தொகுதியில் போட்டியிட்ட லோகேஷ் தமிழ்ச்செல்வன் தனது தந்தை வெற்றி பெற்று தற்போது சட்டப் பேரவை உறுப்பினராக இருக்கும் தொகுதி யிலேயே குறைந்த வாக்குகளை பெற்ற சம்பவம் அதிமுக வட்டாரத்தில் அதிர்வலை யை ஏற்படுத்தியுள்ளது.
18 ஆவது மக்களவைத் தேர்தலில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அகில இந்திய அள வில் கவனத்தை ஈர்த்த தொகுதியாக இருந் தது. இதற்கு பிரதான காரணம் திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா போட்டி யிடுவதும், தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவதும் கவனத்தை ஈர்க்க காரணமாக இருந்தது. மேலும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்டது அவிநாசி சட்டமன்ற தொகுதி.
இந்த தொகுதியின் தற்போதை சட்டமன்ற உறுப்பினர் தனபால். அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டது மேலும், கவனத்தை இரட்டிப்பாக்கியது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நீலகிரி நாடாளு மன்ற தொகுதியில், தொடர்ந்து இரண்டா வது முறையாக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா வெற்றி பெற்றுள் ளார். பாஜகவின் எல்.முருகன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மேற்கு மண்டத் தில் நாங்கள்தான் என மார்தட்டிக்கொண்டி ருந்த அதிமுக மூன்றவாது இடத்திற்கு தள்ளப் பட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளது என்றால் மிகையாகாது.
குறிப்பாக அவிநாசியில் அதிமுகவிற்கு வாக்குகள் கனிசமாக குறைந்திருப்பது அரசி யல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள் ளது. ஏனெனில், அவிநாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அதிமுக தனபால். அவி நாசி ஒன்றியத்தில், அதிமுக வசம், அவிநாசி யூனியன் சேர்மன் பதவி, பேரூ ராட்சி துணைத் தலைவர், திருமுருகன் பூண்டி நகராட்சியில் 10 நகர மன்ற உறுப்பினர்கள், 31 ஊராட்சிகளில் பல ஊராட்சிகளில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் இருந்தும் வாக்குகள் குறைந்ததே கவனத்தை ஈர்க்க காரணம்.
2021 நடந்த சட்டமன்ற தேர்தலில் அவிநாசி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனபால் ஒரு லட்சத்தி 17 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்றுள்ளார். தனபாலை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அதியமான் 66ஆயிரத்து 382 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். தற்பொழுது நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 85 ஆயிரத்து 129 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் வெறும் 54 ஆயிரத்து 543 வாக்கு கள் மட்டுமே பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுகவினர் அத்திக் கடவு திட்டத்தை கையில் எடுத்து பிரச்சாரம் மேற்கொண்டதும், சட்டமன்ற உறுப்பினர் தனபால் ஒதுக்கிய நிதிகள் குறித்தும் தேர் தல் பிரச்சாரமாக அதிமுகவினர் கூறி வந்த னர். இது எதுவும் இந்த தொகுதியில் அதிமுக விற்கு கைகொடுக்கவில்
லை. மேலும், அதிமுகவினர் மோடியை எந்த இடத்தி லும் விமர்சனம் செய்யாமல் தொடர்ந்து மௌனமாக கடந்தனர். இந்த காரணங்க ளினாலேயே அதிமுக சட்டமன்ற உறுப்பி னரும், தனது தந்தையுமான தனபால் பெற்ற வாக்குகளை விட, மிகக் குறைவான வாக்கு களை மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வேலையின்மை, அவிநாசி ஒன்றி யத்தில் விசைத்தறி, விவசாயம், போன்ற வற்றில் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்ட தொழில்விரோத கொள்கை ஆகியவை இத்தேர்தலில் திமுகவினர் பிரச்சார களத் தில் முன்னெடுத்துச் சென்றனர். பாஜகவில் இருந்து நாங்கள் விலகி வந்துவிட்டோம் என பெயரளவில் சொன்ன தும், பிரச்சார களத்தில் மக்கள் விரோத பாஜ கவை விமர்சிக்காமல் தேர்தலை சந்தித்த துமே அதிமுகவின் வாக்கு வங்கியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக