உழைக்கும் பெண்களின் உரிமை காக்க உறுதியேற்போம்!
சர்வதேச பெண்கள் தினம் என்பது பெண்க ளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் வர்க்க சுரண்டலுக்கு எதிராக உரு வானது. 1910-இல் கிளாரா ஜெட்கின் அவர்கள் டென் மார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச பெண்கள் தினமாக முன்மொழிந்தார். 1975- இல் ஐக்கிய நாடுகள் சபை அதை அங்கீகரித்தது.
லட்சம் பெண்கள் சந்திப்பு
பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். இந்தியாவில் 70% பெண்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் பிழைப்புக்கான வேலையை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஆண்டு சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டில் லட்சம் பெண்களை சந்திக்க இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
பெண்களின் அடிப்படை உரிமைகள்
சுகாதாரமான குடிநீர், ஓய்வறை, தனியான கழிவறை, குழந்தைகள் காப்பகம் அனைத்து பணி இடங்களிலும் இருக்க வேண்டும். 50 பேருக்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் குழந்தைகள் காப்பகம் கட்டாயம் என சட்டம் உள்ளது, ஆனால் நடைமுறையில் இல்லை.
முக்கிய கோரிக்கைகள் G
மகப்பேறு விடுப்பு: அரசு மற்றும் தனியார் துறைக ளில் 12 மாத மகப்பேறு விடுப்பு அனைவருக்கும் வழங்க வேண்டும். தற்போது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே முழுமையாகக் கிடைக்கிறது. G பாலியல் வன்முறை தடுப்பு: 10 பேருக்கு மேல் பணி யமர்த்தியுள்ள அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்க வேண்டும். G திட்ட பணியாளர்கள்: 50,000 அங்கன்வாடி ஊழியர் கள், 14,000 மக்களைத் தேடி மருத்துவம் பணியாளர் கள் இவர்களை அரசுத் தொழிலாளர்களாக அங்கீ கரிக்க வேண்டும். G பொதுத்துறை பாதுகாப்பு: எல்ஐசி, பிஎஸ்என்எல், ரயில்வே, வங்கி போன்ற பொதுத் துறைகளை தனி யார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.
பல்வேறு துறைகளில் பெண்களின் பிரச்சனைகள்
G கட்டுமானம்: 30% பெண்கள் ஆண்களுக்கு இணை யான சம்பளம் இன்றி பணிபுரிகின்றனர். G தையல்: தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற் பட்டோர் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கூலி உயர்வு, நலவாரிய உதவிகள் தடையின்றி கிடைக்க வேண்டும். G வணிக வளாகங்கள்: பெண்களுக்கு அமர்ந்து பணியாற்ற இருக்கை வசதி வேண்டும். 2021-இல் சட்டம் கொண்டுவந்தும் அமலாகவில்லை. G ஐடி துறை: தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஐடி துறையில் பணிபுரிகின்றனர். மகப் பேறு விடுப்பு, பாதுகாப்பான விடுதி வசதிகள் வேண்டும். G வீட்டு வேலை: 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு வேலை பணியாளர்கள் கண்ணியமான நடத்தை, நியாயமான ஊதியம் கோருகின்றனர். G தீப்பெட்டி-பட்டாசு: 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 90% பெண்கள். மருத்துவ உதவி, பணிப் பாதுகாப்பு வேண்டும். G சாலையோர வியாபாரம்: அடையாள அட்டை, வங்கிக் கடன், வாழ்வாதாரப் பாதுகாப்பு வேண்டும். சர்வதேச பெண்கள் தினத்தில் சிஐடியு, உழைக் கும் மகளிரின் வாழ்வாதாரம் காக்க உறுதியேற்கிறது. “பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக் காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடு தலையை அடைய முடியாது” என்ற தோழர் லெனினின் முழக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது.