கலைஞர் ஈடுபடாத துறைகளே இல்லை, மொழி, இலக்கியம், அர சியல், திரைப்படம் எந்த துறையாக இருந்தாலும், தனித்திறனோடு மிளிர்ந்தார். பல சாதனைகளைப் படைத்துச் சென்றுள் ளார். தமிழ்மொழியை அவர் மிகவும் விரும்பி னார். சாமானிய மக்களுக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் என்றென்றும் நினைவு கூரப்படும். மொழிக்காக அவர் நடத்திய போராட்டங்களால் ஒரு தலைமுறையே அந்த மொழியைப் படிக்க வும் பேசவும் எழுதவும் ஏன் அதில் சிந்திக்கவும் கற்றுக் கொண்டது. அவரது ஒவ்வொரு எழுத்தும் ஓவியம் போல் இருக்கும். கட்டுரையானாலும், நாடகமானா லும் திரைப்பட வசனமாக இருந்தாலும் அதில் அவர் ஏற்றுக் கொண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது சிந்தனை களையும். கருத்துகளையும் இணைத்திருப்பார். பொதுவாக அரசியல்வாதிகளை மக்கள் சில ஆண்டுகள் வரைதான் நினைவில் வைத்திருப் பர். ஆனால், கலைஞர் போன்றவர்கள் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங் களிப்பிற்காக தமிழ் மொழி உள்ளவரை கலை ஞரும் இருப்பார்.
தமது மாணவப் பருவ காலத்தில் கையெ ழுத்துப் பிரதியை நடத்திய அனுபவத்தால்தான் பிற்காலத்தில் அவர் ‘முரசொலி’ என்ற நாளித ழைச் சிறப்பாக நடத்த முடிந்தது. அவர் ‘முர சொலி’யைத் தமது முதலாவது குழந்தைபோல் வளர்த்தார். அவர் எந்தப்பணியை எடுத்தாலும் அக்கறையுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் கட மையுணர்வுடனும் செய்து முடித்தார். கலைஞர் எப்போதும் தனியாக பொருளா தார வளர்ச்சி பற்றி மட்டும் பேசியது இல்லை. சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்தே பேசினார். அவரது சிந்தனையில் உதித்த உழவர் சந்தை, குடிசை மாற்று வாரியம், தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கியது ஆகியவற்றின் மூலமாகச் சமமான சமூகத்தை உருவாக்க அரசி யலில் புதிய பாதையைத் தோற்றுவித்தார். அவர் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இவற்றை அமல்படுத்தினார். அனைவரையும் உள்ளடக் கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த முக்கியத்துவத் திற்காக அவர் என்றென்றும் நினைவு கூரப்படு வார். பெண் அதிகாரமயமாக்கலுக்காக அவர் ஆற்றிய பணிகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. 1989-ஆம் ஆண்டு, இந்தியாவி லேயே பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றினார். அவர் இதற்காகச் சட்டம் கொண்டு வந்து 16 ஆண்டுகள் கழித்தே ஒன்றிய அரசு, அதுபோன்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மேலும், திருநங்கை சமூகத்தினருக்காக, அனைத்து மாநில அரசுகளும், மாற்று பாலி னத்தவர்களுக்காக தனி நல வாரியம் ஏற்ப டுத்த வேண்டும் என்று உச்சநீதிமன் றம் உத்தரவிடுவதற்கு 6 ஆண்டு களுக்கு முன்பே, தமிழகத்தில் அவர்களுக்காகத் தனி நலவாரி யத்தைக் கலைஞர் ஏற்படுத்திவிட் டார். இந்த விஷயத்தில் உலகில் தமிழ்நாடு முதன்மையான இடத்தை அடையக் காரணமாக இருந்தார்.
ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த அவர், நாட்டில் மிகச்சிறந்த நிர்வாகத்தை வழங்கிய தலைவர்களில் ஒரு வர் ஆவார். மாநில அரசுகளின் உரிமைக்காகவும், மத்திய மாநில உறவுகளை மாற்றியமைக்கவும் கலைஞர் அவர்கள் குறிப் பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் மக்க ளுக்காக அவர் பாடுபட்டதால்தான், அவரது எதிரிகளிடத்திலும் மரியாதைமிக்க தலைவரா கத் திகழ்ந்தார். கலைஞர் சமூக நீதியின் காவலர் மட்டுமல் லர்; சோசலிசக் குறிக்கோள்களைக் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார். தமது கனவை நனவாக்குவதற்காகத் தமிழ் மொழி, தமிழ் மக்கள் ஆகியோரது வளர்ச்சிக்காக ஓய்வில்லாமல் பணியாற்றினார். மக்களுக்காக இந்தச் சாத னைகளைப் படைப்பதற்காக அவர் எந்த ஒரு நிலைமையையும் எதிர்கொள்ளக் கூடியவராக திகழ்ந்தார்.