articles

img

பண்பாட்டு அசைவுகளின் அடையாளம் பேராசிரியர் தொ. பரமசிவன் - எம்.ஜே.பிரபாகர்

பண்பாட்டு அசைவுகளின் அடையாளம் பேராசிரியர் தொ. பரமசிவன்

“அறியப்பட வேண்டிய தமிழ கம்” எனும் நூலில் தமிழறி ஞர்கள் ஏழு பேரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நூலைத் தொகுத்து வழங்கியுள்ளவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர், தமிழறி ஞர் முனைவர் கா.சுபாஷினி ஆவார். மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிறைந்துள்ள மானுடவியல் கூறுகளை யும், இயற்கையோடு சேர்ந்த வகையில் அமைந்த மனித வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து அவற்றை நமக்கு வழங்கியதில் முக்கிய பங்காற்றியவர் பேராசிரியர் தொ. பரமசிவன்.

மொழியியல் கண்டுபிடிப்புகள்

பேராசிரியர் தொ.ப. பல அரிய மொழி யியல் தகவல்களை வழங்குகிறார். “கூலி” என்ற சொல் தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்குச் சென்றுள்ளது. “கூலம்” என்றால் “தானியம்” என்று பொருள். செய்யும் வேலைக்கு அன்றன்று தானி யங்களைப் பெறுபவர் கூலி ஆவார். இதுவே பிற்காலத்தில் சம்பளம் என்ற சொல் உருவானது. “குளித்தல்” என்ற சொல்லின் உண்மைப் பொருள் உடம்பைத் தூய்மை செய்தல் அல்ல. சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பம் அடைந்த உடலை “குளிர்வித்தல்” என்பதே அதன் பொருள். “நீராடுதலை” ஒரு கொண்டாட்ட மாகக் கருதியவர்கள் தமிழர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

அரசியல் நிலைப்பாடும்  கலாச்சார எதிர்ப்பும்

உலகமயமாக்கம் என்பது கலாச்சா ரத்தின் மீதான தாக்குதல். இந்தக் கலாச்சார தாக்குதலை நம் மீது தொடுத்திருப்பது பன்னாட்டு மூலதனம். தான் எந்தெந்த நாடுகளில் கொள்ளையடிக்கப் போகிறதோ அங்கு முதலில் பண்பாட்டு வன்முறையை ஏவுகிறது பன்னாட்டு மூலதனம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடு பாடு கொண்டவர் பேராசிரியர் தொ.ப.  அவர் தனது ஆய்வுக்கு மார்க்சியம், பெரி யாரியம், விளிம்பு நிலைக் கோட்பாடு களைக் கையில் எடுத்துக்கொண்டார். “நான் திராவிட இயக்கச் சிந்தனையி லிருந்து வந்தாலும் இடதுசாரிச் சார்பு உடையவன்தான்” என்றும் தெரிவித்துள் ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பதே பெண்களின் உணர்வு தான். சிறுதெய்வ, குலதெய்வ வழிபாடு களில் பெண்களே முன்னிலை பெறு கிறார்கள். உலகில் எந்த மதமானாலும் பெண் தெய்வம் இன்றி ஒரு மதமும் நிற்காது, வாழாது என்ற முக்கியமான கருத்தை முன்வைக்கிறார். பசிப்பிணியை மனிதகுலத்தின் முதல் எதிரியாக நினைத்துச் செயல்பட்டவர் வள்ள லார் என்ற கருத்தும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் தொ. பரமசிவன் உண்மை யிலேயே ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம். அறியப்பட வேண்டிய தமிழகம் ஆசிரியர்: தொ. பரமசிவன்   தொகுப்பாசிரியர்: முனைவர் க. சுபாஷினி வெளியீடு: 2021  தமிழ் மரபு அறக்கட்டளை   விலை: ₹80   தொடர்பு: வாட்சப் எண்:  +91-7550174762