articles

img

‘இந்து வளர்ச்சி விகிதத்’திற்கு இறங்கிய இந்தியப் பொருளாதாரம்!

அதானி குழுமத்தில் மொரீஷியஸ் முதலீடுகள்: ‘செபி’ விசாரிக்காதது வியப்பாக உள்ளது

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கை தொடர்பான கேள்விக்கும் ரகுராம் ராஜன் பதில ளித்துள்ளார். அதில், ஹிண்டன்பர்க் அறிக்கையானது, ஒன்றிய அரசுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே யுள்ள மறைமுக தொடா்புகள் முடிவுக்கு வருவதற்குக் கூட உதவியாக இருக்கலாம் என்று கூறியிருக்கும் ரகுராம் ராஜன், அதேநேரம், அதானி குழுமத்தில் வெளிநாட்டில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டது என்ற குற்றச் சாட்டு குறித்து ‘செபி’ விசாரணை நடத்தாதது வியப்பை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். “மொரீஷியஸ் நாட்டின் சந்தேகத்திற்குரிய நிறுவனங்களிடமிருந்து அதானி குழுமம் முதலீட்டைப் பெற்றதாகக் கூறப்பட் டுள்ளது. மேற்கண்ட இந்த நிறுவனங்களின் உரிமை குறித்து ‘செபி’ ஏன் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை? மொரீஷியஸை சேர்ந்த நான்கு நிதி நிறுவனங்களும் தங்களது 6.9 பில்லியன் டாலர் நிதியில் சுமார் 90 சதவிகிதத்தை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இந்த விஷயத்தில் ‘செபி’க்கு விசாரணை அமைப்பு களின் உதவி தேவையா என்ன?” என்று அவர் கேட்டுள்ளார்.

ரிசர்ச் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து 

புதுதில்லி, மார்ச் 9 - இந்தியாவில் தனியார் துறை முதலீடுக்கான வாய்ப்பு கள் குறைவாக இருப்பதாலும், சந்தையில் அதிகபட்ச வட்டி விகிதம் நிலவும் காரணத்தாலும், இந்தியாவின் பொரு ளாதார வளா்ச்சிப் பாதையில் மீட்சி என்பது இயலாத காரியம் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். “இந்திய பொருளாதாரம், 1950 முதல் 1980 வரையி லான காலத்திய இந்து வளர்ச்சி விகித (Hindu rate of growth) நிலைக்கு இறங்கிக் கொண்டிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1950 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய  பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 4 சத விதமாக இருந்தது. இந்த மந்தமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை குறிக்கும் வகையில், ராஜ் கிருஷ்ணா என்ற இந்தியப் பொருளாதார நிபுணர், 1978-இல் ‘இந்து வளர்ச்சி விகிதம்’ (Hindu rate of growth) என்ற வார்த்தை யை உருவாக்கினார். அந்த வகையில், நடப்பு 2022-23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதத்தில்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவிகிதமாக- அதாவது, 1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் இருந்ததுபோல மந்த மான பொருளாதார வளர்ச்சி அளவீட்டிற்குச் சென்றுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே ரகுராம் ராஜன், “இந்து வளர்ச்சி விகிதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிடிஐ நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழி யாக ரகுராம் ராஜன் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில்தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “முன்பு நாம், 5 சதவிகித வளர்ச்சியை எட்டினால் அதிர்ஷ்டம் என நினைத்த வேளையில் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்திய ஜிடிபி அளவு 4.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 1 சதவிகிதம் குறைவாகும். இந்தியப் பொருளாதாரம் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்டவர்கள் கடந்தகால ஜிடிபி (GDP) அளவைக் காட்டிலும் கூடுதலான வளர்ச்சியைத்தான் எதிர்பார்ப்பார்கள்; ஆனால், தொடர்ச்சியான மந்த நிலையை அடைந்து வருவதைக் கண்டு நான் கவலைப் படுகிறேன். தனியார் துறை முதலீடு செய்ய விரும்பாத நிலை யில், இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கூடுதல் வளர்ச்சி வாய்ப்புகள் எங்கு உள்ளது என எனக்குத் தெரியவில்லை?  இந்தியாவில் இருந்து கைப்பேசி ஏற்றுமதி அதி கரிப்பதை இத்திட்டத்தின் வெற்றிக்கு உதாரணமாக அரசு செய்தித் தொடா்பாளா்கள் கூறலாம். ஆனால், ஒவ்வொரு கைப்பேசிக்கும் இந்தியா வெவ்வேறு வழிகளில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கிறது என்பதை நினை வில் கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் ஒன்றிய அரசு அதிக பணத்தை முதலீடு செய்து வருகிறது. ஆனால், ஒரு வேலை வாய்ப்பை உருவாக்க எவ்வளவு நிதி முதலீடு தேவைப்படுகிறது என்பது முக்கியம். முதலீட்டுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் உருவாவது இத்திட்டத்தில் குறைவாகவே உள்ளது. எனவே,  இது எதிா்பாா்த்த பலனைத் தராது. ஒன்றிய அரசு அறிவித்த திட்டங்களின் முதலீடுகள் அடுத்த 4 ஆண்டுகளில் முழுமையாக வந்தாலும் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே இந்தியாவில் புதிய முதலீடுகள் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும். அரசு வெளியிடும் வேலைவாய்ப்பு தரவுகள் பொரு ளாதார வளர்ச்சிக்கு சாதகமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இல்லை. உள்கட்டமைப்புத் துறை முதலீடுக ளில் கவனம் செலுத்தும் அரசு, உற்பத்தித் துறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சேவைகள் துறையில் அரசின் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.

உலகில் வளா்ந்த பொருளாதார நாடுகள் அனைத்தும் இப்போது சேவைத் துறை சாா்ந்ததாக உள்ளன. இதில், போக்குவரத்து, சுற்றுலா, சில்லரை வா்த்தகம், தங்கும் விடுதிகள், கட்டுமானம் ஆகிய துறைகளில் இடைநிலைத் திறன் உள்ளவா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், தனியார் துறையினர் புதிய முதலீட்டில் ஆா்வம் காட்டவில்லை. இதற்கு ரிசர்வ் வங்கியும் தொடா்ந்து வட்டி  விகிதத்தை உயா்த்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை எட்டும் என்று கருதப்படுகிறது. இவ்வளவுக்கு இடையிலும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிப் பாதையில், ‘மீட்சி’ என்பது இயலாத காரியம் என்பதே எனது கருத்து. 2023-24 நிதி யாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் எவ்வாறு இருக்கும் என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வி. அது 5 சதவிகிதத்தை எட்டினாலே மிகவும் அதிருஷ்ட வசமான நிகழ்வாக இருக்கும்.  இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.