைய அதிகாரிகள் சங்கம்
- இன்ஜினியர்களின் அமைப்பு
- விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க அமைப்பு
- கமர்ஷியல் கிளார்க்குகள் அமைப்பு
- அக்கவுன்ட்ஸ் கிளார்க்குகள் அமைப்பு
- மாற்றுத் திறனாளிகள் அமைப்பு
- பாரதிய ரயில்வே எம்ப்ளாயீஸ் சங்கம்
- டிரெயின் கார்டுகள் அமைப்பு 

 எதிரணியின் தோல்வி 

மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் நடிகர்  மேடைப்பேச்சு போல் எழுதி வைத்து, மேக்கப்புடன் டிஜிட்டல் எல்இடி டிவி மானிட்டர் காட்சிகளுடன் ஹைடெக் பிரச்சாரம் செய்தார். ஆனால் டிஆர்இயு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை. 

 தொழிலாளர்களின் நம்பிக்கை 

பெருவாரியான தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாப்பது டிஆர்இயு தான், இவர்களால் தான் அராஜகவாதிகளுக்கு பதில்  தர இயலும் என்ற நம்பிக்கையோடு வாக்க ளித்துள்ளனர். தொழிலாளர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் டிஆர்இயுவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்ததை பார்க்க முடிந்தது.

“ஒட்டுமொத்த ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திற்கும் மிகப்பெரிய உத்வேகத்தை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும்” என அ.ஜானகிராமன் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் கூறினார்.