திருவள்ளூர், ஆக 6- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள குருராஜ கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டு பில்லாகுப்பத்தில் அருந்தி யர் மக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை பருகியதால் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி அருகில் உள்ள குருவராஜ கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பில்லா குப்பத்தில் 60க்கும் மேற்பட்ட அருந்தி யர் இன மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். மரம் வெட்டுவது, கழிவுநீர் தொட்டி கட்டுவது உள்ளிட்ட பல வேலை செய்து வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் என்பதால் அனைத்தும் பராமரிப்பின்றி வெடிப்புகள் ஏற்பட்டு, எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகள் அருகில் 2012 ஆம் ஆண்டு மேல்தேக்க தொட்டி கட்டப் பட்டுள்ளது. இந்த தொட்டி பல வருடங்களாக சுத்தம் செய்யப்பட்டா மல் இருக்கிறது. இதனால்தொட்டியின் உள்ளே தவளைகள், புழு, பூச்சிகள் அதிகம் வளர்ந்துள்ளது. பாசிகள் படர்ந்து தொட்டி முழுவதும் நிறைந் துள்ளது.இதனால் அழுக்கும் துர்நாற்றம் கொண்ட அந்த தண்ணீரை தான் அருந்ததியர் இன மக்கள் பருகி வருகின்றனர்.
இந்த தண்ணீரை பருகியதால், அம்மக்களுக்கு கடந்த மூன்று மாதங்க ளாக வாந்தி மற்றும் வயிற்று போக்கு தொற்றால் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர். இதில் வெங்கையா (வயது 62), ரேணுகாம்மா (55), ஆகியோர் கடந்த ஒரு மாதமாக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 50க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள் ளனர்.
தொற்று நோயால் 2 பேர் பலி
பில்லா குப்பத்தில் தொற்றுநோய் பரவலால் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுவருகிறது. இதில் கிஷ்டம்மா (48), என்பவர் கடந்த வார மும் உதயகுமார் (19), என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு பலியாகினர். இதனை தொடர்ந்துஅந்த கிராமத்தில் தொற்று நோய் வேகமாக பரவிவரு கிறது. இதனால் அம்மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் தெரி விக்கையில், குடிநீர் தொட்டியை மாதத்திற்கு இரண்டுமுறை சுத்தம் செய்ய வேண்டும், பிளிச்சிங் பவுடர் கொண்டு தொட்டியை சுத்தம் செய்த பிறகு குளோரைடு மாத்திரைகள் போட வேண்டும். ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் ரூ.300 வழங்க வேண்டும். இந்த நடைமுறை களை எதையும் நிர்வாகம் பின்பற்ற வில்லை என தெரிகிறது.
மேலும் அருந்ததியர் இன மக்கள் மிகவும் வறுமையில் வாழ்வதால், தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மாணவர்கள் வேதனை
பில்லா குப்பத்தில் 5 ஆம் வகுப்பு முடித்த பிறகு, 5 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள ஈகுவார்பாளை யத்திற்கு நடந்து சென்று தான் 6 ஆம் வகுப்பு படிக்க வேண்டும், படிப்ப தற்கு போதிய போக்குவரத்து வசதி வாய்ப்புகள் இல்லாததால் மாணவிகள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொள்கின்ற னர். மாணவிகளின் இடைநிற்றலை தடுத்துநிறுத்தவேண்டும், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளை அருந்த தியர் இன மக்களுக்கு வழங்க ஆவண செய்யவேண்டும், இதனை கும்மிடிப் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முறையாக கண்காணிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- பெ.ரூபன்