articles

img

சூறையாடப்படும் புதுச்சேரி கடல் வளங்கள்; அழிக்கப்படும் மீனவர்கள் வாழ்வாதாரம் - எஸ். ராமச்சந்திரன், புதுச்சேரி மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

“இந்திய - நார்வே ஒருங்கிணைந்த கடல் முன்னெடுப்புகள்” என்ற அடிப்படையில், ஒன்றிய ஆட்சியாளர்களால் 2019 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாக் கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு அதற்குரிய சோதனைக் களங்களாக புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கடைகள் மூடல், மின்துறையை தனியாருக்கு விற்பது, புதிய கல்விக் கொள்கை போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை அமல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு புதுச்சேரியை ‘எலியாக’ பயன்படுத்துவது போல், கடல் வளக் கொள்ளைத் திட்டத்தையும் அமல்படுத்தத் துடிக்கிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

புதுச்சேரி அரசின் திட்டமிட்ட மறைப்பு

இந்த ஒப்பந்தங்களையும், செயல்பாடுகளையும் புதுச்சேரி அரசு திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறது. இது புதுச்சேரி மக்களின் நலன்களுக்கு எதிரானது. மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளோடு தொடர்பு டையது. கடல் வளத்தில் மீனவர்களுக்கான உரிமை களை யாரும் மறுக்க முடியாது. அவர்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்துவதும், திட்டமிடலில் அவர்களது ஆலோசனைகளைப் பெறுவதும் புதுச்சேரி மாநில நலனுக்கு மிகவும் அவசியம். புதுச்சேரியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவு கள் மற்றும் “கடல் இடங்களைச் சார்ந்த திட்டமிடல்” (Marine Spatial Planning - MSP)  மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பாரம்பரிய உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

திட்ட வரைவுகளில் வெளிப்படைத்தன்மை இன்மை

நடைபெற்று வரும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவுகளில், மீன்பிடி பகுதிகள்,  மீனவர்களின் வாழ்வாதாரங்கள், கடல் எல்லைகள் மற்றும் பயன்பாட்டு இடங்களைச் சுட்டும் வரை படங்களில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன. இத்திட்டப் பணிகள் மீனவ மக்களின் ஒப்புதலோடு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறாததால், வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பான வையாக உள்ளன. ஏற்கனவே குழப்பமான ஒரு வரைவுத் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிலை யில், மேற்கண்ட எம்எஸ்பி (MSP) போன்ற மற்றொரு வரைவுத் திட்டம் தொடங்குவது மேலும் சந்தேகங்க ளை எழுப்புகிறது.

‘நீலப் பொருளாதாரம்’ - யாருக்கானது?

இந்தியப் பிரதமர், “இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் டாலராக உயர்த்த கடலில் உள்ள வளங்கள் தேவை” எனக் கூறியுள்ளார். கடலில் உள்ள வளங்களை ஒட்டுமொத்தமாக ‘நீலப் பொருளாதாரம்’ (Blue Economy) என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த நீலப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படைக் கருவியே ‘கடல் இடங்களைச் சார்ந்த திட்டமிடல்’ (MSP) ஆகும். ஆனால், யாருடைய பொருளாதார வளத்தை உயர்த்த பிரதமர் இவ்வாறு கூறுகிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மீனவர்களின் உரிமைகள் புறக்கணிப்பு

கடல் வளம் சார்ந்த அளவீட்டுப் பணிகள் புதுச்சேரியில் 2021 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றன. இந்திய நீலப் பொருளாதாரம் குறித்த கொள்கை வரைவு அறிக்கை செப்டம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை மீன்வளம், மீன் பதப்படுத்துதல் மட்டுமல்லாமல், கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் சார்ந்த அத்தனை வளங்களையும் உள்ள டக்கிய ஏழு முக்கிய துறைகளை நீண்டகால லாப நோக்கோடு வரையறுத்துள்ளது. ஆனால், இந்த வரைவு அறிக்கையில் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தோ, அவர்களின் உரிமை குறித்தோ, அனைத்தி ற்கும் மேலாக கடல் சார்ந்த அவர்களின் பாரம்பரிய உரிமைகள் குறித்தோ எவ்விதக் குறிப்பும் இல்லை.

மீனவர்களுக்கான பிரத்யேக பாதுகாப்புச் சட்டம் தேவை

மலைவாழ் மக்களுக்கு மலை சார்ந்த வளங்களில் பாரம்பரிய உரிமை உண்டு, அதனைப் பாதுகாக்க ‘வனப் பாதுகாப்பு சட்டம்’ உள்ளது. அதேபோன்று, பாரம்பரிய சமூகப் பின்புலத்தோடு வாழ்ந்து வரும் மீனவர் சமூகத்தைப் பாதுகாக்கவும், கடல்சார் வளங்களில் அவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யவும் ஒரு பிரத்யேக பாதுகாப்புச் சட்டம் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

கடல் வளங்களின் தொடர் சூறையாடல்

ஏற்கனவே காரைக்கால் உள்ளிட்ட பல துறை முகங்கள் அதானிக்குச் சென்றுவிட்டன. கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய இயற்கை வளங்கள் ரிலை யன்ஸ், வேதாந்தா போன்ற நிறுவனங்களிடம் பறிபோ யிருக்கின்றன. எரிவாயு, ஹைட்ரோ கார்பன் என்று கடல் வளத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிப்படையான விவாதம் தேவை

கோடிக்கணக்கான மதிப்பிலுள்ள கடல் வளங்க ளையும், அதற்குரிய மேலாண்மைத் திட்டங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மட்டுமே செய்ய  வேண்டும்; இது போன்ற கடல் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும் போது, அனைத்துப் பகுதி மக்க ளுக்கும் தொடர்புடைய சூழலியல் சார்ந்த பிரச்சனை களையும் கணக்கில் கொள்ள வேண்டும்; மேலும் உட னடியாக புதுச்சேரி அரசு நடைபெற்று வரும்  கணக்கெ டுப்பை நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.