நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய பின்பு, பெட்ரோல் மற்றும் டீசல்விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு, தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது, மோடி ஆட்சி யில், அதிலும் குறிப்பாக சராசரியாக ஒருஆட்டோ 5 லிட்டர் டீசலில் தினமும் 100 கிலோமீட்டர் ஓடுகிறது என்று வைத்துக் கொண்டால் ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒருநாளைக்கு எரிபொருளுக்கு மட்டும் ரூ.100 அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. ஒரு வரு டத்திற்கு அவன்/அவள் டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டிய கூடுதல் தொகை ரூ.36500 ஆகும். டீசல் விலையில் சுமார் 53% வரியாக ஒன்றிய அரசு வசூலிக்கிறது.
இன்சூரன்ஸ் கட்டணம்
இதேபோல், ஒவ்வொருஆண்டும் காப்பீட்டு பிரீமியம் தொகை அதிகரிக்கிறது. இங்கும் ஆட்சியா ளர்கள் கடைப்பிடித்த தாராளமயக்கொள்கைகள் கார ணமாக, இன்சூரன்ஸ் பிரீமியம் என்ற பெயரில் ஆட்டோ தொழிலாளியை இரக்கமற்றமுறையில் நசுக்கு வதற்கு வழிவகுத்தது. அவர்கள் பொதுக்காப்பீட்டுத் துறையை தனியார்நிதி மூலதனத்திற்குத்திறந்து விட்டனர். ஏப்ரல் 2014 இல், ஆட்டோவிற்கான வருடாந்திர மூன்றாம்நபர் காப்பீட்டுபிரீமியம் ரூ. 1212 ஆக இருந்தது, ஏப்ரல் 2018 இல், இது ரூ.2595 ஆக உயர்ந்தது, இப்போது அது ரூ.5500 முதல் ரூ.7500 வரை உள்ளது. சமீபத்திய மாடலுக்கு இது ரூ.9500 முதல் ரூ.12000 வரைஇருக்கும். தனியார்காப்பீட்டு நிறு வனங்களின் லாபத்தை அதிகப்படுத்துவதைத் தவிர, இந்த உயர்விற்கான உரிய மற்றும் வெளிப்படையான நியாயம் எதுவும் இல்லை. ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களின் அவல நிலையை மோசமாக்கும் வகையில், சாலைப் போக்கு வரத்து அமைச்சகம், உரிமம் பெறுதல், புதுப்பித்தல், தகுதிச்சான்று பெறுதல் போன்றவற்றுக்கான கட்ட ணங்களை அசாதாரணமாக உயர்த்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் போன்ற சமூகப்பாதுகாப்பு சலுகைகள் இல்லை. ஓய்வூதியம் போன்ற முதியோர் பாதுகாப்பு எதுவும் இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் ரிக்சா இழுப்பவர்கள் ஆகியோ ருக்கும் இஎஸ்ஐ சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று 2015இல் நடைபெற்ற 46ஆவது இந்திய தொழிலாளர் மாநாடு பரிந்துரைத்தது. இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான வி.வி.கிரிதேசிய தொழிலாளர் நிறுவனம், போக்குவரத்துத்துறையில் ஒருதொழிலாளி பணி புரிந்தாலும் தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும், மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசும் இதை அமல்படுத்தவில்லை.
மீட்டர் கட்டணம் மாற்றியமை
12 ஆண்டுகளுக்கு முன்னால் நிர்ணயிக்கப்பட்ட மீட்டர் கட்டணம்தான் இன்னும் அமலில் உள்ளது. இந்த கட்டணத்தில் வாகனம் இயக்குவது நடை முறை சாத்தியமில்லை. எனவே மீட்டர் கட்டணம் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப திருத்தியமைக்கப் படவேண்டும். மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்கும் போது பெட்ரோல் - டீசல்- கேஸ் விலை உயர்வு, விலை வாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு உயர்வு, இவை தவிர வீட்டு வாடகை, கல்வி கட்டணம், மருத்துவ செலவு உயர்வு உட்பட கணக்கில் கொண்டு விஞ்ஞானப் பூர்வமாக திருத்தியமைப்பதன் மூலம் மட்டுமே இத்தொழிலை ஓரளவு பாதுகாக்கமுடியும்.
மோட்டர் வாகன சட்டத் திருத்தம்
ஆனால் இந்த அரசு ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மாறாக , சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், குறிப்பாக இடது சாரிக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, விபத்துகளைக் குறைக்கும் சாக்கில், பாஜக தலைமை யிலான அரசாங்கம் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 ஐ இயற்றியது. இதனால் போக்கு வரத்து தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் உண்மை யான நோக்கம், ஒற்றைவாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களை தொழிலிலிருந்து விரட்டுவதும், உபர் மற்றும் ஒலா போன்ற பெரிய நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்படா மல் பாதுகாப்பதும், தனியார்காப்பீட்டு நிறுவனங்களின் லாபத்தை அதிகரிப்பதும் தான் இந்த நடவடிக்கை நவீன தாராளமய கொள்கைகளின் ஒரு பகுதியாகும், சாதாரண மக்கள், தொழிலாளர்களின் நலனை வாழ்வா தாரத்தை லாபமே குறிக்கோளாக கொண்டுள்ள கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைப்பதாகும். தொழிலாளி வர்க்கம் எதிர் கொள்ளும் பிரச்சனை கள், அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணைக்கப் பட்டுள்ளது என்பதைதாராளமயக் கொள்கைகளின் கடந்த முப்பது ஆண்டு கால அனுபவம் கற்றுக் கொடுத்துள்ளது. எனவே தொழிலாளி வர்க்கம் அதன் கோரிக்கைகளை நிறைவேற்ற தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப்போராடவேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தம் நவீன தாராளமய கொள்கைகளின் ஒரு பகுதியாகும். சட்டத்தை உடைத்தெறிய ஆட்டோ - டாக்சி தொழிலாளி மட்டு மல்ல இந்த தொழிலோடு சம்பந்தப்பட்டுள்ள பெயிண்டர், வெல்டர், டிங்கர், டாப் அடிப்பவர், உதிரி பாகம் விற்பனை செய்பவர்கள், மெக்கானிக்குகள் அனைவரையும் ஓரணியில் திரட்ட 9ஆவது மாநில மாநாட்டில் சூளுரைப்போம்!
கட்டுரையாளர் : சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர்