தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையை நாம் கவலையுடன் பார்த்து வரு கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
அண்மைய சம்பவங்கள்
நமது மாநிலத்தில் அண்மைக்காலமாக நடந்து வரும் துயரமான சம்பவங்கள் நம் சமூகத்தின் நிலையை பிரதிபலிக்கின்றன. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு முதல், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன் கொடுமை வரை பல கொடூரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கிருஷ்ணகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், திருச்சி மணச்ச நல்லூரில் ஆசிரியர்களால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், சென்னையில் வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் கொல்லப்பட்டதும் நமது சமூகத் தின் சீரழிவைக் காட்டுகின்றன. சமீபத்தில் வேலூரில் இருந்து புறப்பட்ட ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவமும், தஞ்சை மாவட்டத்தில் இளம் பெண்ணை மிக மோசமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி உயிருக்கு போரா டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த சம்பவமும், சென்னையில் மாணவிகளை பாலி யல் வணிகத்திற்கு தள்ளிய கொடுமையும் சமூகத்தை உலுக்கியுள்ளன.
சட்ட அமலாக்கத்தின் குறைபாடுகள்
தமிழகத்தில் குழந்தைகள் ஆணையம், தலைவர் இல்லாத ஆணையமாகவே உள்ளது. காவல்துறை பல வழக்குகளில் போக்சோ புகார்களை பதிவு செய்வதற்கு தயக்கம் காட்டு கிறது. பெரும்பாலான வழக்குகள் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே பதிவு செய்யப்படு கின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட விவரங் கள் வெளியிடப்பட்டதும், கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் தாயையே முதல் குற்றவாளியாக்கி யதும் காவல்துறையின் செயல்பாட்டை கேள்விக் குறியாக்கியுள்ளது. அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 1,054 குழந்தை திருமணங்களும், 2024 ஆம் ஆண்டில் 1,640 குழந்தை திருமணங்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஈரோடு, திருநெல் வேலி, பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த எண் ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
பல்வேறு வகையான வன்முறைகள்
பெண்கள் மீதான வன்முறை பல வடிவங்க ளில் தொடர்கிறது:
- குடும்ப வன்முறை G பணியிட பாலியல் துன்புறுத்தல்
- பொதுப் போக்குவரத்தில் துன்புறுத்தல்
- வரதட்சணை கொடுமைகள்
- சாதி ஆணவக் கொலைகள்
- காதல் திருமணம் தொடர்பான வன்முறைகள்
- அமிலவீச்சு
- டிஜிட்டல் குற்றங்கள்
பகல் நேரத்திலும் கூட பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது.
போதைப் பொருட்களின் தாக்கம்
பெண்கள் மீதான வன்முறைக்கு போதைப் பொருட்கள் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக கூறியிருந்தாலும், அது முழுமை யாக நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மன மகிழ் மன்றங்கள் என்ற பெயரில் புதிய மதுபான விற்பனை நிலையங்கள் தோன்றியுள்ளன. பல இடங்களில் காவல்துறைக்கு தெரிந்தே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. மாதர் சங்க சிறப்பு மாநாடுகள் இந்தப் பின்னணியில் தான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் மாநாடுகளை நடத்தி, பெண் கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் குறித்து விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது. கோரிக்கைகள்:
1. பெண்கள் - குழந்தைகள் மீதான வன் முறைகள் தொடர்பாக சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு நடத்த வேண்டும்
2. காவல்துறையின் செயல்பாட்டை முறைப் படுத்த வேண்டும்
3. கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
4. குழந்தைகள் ஆணையத்துக்கு உடனடியாக தலைவர் நியமனம் வேண்டும்
5. சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம்
6. பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு
7. பாலின சமத்துவ பாடத்திட்டம் அமலாக்கம்
8. தமிழக அரசு உருவாக்கிய பெண்களுக்கான கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
பிப்.28 பேரணி
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரு கின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழகத்தின் நான்கு திசைகளில் இருந்தும் பெண்கள் ஒன்றுதிரண்டு நீதி கேட்கும் நெடும்பேரணி சென்னை கோட்டை நோக்கி நடைபெற உள்ளது. பெண்ணுரிமை, பாலின சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்வீர்!
தேசிய மகளிர் ஆணையம் தரும் விபரம் என்ன?
தேசிய அளவில் 26% பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவிக்கின்றனர்.
- ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் தற் கொலை/வரதட்சணை கொடுமை.
- ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை.
- நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு.
- 2021ல் 1,37,956 பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பதிவு.
தமிழ்நாட்டில் கொடூரச் சம்பவங்கள் - 2024
தேசிய அளவில் 26% பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவிக்கின்றனர்.
- ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் தற் கொலை/வரதட்சணை கொடுமை.
- ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை.
- நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு.
- 2021ல் 1,37,956 பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பதிவு.