பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்சா மசூதி, முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்று. ஜெருசலேத்தில் உள்ள இம் மசூதியை, 1500 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்றக்காரர்கள், ஆகஸ்ட் 13-ல் முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைக்கு தலைமை பொறுப்பு வகித்தது, இஸ்ரேலின் தேச பாதுகாப்பு அமைச்சர், இட்டாமர் பென்- க்வீர் மற்றும் சுற்றுப்புற வளர்ச்சி அமைச்சர். காசா மீதான இனப்படுகொலை யுத்தம் 10 மாதங்களாக தொடரும் சூழ்நிலையில், மசூதி மீதான தாக்குதல் என்பது போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தும், இஸ்ரேலின் தொடர்ச்சியான தூண்டுதலாகும்.
இஸ்ரேலிய குடியேற்ற ஆக்கிரமிப்பாளர்களின் இந்த அத்துமீறிய தாக்குதலின்போது, பாலஸ்தீd பக்தர்கள் அல் அக்சா காம்பவுண்ட் சுவரை கூட நெருங்க முடியாமல் தடுக்கப்பட்டனர். யூத மத சடங்குகளும் இதே இடத்தில் நிகழ்த்தப்படுகின்றன. சர்வ தேச உடன்பாடுகள் மற்றும் கோட்பாடுகள் படியும், ஜோர்டான் இஸ்ரேல் அமைதி ஒப்பந்த படியும், முஸ்லிம்கள் மட்டுமே அல் அக்சா மசூதிக்குள் தொழுகை நடத்த முடியும். அல் அக்சா மசூதி காம்பவுண்ட் சுவரை மவுண்ட் கோயில் என இஸ்ரேலியர் அழைக்கின்றனர். ஜூலை 24-ல், இஸ்ரேலின் தேசபாதுகாப்பு அமைச்சர் வென் க்வீர் மவுண்ட் கோயிலில் யூதர்கள் வழிபடலாம் என அனுமதித்தார்.
ஜெருசலேம் மற்றும் அல் அக்சா மசூதியை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்; உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீன அகதிகள் பாலஸ்தீனம் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்; இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்; பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பாலஸ்தீனர் கோரி வருகிறார்கள். ஆகவே ,அல்அக்சா மசூதி மீது தாக்குதல் தொடுத்து, மசூதியை யூதர்களின் வழிபாட்டுத்தலமாக மாற்ற இஸ்ரேலியர் எடுக்கும் முயற்சிகளைமுறியடிப்பது, பாலஸ்தீன மக்களின் நீண்ட நெடிய போராட்டங்களின் ஒரு முக்கிய அம்சமாகும். அல் அக்சா மசூதி மீதான இஸ்ரேலியர் தாக்குதலுக்கு பதிலடியே, 2023 அக்டோபர் 7 பாலஸ்தீன இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம், ஹமாஸ் இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது.
சூடானின் உள்நாட்டு யுத்தத்தில் பெண்கள் படும் சித்ரவதைகள்!
2023 ஏப்ரலில், ஆப்பிரிக்க நாடான சூடானில், சூடான் ராணுவத் திற்கும், துணை இராணுவ துரித ஆதரவு படையினருக்கும் இடையே, உள்நாட்டு யுத்தம் வெடித்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் இருதரப்பு படையி னராலும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு வரு கின்றனர். சூடானின் டார்பர் வட்டாரம், இடம் பெயர்ந்தோர் முகாம்கள் மற்றும் அண்டை நாடுகளில் சூடானின் அகதிகள் முகாம்களில் உள்ள பெண்கள், உள்நாட்டு யுத்தத்தால் அனுப விக்கும் சித்ரவதைகள் ஏராளம்! கொலை, கொள்ளை, பரிக சிப்பது, வாழ்வாதார இழப்பு போன்ற கொடுமைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள், வயதானவர்கள் அனுபவிக்கின்றனர்.
