articles

img

வேதாந்தாவுக்கு கைமாறிய பொதுத்துறை இன்று கார்ப்பரேட் கொள்ளை நிறுவனம் - ஆர்.எஸ்.செண்பகம்

மக்களுக்கு சொந்தமான கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரை வார்க்கும் திட்டத்தின் மற்றொரு படியாக, சமீபத்தில் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சகம் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவன மான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டுக்கு வழங்கி யுள்ளது. நவம்பர் 7 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், முக்கியமான மற்றும் அரியவகை கனிமத் தொகுதிகளின் ஏலத்தின் பகுதி IV இன் கீழ் தொடங்கப்பட்ட எட்டு முக்கியமான கனிமத் தொகுதி களின் ஏலம் வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்துள் ளது. இந்த ஏலம் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2023 சட்டத் திருத்தத்தின் பின்னணி

2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் மூலம், கனிம வளங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி டங்ஸ்டன், கோபால்ட், லித்தியம் போன்ற முக்கியமான கனிமப்பொருட்கள் இனி நாட்டின் பொதுச்சொத்தாக இருக்காது. இவை  தனியார் நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்டு களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்படும். வேதாந்தாவின் உரிமையாளர் அனில் அகர்வால், ஒன்றிய பாஜக கூட்டணி அரசுடன் நெருக்கமான உறவு கொண்டவர். இந்த நெருக்கத்தின் காரணமாகவே டங்ஸ்டன் குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் கனிமவளம், இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதற்கும், கொள்ளை லாபம்  ஈட்டுவதற்குமான வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

சுரங்கங்கள் சட்டத்தின் வரலாறு

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும்  ஒழுங்குமுறை) சட்டம் 1957 முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு முழுமையாக திருத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கங்கள்: -    கனிம வளங்களை ஒதுக்குவதில் வெளிப்படைத் தன்மை -    ஏல முறையை கட்டாயமாக்குதல் -    சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிக ளின் நலனுக்காக மாவட்ட கனிம அறக்கட்டளை அமைத்தல் -    தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை நிறுவுதல்  இந்த சட்டம் 2016, 2020, மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளிலும் திருத்தப்பட்டது.

2023 சட்டத் திருத்தத்தின் முக்கிய மாற்றங்கள்

அ) அணு கனிமங்களின் பட்டியலில் இருந்து கனிமங்களை நீக்குதல் இச்சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி-B இல் குறிப்பிடப்பட்டுள்ள 12 அணு கனிமங்களின் பட்டிய லில் இருந்து பின்வரும் 6 கனிமங்கள் நீக்கப்பட்டுள்ளன: லித்தியம், டைட்டானியம் தாங்கும் கனிமங்கள், பெரிலியம், நியோபியம், டான்டலம்  மற்றும் சிர்கோனியம் ஆகியவை. ஆ) மத்திய அரசுக்கு அதிகாரம் முக்கியமான கனிமங்களுக்கான கனிம சலுகை களை பிரத்தியேகமாக ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏலங்களின் வருவாய் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கனிம ஏலம்

2023 ஜூன் 24 அன்று மத்திய அரசு 21 முக்கிய கனிமத் தொகுதிகளுக்கான அறிவிப்பு அழைப்பு  டெண்டர் (NIT) வெளியிட்டது. இதில் 10 கனிமத் தொகுதிகள் இரண்டாவது சுற்று மின்னணு ஏலத்திற்கு  தேர்வு செய்யப்பட்டன. இந்த தொகுதிகளில் உள்ள கனிமங்கள்: -    பாஸ்போரைட்: உர உற்பத்திக்கு அத்தியாவசியம் -    கிராஃபைட்: மின்னணு துறைக்கு முக்கியம் -    வெனடியம்: எஃகு உற்பத்திக்கு தேவை -    பிற அரியவகை கனிமங்கள் இவை உயர் தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆற்றல் பயன்பாடுகளுக்கு மிக முக்கியமானவை. மாநிலங்களின் கட்டுப்பாடு பறிப்பு மாநில அரசுகளுக்கு ஒப்படைக்கப்பட்ட 107 கனிமங்களில் வெறும் 19 கனிமத் தொகுதிகள் மட்டுமே இதுவரை ஏலம் விடப்பட்டுள்ளன. அவையும்  கிராஃபைட், நிக்கல், பாஸ்பேட் போன்ற சில கனிமங்கள் மட்டுமே. இந்த நிலையில், முக்கிய அரியவகை கனிமங்களின் ஏலத்தை மத்திய அரசு நேரடியாக கையில் எடுத்துள்ளது. கார்ப்பரேட்டுக்கு சாதகமான 

கார்ப்பரேட்டுக்கு சாதகமான ஆய்வு உரிம விதிகள்

புதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆய்வு உரிமம்: -    25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை செயல்பட அனுமதி -    ஐந்து ஆண்டுகள் அடிப்படை காலம் -    மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிப்பு வாய்ப்பு -    முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 25% பகுதியை தக்கவைக்க முடியும் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டம் சுரங்க மற்றும் ஆய்வுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு (FDI) அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க முதலீடுகள் வரவில்லை என்ற காரணத்தை முன்வைத்து: -    புதிய சலுகைகள் அறிவிப்பு -    விதிமுறைகளில் தளர்வு -    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கட்டுப்பாடுகள்

ஆய்வு உரிமதாரர்கள் கண்டுபிடிப்புகள் குறித்த  புவியியல் அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்; பகுதியை தக்கவைப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும்; மாநில அரசின் ஒப்புதல் பெறவேண்டும்.  ஆனால் இந்த விதிமுறைகள் வெறும் காகித நடைமுறைகளாகவே உள்ளன. உண்மையான கண்காணிப்பு இல்லை. பொதுத்துறையை சூறையாடிய வேதாந்தா நிறுவனம் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) 1966 இல் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாக தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் உலோக தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது.  ஆனால் 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் திட்டமிட்ட சூழ்ச்சி ஆரம்பமானது. நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி, “இந்த  வகையான தொழிலில் அரசு இருக்கத் தேவை யில்லை” என்ற பொய்யான வாதத்தை முன்வைத்து தனியார்மயமாக்கத்திற்கு வழி வகுக்கப்பட்டது.

