articles

தாமரைப் பூவில் அமர்ந்தவளே மு.அருணகிரி, அவனியாபுரம்

செந்தாமரை பூவில் அமர்ந்தவளை என...

வீதி முனையில் இருக்கும் அம்மன்

ஆலயத்தில் பாடல் ஒலித்தது

ஆடி வெள்ளி என்பதால்  

அம்மனிடம் சொன்னேன்  

தயவு செய்து காவித் தாமரையில்

அமர்ந்து விடாதே துகில் உரித்து  விடுவார்கள்

  சிவப்பு தான் உனக்கும்

பாதுகாப்பு  ஆமோதிப்பது போல்

ஆலய மணி அடித்தது நிச்சயம்

 அவள் மனதிலும்  

மணிப்பூர் நிகழ்வு வந்து போயிருக்கும்.