பெண்கள் தொழிற்சங்க இயக்கத்திற்குள் தங்களைத் தாங்களே அமைப் பாக்கிக் கொண்டனர். சில நேரங்களில் அவர்கள் திறன் பெற்ற ஆண் தொழிலாளர் களின் எதிர்ப்பைச் சந்தித்தனர். ஏனென்றால் தொடக்க காலத்தில், சிலநேரங்களில் பெண்களுடைய வேலைகளின் தற்காலிகத் தன்மை காரணமாக, ஆலை களில் முதலில் தொடங்கப்பெற்ற தொழிற் சங்கங்கள் குறுகிய காலமே இருந்தன, மேலும் உள்ளூர் அளவில் தான் அமைக்கப் பட்டிருந்தன. மேலும் பெண்கள் மட்டுமே செய்யும் வேலைகளில் இருந்தனர். அத னால் பெண்களுக்கு மட்டுமேயான கிளை கள் அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ராபர்ட் ஓவனின் மாபெரும் தேசிய பலப் படுத்தப்பட்ட தொழிற்சங்கம் தனிப்பட்ட பெண்கள் பிரிவைக் கொண்டதாக இருந்தது. தொழிலாளர் இயக்கத்தின் தொடக்க நாட்களில், புரட்சிகர சார்டிஸ்ட் இயக்கத்தின் நாட்களில், சலவையகங் களிலும், பின்னல் வேலைகளிலும், புத்த கம் கட்டுதலிலும் வேலை செய்த பெண்கள் தரப்பில் வேலை நிறுத்தம் நடந்தது. 1842 -இல் நடந்த சார்டிஸ்டுப் பொது வேலை நிறுத்தத்தில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று முதல் இன்றுவரை தொழிற்சங் கங்களில் பெண்களின் திரட்டல் முக்கியத் துவம் பெற்றதாகவே உள்ளது.எனினும் இன்னும் முழுவெற்றி பெற வில்லை. பெண்களை மலி வான கூலிக்கு உழைக்கச் செய்வதை தடுப்பதற்கு ஒரே வழி, தொழிற்சங்கங்கள் அவர் களை அமைப்பாக்குவது தான். இந்தப்பின்னணியில் 1913 ஆம் வருடம் முதல் மார்ச் 8 சர்வ தேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாக கொண்டாடலாம். ஆனால் இத்தினத்துக்கு காரணமாக போராட்டங் களும் வெற்றிகளும் அவ்வளவு எளி தாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமு தாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது. மகளிரைத் தமது தாயாகவும், சகோதரி, மனைவி, மகள், உறவுப்பெண் எனக் கொண்டிருக்கும் ஆண் வழிச் சமுதாய ஆண்கள் தமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாக அங்கமான இப்பாலினத்தை உரிய முறையில் நடத்துகின்றோமா எனச் சிந்திக்க கிடைக்கும் நாள் மட்டுமல்ல; பெண்கள் தமது உரிமைகளை வென் றெடுக்கவும், பெண்கள் தொடர்பான மூட நம்பிக்கைகளை அகற்றவும் அவர் களை அதிகபட்ச விழிப்புணர்வு கொண்ட வர்களாகவும் செயல்திறன் உரியவர்களா கவும் மாற்றி அமைக்கும் நாள் இது.