articles

img

சூனியக்காரி - ச. சஞ்சனா,

5 வகுப்பு ‘அ’ பிரிவு. 
டாக்டர் டி. திருஞானம் துவ்வக்கப்பள்ளி ,
மதுரை -9.

 ஒர் ஊரில் ஒரு பாட்டி இருந்தாங்க. ஒருநாள்  அந்த பாட்டி கோயிலுக்குப் போனாங்க. கோவிலில் இருந்து திரும்பி வந்தாங்க. கோவில் வெளியில் உள்ள மைதானத்தில்  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அங்கிருந்த ஒரு பையன் ,  “ஏ! பாட்டிய விழுக வைக்கலாமாடா?”ன்னு கேட்டான்.  எல்லாருமே சரி சரின்னு சொன்னாங்க. ஒருத்தன் ஓடி வந்து பந்து வீசினான். பந்து மெதுவாக மேல் எழும்பியது.  மட்டை பிடித்தவன்  பந்தைப் பாட்டியை நோக்கி அடித்தான்.  பந்து வருவதைக் கண்ட பாட்டி தடுமாறினார். அனைவரும் சிரித்தனர். 

பாட்டி எதையும் கண்டு கொள்ளாமல் வேகமாக நடந்தார்.  மீண்டும் பந்தை அடித்தான். இந்தமுறை பாட்டி விலகும்போது தடுமாறி கீழே விழுந்தார். எல்லாரும் கைதட்டிச் சிரிச்சாங்க.  பாட்டி எழுந்து அதைப் கண்டுகொள்ளாமல் நடந்தார்.   அதற்கு அடுத்த வாரம் கோவிலுக்குப் பாட்டி போனாங்க.  அப்போது , ஒரு தாத்தா வந்தாங்க.  அந்த தாத்தாவைக் கண்டதும் சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர். பாட்டியை   விழுக வெச்ச மாதிரி பந்தை அடிச்சு கீழே விழ வைத்தார்கள். சிரித்தார்கள். பாட்டி அந்தச் சிறுவர்களை நினைத்து வருந்தினார். அவர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பினார். அவர்கள் நடுத்தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதை அறிந்தார்.  அன்று இரவு அவர்கள் படுத்திருந்த இடத்திற்கு பாட்டிச்  சென்றார். சிறுவர்கள் வீட்டின் வெளியே படுத்திருந்தனர். பாட்டி  விளக்கு வெளிச்சத்தின் பின்பு நின்றார். அவரது நிழல் மிகப்பெரியதாக அவர்கள் மீது விழுந்தது.  இப்போது ‘கக்க கக்க’ எனச் சிரித்தார். அந்தச் சிறுவர்கள் விழித்தார்கள்.  அவர்கள் எழுந்தார்கள். பாட்டியின் நிழலைப் பார்த்தார்கள். 

தினமும் ஒருவனைச் சாப்பிடப்போகிறேன். அப்படிச்  சாப்பிட்டால் புதிதாக எனக்கு விரல்  தோன்றும் என்றார்.  பாட்டி கொண்டு வந்திருந்த  தலகாணியைப் பிடித்துத் தின்பது போல் செய்தார். அவரது நிழல் ஒரு சிறுவனை விழுங்குவது போல் காட்சியளித்தது.  சிறுவர்கள் பயந்து நடுங்கினார்கள். பாட்டி கையில் வைத்திருந்த மிளகாயை ஆறாவது விரல் வளருவது போல் செய்தார். அவரது நிழல்கையில் ஆறாவது விரல் வளர்ந்தது. அனைவரும்  பயந்து நடுங்கினார்கள். உங்களில் ஒருவனை நாளைக்கு உண்பதற்கு வருவேன்.  காத்திருங்கள். அதுவும் என்னைப் போன்ற வயதானவர்களைக் கேலி செய்தால் , அவனையே முதலில் விழுங்குவேன் என்று மறைந்தார். அதற்கு அடுத்த வாரம் பாட்டி கோவிலுக்குச் சென்றார். திரும்பி வந்தார். சிறுவர்கள் வழக்கம்போல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பாட்டியைப் பார்த்ததும் மட்டை பிடித்திருந்த சிறுவன் “ஏய்!  பாட்டி போகட்டும். அப்புறம். பந்து போடு.” என்றான்.  பாட்டி சிரித்தபடி மைதானத்தைக் கடந்தார்.