சிவப்புப் பாசியை (red algae) கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுப்பதால் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் மீத்தேன் உமிழ்வு 90% குறைகிறது என்று ஸ்வீடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கால்நடைத் தீவனங்களில் சேர்க்கப்படும் பொருட்களில் (additives) சிவப்புப் பாசியை கலந்து கொடுக்கும்போது சூழலிற்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி ஸ்வீடன் அரசு விரிவாக ஆராய்ந்துவருகிறது.
சிவப்புப் பாசி என்பது ஒருவகை கடல் புல். நிபு ணர்கள் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இது குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஆராயப்படுகிறது என்று அந்நாட்டின் சூழல் பாதுகாப்பு முகமையின் ஆய்வ றிக்கை கூறுகிறது. இத்துறையில் அங்கு சமீபகாலத்தில் மிக வேகமான ஆராய்ச்சிகள், புதிய பொருட்களின் பயன்பாடு பற்றிய ஆய்வுகள் தனியார் நிறுவனங்களால் ஆர்வத்துடன் நடந்துவருகின்றன.
இத்தகைய பொருட்களில் சிவப்புப் பாசி எனப்படும் கடற்புல்வகை மற்றும் 3-நைட்ரோஆக்சி புரொப்பனால் (3-nitrooxypropanol (3-NOP)) என்னும் வேதிப்பொரு ளும் கலந்த கலவை சிறந்த பலன் தருவதாகக் கண்டறி யப்பட்டுள்ளது. இந்த வகை தீவனத்தின் உற்பத்தி யாளர்கள் சிவப்பு கடற்புல்லை கால்நடைகளுக்கு உணவாக தினமும் கொடுத்து ஆராய்ந்தனர்.
என்றாலும் இதை அதிக அளவில் வளர்ப்பது மற்றும் இதன் பயன்பாடு பற்றி விரிவாக ஆராயப்படும் என்று சூழல் முகமையின் நிபுணர்கள் கூறுகின்றனர். 3-நாப் (3-NOP) வேதிப்பொருள் ஸ்வீடன் உட்பட பல உலக நாடுகளில் தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. 2022 பிப்ரவரியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இதைப் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது.
பால் தரும் பசுக்களில் இது சராசரியாக 30% மீத்தேன் உமிழ்வை குறைக்கிறது.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளில் மீத்தேன் உமிழ்வு 45% குறைகிறது.
இதை முதல்முதலாக ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பசுக்களின் நான்கு செரிமான அறை களில் முதல் அறையில் நுண்ணுயிரிகள் மீத்தேனை உரு வாக்குவது தடுக்கப்படுகிறது. சில கால்நடைத் தீவ னங்களுடன் சேர்க்கப்படும் சில பொருட்கள் இதில் நல்ல பலனை தருகின்றன. ஆனால் இத்தகையவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்பு கள் மற்றும் பெருமளவில் இதனை உற்பத்தி செய்யும் போது உருவாகும் பிரச்சனைகள் பற்றி விரிவாக ஆரா யப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்று சந்தையில் விற்கப்படும் தீவனங்கள் பற்றியும் இதற்கு மாற்றுப்பொருட்களைக் கண்டுபிடிப்பது குறித் தும் விரிவான ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் நடந்து வருகின்றன.
புவி வெப்ப உயர்வை குறைக்க உதவும் தீவனங்கள்
இதன் பலனாக வருங்கால தீவனச் சேர்க்கைப் பொருட்கள் மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதுடன் புவி வெப்ப உயர்வு, காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை வெகுவாக தடுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சமூகப் பொருளாதார நிலை, விவசாயி களுக்கு கூடுதல் ஆதரவு, உணவு விநியோகச் சங்கிலி யில் மாற்றம், மேம்பட்ட ஆராய்ச்சிகள், புதிய கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்துதல், அரசு நிர்வாகம் இதில் ஈடுபட்டுள்ள தொழிற்துறையினருடன் மேற்கொள்ளும் அதிக ஒத்துழைப்பு போன்றவற்றின் மூலம் இந்த பிரச்ச னைக்கு நல்ல தீர்வு காணமுடியும் என்று நம்பப்படு கிறது.
காலநிலை மாற்றத்தை குறைக்க உதவும் ஸ்மார்ட் பசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டால் அவை தரும் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும். வெவ்வேறு கலப்பின கால்நடைகளில் அவை உமி ழும் மீத்தேனின் அளவு அளக்கப்பட்டு இந்த ஆய்வுகள் நடந்தன. 2021 இல் ஸ்வீடனின் வேளாண் துறை 3.6 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்விற்கு சம மான மீத்தேனை வெளியேற்றியது என்று மதிப்பி டப்பட்டுள்ளது.
இதில் 2.9 மில்லியன் டன் மீத்தேன் உமிழ்வு கால்நடை செரித்தல் மூலமே ஏற்பட்டது. பசுக்கள் உணவு உண்ணும்போது ஏப்பம் விடும். அப்போது வெளி யேறும் மீத்தேன் உமிழ்வைக் குறைக்க இந்த ஆய்வு கள் பெரிதும் உதவும் என்று ஸ்வீடன் சூழல் முகமை யின் காலநிலை ஆய்வாளர் எம்மா கார்லன் (Emma Carlen) கூறுகிறார்.
இதுவரை இரண்டு ஸ்வீடன் பண்ணைகளில் இந்த பாசியைப் பயன்படுத்தியதால் பசுக்களின் அன்றாட மீத்தேன் உமிழ்வில் 80% குறைவு ஏற்பட்டது என்று இப்போது ஸ்வீடனின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இரண்டு புதிய சிவப்புப் பாசி கடற்புல் உற்பத்தித் தொழிற்சாலைகளை நிலப்பகுதியில் நிறுவிவரும் வோல்டா பசுமை டெக் நிறுவனத்தின் (Volta Greentech) இணைத் தோற்றுநர் மற்றும் தலைமைச்செயல் அலு வலர் ப்ரெட்ரிக் அக்கெர்மென் (Fredrik Akkerman) கூறுகிறார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2023 இல் யு கேயில் வணிகரீதியாக ஒரு இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான ஒரு முன்னோடி தொழிற்சாலையைத் தொடங்கத் திட்ட
மிட்டுள்ளது. மீத்தேன் உமிழ்வில் இந்த புதிய கண்டு
பிடிப்பு காலநிலை மாற்றம் மற்றும் விவசாயத்தில் மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
பண்ணைகளில் உணரிகள் பொருத்தப்பட்டு கடற்புல் பாசி தீவனம் கொடுக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் உள்ள மீத்தேன் உமிழ்வு பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பிறகு இந்த தரவுகள் மூன்றாவது நபரால் சரிபார்க்கப்படுகிறது. சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களால் உலகம் முழுவதும் விவ சாயத்துறை இன்று பல பிரச்சனைகளை சந்தித்துவரு கிறது.
பசுமைக்குடில் வாயுக்களில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் மீத்தேன் உமிழ்வு என்ற சூழலை சீர்குலைக்கும் இந்த வாயுவின் குறைப்பு காலநிலைப் பேரிடரில் இருந்து மனிதன் மீள அவசரத் தேவை என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த கண்டுபிடிப்பு வெப்ப உயர்வைக் குறைக்க உதவுவதுடன் விவ சாயத்துறை வளர்ச்சியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
காண்டாமிருகங்களை காக்கும் புதிய திட்டம்
ராட்சத உருவத்தையும் கூர்மையான வளைந்த கொம்புகளையும் கெட்டியான தோலையும் உடைய அச்சமூட்டும் உருவம்தான் என்றாலும் மனிதனால் எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள விலங்குகளே காண்டாமிருகங்கள். சர்வதேச சந்தையில் இவற்றின் கொம்புகளுக்கு நல்ல கிராக்கி. கொம்பிற்காக மட்டும் ஒவ்வொரு 20 மணி நேரமும் ஒரு காண்டாமிருகம் கொல்லப்படுகிறது. இதை தடுக்க கள்ளக் கடத்தல்காரர்களுக்கு எதிராக விஞ்ஞானிகள் ஒரு புதிய போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கொம்புகளில் சிப்புகள்
உலகில் இன்று பெரிய ஒற்றை கொம்புடையவை, சுமத்ரா, ஜாவா, கறுப்பு, வெள்ளை ஆகிய இனங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் இன அழிவை எதிர்நோக்கியுள்ள இனங்கள். இதனால் சூழலியலாளர்கள் இந்த விலங்குகளை பாதுகாக்க தங்களால் ஆன எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர். ஆப்பிரிக்காவில் விலங்கு நல ஆர்வலர்கள் இந்த உயிரி னங்களை காப்பாற்ற அவற்றின் கொம்பு களை பாதியாக வெட்டிவிடும் திட்டத் தையும் நடைமுறைப்படுத்தினர். ஆனால் இது உரிய பலல் தரவில்லை.
தென்னாப்பிரிக்காவில் விஞ்ஞானி கள் காண்டாமிருகங்களின் கொம்பில் கதிரியக்கத்தன்மை உடைய சிப்பு களை பதிக்கும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சட்ட விரோத கடத்தல்காரர்களுக்கு கொம்பு கள் பயனற்றதாக மாறிவிடுகிறது. உல களவில் இந்த உயிரினங்கள் தென் னாப்பிரிக்காவில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன. இதே போல அங்கு தான் அவை அதிகம் வேட்டையாடப்படு கின்றன. இவற்றின் கொம்புகள் சில ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்து வத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
2024 பிப்ரவரியில், சட்ட விரோத வேட்டையாடலை தடுக்க அரசின் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தரவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சரகம் தெரிவித்தது. 2023 இல் மட்டும் 499 காண்டாமிருகங்கள் வேட்டைக்காரர்களால் கொல்லப் பட்டன.
இவற்றில் பெரும்பாலானவை அர சின் சரணாலயங்களில் வாழ்ந்து கொண்டிருந்தவை. 2022 இல் கொல்லப் பட்ட இவ்வுயிரினங்களின் எண்ணிக் கையை விட இது 11% அதிகம். “இந்த புதிய திட்டத்திற்காக இருபது காண்டா மிருகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பன்னாட்டு எல்லைச் சாவடிகளில் கண்காணிக்கக்கூடிய அளவிற்கு சிப்புகளில் கதிரியக்கப்பொருள் உள் ளது. இதன் அளவு மிகக் குறைவா னது என்பதால் இதனால் இந்த விலங்கிற்கும் அது காணப்படும் வாழி டத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று விட்வாட்டர்ஸ்ரண்ட் (Wit watersrand) பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் கதிரியக்கம் மற்றும் ஆரோக்கியப் பிரிவின் இயக்கு னர் ஜேம்ஸ் லார்க்கின் (James Larkin) கூறுகிறார்.
கதிரியக்கச் சிப்புகள் நிரந்தரத் தீர்வாகுமா?
ரைசோடோக் என்று பெயரிடப் பட்டுள்ள இத்திட்டத்தின்படி ஒவ்வொரு காண்டாமிருகத்தின் கொம்பிலும் இரண்டு மிகச் சிறிய கதிரியக்கப் பொருள் உள்ள சிப்புகள் பொருத்தப் படுகின்றன. “இதனால் இந்த பெரிய விலங்குகளை வேட்டையாட நாட்டின் எல்லைக்கு கடத்திச் சென்றாலும் விஞ்ஞானிகளால் அதை சுலபமாக கண்டுபிடிக்கமுடியும். இந்த பொருள் காண்டாமிருகத்தின் கொம்பை நஞ்சு டையதாக்குவதால் இவற்றை மனி தர்கள்
கதிரியக்கப்பொருள் பொருத்தப் பட்டுள்ள விலங்குகளை அடையாளம் காண இந்த விலங்குகளின் கொம்பில் பல ஆயிரக்கணக்கான மைக்ரோ டாட்டுகள் (microdots) என்னும் புள்ளிகள் தெளிக்கப்பட்டுள்ளன. இதன் உதவியுடன் இவ்விலங்குகளை துல்லியமாக கண்காணிக்கமுடியும். சில காலத்திற்கு பிறகு ஆய்வுக் குழு வினர் இந்த விலங்குகளில் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வர். சிப்புகளில் வைக்கப்பட்டுள்ள கதிரி யக்கப்பொருளின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். பயன்படுத்தமுடியாது” என்று அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரி யரும் அறிவியல் துறைத் தலைவரு மான நித்தையா செட்டி (Nithaya Chetty) கூறுகிறார்.
ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை காண்டாமிருகங்களின் கொம்பு களை வெட்டிவிடுவதை காட்டிலும் இம்முறையில் நேரமும் செலவும் குறைவு. இத்திட்டத்தின் வெற்றியை பொறுத்து இந்த விலங்குகளை வேட்டைக்காரர்களின் கையில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஏற்கனவே காண்டாமிருக வேட்டை யை தடுப்பதற்காக எல்லைப் பகுதி களில் இருக்கும் காவலர்கள் கையில் வைத்து இயக்கக்கூடிய கதிரியக்க கண்காணிப்பு கருவிகளை பயன் படுத்துகின்றனர். நாட்டின் துறை முகங்கள், விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கள்ளச்சந்தைகளில் இவற்றின் கொம்பு களுக்கு எடைக்கேற்ப விலை பேசப்படுகிறது. “இந்த விலங்குகளின் கொம்புகளை அகற்றி அந்த இடங்களில் நச்சுப்பொருளை பூசுவது போன்ற நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை.
இந்நிலையில் இந்த புதிய திட்டம் காண்டாமிருகங்கள் வேட்டையா டப்படுவதை தடுக்கும்” என்று இந்த விலங்குகளுக்காக ஒரு அனாதை மையத்தை நடத்திவரும் அதன் நிறு வனர் அர்ரீவான் டிவெண்டர் (Arrie Van Deventer) கூறுகிறார். தென்னாப்பி ரிக்காவில் சுமார் 15,000 காண்டாமிரு கங்கள் வாழ்கின்றன என்று காண்டா மிருகங்களுக்கான சர்வதேச அறக்கட் டளை கூறுகிறது.
i