சிவில் சமூக அமைப்புகள் தயாரித்த ஆவணங்களின்படி, 423 பாலியல் பலாத்கார சம்பவங்கள், இவர்களில் 159 பேர் குழந்தைகள் சம்பந்தப்பட்டவை, பட்டியலிடப்பட்டுள்ளன. ஆவணப்படுத்தாதது ஏராளமான சம்பவங்கள்! சிலர் அவ மானம் தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்கின்றனர். பல பெண் பத்திரிகையாளர் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை.
மனிதாபிமான உதவிகளை பொறுத்தவரை, 50 லட்சம் பேருக்கு ஐநா உதவி கிடைக்கிறது. 1.5 கோடி சூடான் மக்க ளுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. 4.7 கோடி பேர் பஞ்சத்தை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைப்பதில்லை.
ஆண்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள், குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, குடும்ப வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. சாட் நாட்டுக்குச் சென்ற அகதிகள் முகாமில் மனிதாபிமான உதவி சூடான் பெண்களுக்கு கிடைக்கிறது. ஆனால் எகிப்து சென்ற சூடான் அகதிகளுக்கு அடிப்படை தேவைகள், கல்வி, சுகாதார, வீட்டு வசதிகள் கிடைப்பதில்லை. எகிப்தில் உள்ள சூடான் அகதி கள், ஐநா அகதிகளுக்கான உயர் கமிஷனர் பதிவு படி, 4 லட்சத்து 76 ஆயிரம் ஆகும். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப் படவில்லை. எத்தியோப்பியாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்று வனப்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. சூடானில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தால், சூடான் பெண்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பல்கலைக்கழக பரீட்சை எழுத வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எகிப்தில் அகதிகளுக்கு பள்ளி கல்வி சுத்தமாக கிடைப்பதில்லை. சமூக இயக்கங்கள், அரசியல் போராட்டங்கள் மற்றும் புரட்சிக ளில் சூடான் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், யுத்தம் நடத்தும் இருதரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.
அமெரிக்காவில் அரசியல் கைதிகள் படும்பாடு!
அமெரிக்காவின் சிறை அமைப்பு எவ்வாறு உள்ளது? நீண்ட காலம் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு கூட, பரோலில் வெளிவர அனுமதி கிடைப்பதில்லை. மருத்துவ சிகிச்சையும் இல்லை.
1619 ஆம் ஆண்டில் அடிமைகளாக்கப்பட்ட ஆப்பிரிக்காவின் கருப்பு இன மக்கள், அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டனர். 1831 இல் அடிமைகள் கலகம் செய்தனர். 1963 மற்றும் 1965 இல் வாஷிங்டனில் வேலை கோரி பேரணி நடத்தினர் .1970 இல் நடை பெற்ற அடிமைகளின் கலகம், அமெரிக்காவின் புரட்சிகர அரசி யல் வரலாற்றில் ஒரு பிரதான சம்பவமாகும். அப்போது கைதான ரூசெல் மாஹி என்பவர்தான், அமெரிக்காவில் மிக நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்த அரசி யல் கைதியாவார். 2023 ஆகஸ்டில் விடுதலையான அவர், 81 நாட்க ளுக்குப் பிறகு மரணமுற்றார். லியோனார்டு பெல்டியர் ,தற்போது நீண்ட காலம் சிறையில் இருப்பவருக்கு, பல்வேறு உடல் நலக் கோளாறுகள் இருப்பினும், பரோலில் விடுதலை கூட அவருக்கு மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 12 ல் அவருக்கு 80 வயது ஆகிறது. 50 ஆண்டுகளாக சிறையிலே உள்ளார். ஒரு சிறிய அறையில், சரியாக நடக்கக்கூட முடியாத, காற்றோட்டம் இல்லாத அறையில், பெல்டியர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். முத்துலுஷாகூர் என்ற அரசியல் கைதி, 37 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு ஜூலை 6-ல் மரணமுற்றார். புரட்சிகர நட வடிக்கை இயக்கம் மற்றும் புதிய ஆப்பிரிக்க குடியரசு என்ற இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் ஷாகூர். எலும்பு புற்றுநோய் காரணமாக விடுவிக்கப்பட்ட அவர், விரைவிலேயே மரணமடைந்தார். 33 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த ஷேகௌ ஒடிங்கா விடுதலையான பிறகு, 10 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். விடுதலை இயக் கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் இவர். இவருடன் இருந்த சக அரசியல் கைதி அசாட்டா ஷாகூர் சிறையில்இருந்து தப்பிக்க இவர் உதவி செய்தார். ஷாகூர் தற்போதும் கியூபாவில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மூமியா அபு -ஜமால் ,கருப்பு இன விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, அரசியல் கைதியாக சிறையிலே உள்ளார். காசா பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு தெரி வித்து, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் டெண்ட் அமைத்து போராடுபவர்க ளுக்கு, சிறையில் இருந்தே வாழ்த்து செய்தி அனுப்பினார். பாலஸ்தீன விடுதலை இயக்கம் பல வகைகளில், அமெரிக்காவின் கருப்பு இன மக்களின் விடுதலை இயக்கத்தை போன்றதாகும் என அபு ஜமால் கூறுகிறார்.
