ஆங்கிலேயர் ஆட்சியில், தஞ்சை மண்ணில் நிலப் பிரபுக்கள் கொடுங்கோலர்களாக ஆட்சி செய்த காலம். குத்தகை விவசாயி களும், கூலி அடிமைகளும் மனிதர் களாகக் கூட கருதப்படாத கொடூரக் காலம். விலங்குகளை அடித்து கொடுமை செய்வது போல, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை விவ சாயிகள் சித்ரவதை செய்யப்பட்ட அந்த இருண்ட காலத்தில்தான் - 1932 நவம்பர் 20 அன்று திருவாரூர் மாவட்டத்தின் சித்தாடி என்ற தொலைதூர கிராமத்தில் மனித உரிமைப் போராளியான “தோழர் ஜீவி” என்று பின்னாளில் அன்போடு அழைக்கப்பட்ட கோ.வீரய்யன் பிறந்தார். செருகளத்தூர் மிராசுதாரின் பண்ணையில் தோழர் ஜீவியின் தந்தை வேலை செய்ததால், 4-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. சிறுவனாக இருந்தபோதே தந்தைக்கு உதவ பண்ணை வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரத்தில்தான் ஏழை விவசாயிகளின் விடுதலைக்காக மனிதப் புனிதர் தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் தென்பறையில் விவசாயி கள் சங்கம் தொடங்கப்பட்டது. திருத் துறைப்பூண்டி, மன்னார்குடி, கீழ்வேளூர் பகுதிகளில் தோழர்கள் அமிர்தலிங்கம், களப்பால் குப்பு, மணலி கந்தசாமி ஆகியோர் சங்கத்தை வளர்த்தனர்.
திருப்புமுனை
சிறுவனாக இருந்த ஜீவிக்கு, தோழர் குப்புசாமி மூலம் விவசாயிகள் சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிமுகமானது. பண்ணையாள் குடும்பத்தைச் சேர்ந்த வர் என்பதால் உடனே கட்சியில் சேர முடியவில்லை. ஆனால் தோழர் குப்பு சாமி அறிமுகத்தில் மணலி கந்தசாமி யை சந்தித்ததுதான் வாழ்க்கையின் திருப்புமுனையானது. 1949-ல் கட்சியில் சேர்ந்த தோழர் ஜீவி, கட்சி தடை செய்யப்பட்டிருந்த 1949-51 காலத்தில் தலைமறைவு தலைவர் களுக்கு துணிச்சலுடன் உதவிசெய்தார். ஒருமுறை இரவில் போலீஸ் சோத னைக்கு வந்தபோது, “ஆசாரி ஆசாரி” என்று உரத்த குரலில் கத்தி தலை வர்களை காப்பாற்றினார். விடியும் வரை ஓடி தப்பித்தார் ஜீவி. ஆனால் அவரது தந்தை கைது செய்யப்பட்டார். கிராம முன்னேற்றச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி இளைஞர்களை ஒன்று திரட்டினார். கட்சியின் ஜனசக்தி பத்திரிக்கையை வாரம் 20 பிரதிகள் வாங்கி விற்று, படிப்பவர்களை கட்சி உறுப்பினராக்கினார்.
மாபெரும் போராட்டம்
1950-களில் குத்தகை விவசாயிகள் மீது மிராசுதார்கள் கொடுமை அதி கரித்தபோது, திருத்துறைப்பூண்டியில் 60,000 பேர் பங்கேற்ற மாபெரும் போரா ட்டத்தை நடத்தினார். இதன் விளைவாக 1952-ல் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நடந்த தேர்தலில் 19 தொகுதி களில் 10 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று, முதன்முறையாக ஏழை மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது. 1954-56 காலத்தில் கூலி உயர்வுக் கான போராட்டங்கள் வெற்றிபெற்றன. கூலி அடிமைகள் விவசாயத் தொழிலா ளர்களாக மாறினர். 1959-ல் தமிழகத்தில் முதன்முறையாக குறைந்தபட்ச கூலி சட்டம் கொண்டுவரப்பட்டது. 1968-ல் கீழ்வெண்மணியில் 44 தொழி லாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த கிராம மக்களை மீள்குடி யமர்த்தவும், பாதுகாக்கவும் தோழர் ஜீவி முன்னின்று போராடினார். தியாகி களுக்கு நினைவிடம் அமைய உதவி னார். 1984, 1989-ல் சட்டமன்ற உறுப்பின ராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். காவிரி நீர் பிரச்ச னையில் இன ரீதியான பிளவுகளை தடுத்து, விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்தார். விளைபொருட் களுக்கு நியாய விலை, அரசு கொள்முதல் மின்சார மானியம் தொடர பல போராட்டங்களை நடத்தினார். நீண்ட காலம் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும், செயலாளராக வும், அகில இந்திய அமைப்புகளின் நிர்வாகியாகவும் மகத்தான மக்கள் பணியாற்றினார். அவரது தொடர் போரா ட்டங்களால் 1996-ல் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் நலவாரியம் உருவானது. உடல்நலம் குன்றிய போதும், செவித் திறன் குறைந்தபோதும், நீண்ட தூரம் பஸ்ஸில் பயணித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை மக்களுக்காக உழைத்த தோழர் ஜீவி, 2018 நவம்பர் 18 அன்று இயற்கை எய்தினார். மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்த தோழர் ஜீவியின் சித்தாந்த த்தை உயர்த்திப் பிடிப்போம். எஞ்சி யிருக்கும் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்து வோம். கார்ப்பரேட் - நிலப்பிரபுத்துவக் கூட்டு கிராமங்களில் ஏற்படுத்திய நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாக்க போராடுவதே தோழர் ஜீவிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்!
இன்று தோழர் கோ.வீரய்யன் நினைவு நாள்