கார்ப்பரேட் கைக்கு மாற்றம்

2003ல் நிறுவனத்தின் 26% பங்குகள் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திற்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. பின்னர் மேலும் 19% பங்குகள் விற்கப்பட்டன. இன்று வேதாந்தா 65% பங்குகளுடன் நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றியுள்ளது. தனியார்மயமாக்கத்தின் பின் லாபக் குவிப்பு பொதுத்துறையில் இருந்தபோது நஷ்டம் என்று காட்டப்பட்ட நிறுவனம், தனியார்மயமாக்கத்திற்கு பின் எப்படி பெரும் லாபம் ஈட்டியது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன: -    2002: நிகர லாபம் ₹68 கோடி (பொதுத்துறையில்) -    2022: நிகர லாபம் ₹9,700 கோடி (தனியார் கட்டுப்பாட்டில்) -    உற்பத்தி திறன் 0.20 மில்லியன் டன்னிலிருந்து 1.2 மில்லியன் டன்களாக உயர்வு இந்த புள்ளி விவரங்கள் காட்டுவது என்னவென் றால், பொதுத்துறை நிறுவனம் வேண்டுமென்றே நஷ்டத்தில் காட்டப்பட்டு, தனியார்மயமாக்கத்திற்கு வழிவகுக்கப்பட்டது என்பதே.

நிதி நெருக்கடியும் புதிய வளங்களின் தேவையும்

வேதாந்தா இன்று 7.7 பில்லியன் டாலர் கடன் சுமை யில் திணறுகிறது. கடன் திருப்பிச் செலுத்த புதிய வரு வாய் ஆதாரங்கள் தேவை. அதனால்தான் தமிழகத்தின் டங்ஸ்டன் வளத்தை கொள்ளையடிக்க முடிவுசெய்துள்ளது. ஆப்பிரிக்க சுரங்கங்களின் விற்பனை திட்டம் வேதாந்தா தனது ஆப்பிரிக்க சுரங்கங்களை விற்க முயற்சிக்கிறது: -    தென்னாப்பிரிக்காவில் பிளாக் மவுண்டன் மற்றும் கேம்ஸ்பர்க் சுரங்கங்கள் -    மொத்த துத்தநாக இருப்பு: 35 மில்லியன் டன்கள் -    மதிப்பு: சுமார் 3 பில்லியன் டாலர் ஆனால் இந்த சுரங்கங்களை வெளியாருக்கு விற்கா மல், தனது துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் மூலம் வாங்க திட்டமிடுகிறது. இதற்கு புதிய வருவாய் ஆதாரங்கள் தேவை - அதற்காகவே தமிழகத்தின் கனிம வளங்களை குறிவைத்துள்ளது. அரசியல் செல்வாக்கின் பயன்பாடு வேதாந்தாவின் உரிமையாளர் அனில் அகர்வால், மோடி அரசுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை  பயன்படுத்தி மாநில அரசின் அனுமதி இன்றி டங்ஸ்டன் சுரங்க உரிமம் பெற்றுள்ளார்; தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் 14 உயிர்களை பலி எடுத்த பின்னும் மீண்டும் தமிழகத்தில் நுழைய அனுமதி பெற்றுள்ளார்.

அரசின் இழப்பு

இந்திய அரசாங்கம் தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க்கில் வைத்திருக்கும் 29.5% பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது. ஆனால் பங்கு விலை சரிவால்: -    முன்பு பெற முடிந்த தொகை: ₹46,000 கோடி -    தற்போது பெற முடியும் தொகை: ₹39,000 கோடி -    மொத்த இழப்பு: ₹7,000 கோடி

மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி, மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 14 பேரை சுட்டுக்கொன்ற வேதாந்தா குழுமத்திற்கு மீண்டும் தமிழகத்தில் சுரங்க  உரிமம் வழங்கப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் நாட்டின் இயற்கை வளங்களை சூறையாட வழி வகுக்கின்றன. மக்களுக்கு சொந்தமான கனிம வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன இது ஒரு திட்டமிட்ட கொள்ளை. முதலில் பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் காட்டி  தனியார்மயமாக்குவது, பின்னர் அதே நிறுவனங் களை லாபகரமாக இயக்கி கொள்ளை லாபம் ஈட்டுவது, அந்த லாபத்தை வைத்து மேலும் பொது சொத்துக் களை கைப்பற்றுவது - இதுதான் கார்ப்பரேட் நிறு வனங்களின் கொள்ளை முறை. மோடி அரசு இதற்கு துணை போகிறது. இந்த கொள்ளையை தடுக்க மக்கள்  ஒன்றிணைந்து போராட வேண்டிய காலம் இது.  கட்டுரையாளர் : சிஐடியு, மாநில துணைத் தலைவர்