கென்யாவில் இளைஞர்கள் எழுச்சி!
நவீன தாராளமயம் மற்றும் முதலாளித்துவக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, ஆப்பிரிக்க நாடான கென்யாவில், மக்கள் தொடர்ச்சியாக தெருக்களிலே இறங்கி போராடுகிறார்கள். கடந்த ஐந்து வாரங்களாக வரலாறு காணாத வகையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெறுகின்றன. ஜூன் 18-ல் அரசின் நிதி மசோதாவை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டங்கள், முற்போக் கான பல மாறுதல்களை கோரி தொடர்கிறது.
லெனின் ஒரு முறை கூறினார்:- ‘பல பத்து ஆண்டுகளாக எந்த அசைவும்/ மாற்றமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில வாரங்களில், 10 ஆண்டுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் நடந்து முடிந்து விடுகின்றன’.
சமீப காலம் வரை, தேச அளவில் அமைதி நிலவிய நாடு கென்யா. நிதி மசோதா, 2024 மூலம் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன. இவை தங்களது வாழ்க்கை நிலைமைகளை பாதிக்கும் என உணர்ந்து கொண்ட மக்கள் போராட்டப் பாதையை தேர்வு செய்தனர். இப் போராட்டங்களில் பெரும்பாலும் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஜூன் 25ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசுக்கு துணையாக ராணுவத்தை யும் அரசு இறக்கியது. நீதிமன்றமும், கென்ய சட்ட சொசைட்டியும் இம் முடிவை ஆட்சேபித்த பின்ன ணியில், நிதி மசோதா வாபஸ் பெறப்பட்டது. ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்தது.
ஜனாதிபதி ரூட்டோ, எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி விரிவடைந்த அரசை உருவாக்கினார். மக்க ளின் போராட்டங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் சம்பந்தமில்லை. புரட்சிகர உணர்வை மழுங்க டித்து, ரோட்டோவின் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கின. ஆனால் இளைஞர்கள் இந்த முயற்சிகளை எதிர்த்து நிற்கின்றனர். வேலையின்மை பெருமளவில் தலை விரித்தாடுகிறது; அரசின் பல செலவினங்கள் அரசு நிதியை விரயமாக்குகிறது; சட்ட விரோ தமான கொலைகள் அதிகரித்தன. இவையெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் கோபத்தை கிளறியது. இரண்டு ஆண்டுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் பல இளைஞர்கள் வாக்களிக்க வில்லை. கூடுதலாக 14 கோரிக்கைகளை அரசிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் வைத்தனர். தீவிர அடக்கு முறை கையாண்ட இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீசை ராஜினாமா செய்ய வைத்தனர்.
ரூட்டோ அரசு, கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. மாதா கோயிலு டன் அரசியலை கலக்கக்கூடாது என இளைஞர்கள் கூறுகிறார்கள். சமூக நீதியும், நல்லாட்சியும் வேண்டும் என்கின்றனர். ஐஎம்எப் மற்றும் உலக வங்கியே, சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத் துயரங்களுக்கு காரணம் என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.