articles

img

உமர் காலித்துக்கு மறுக்கப்படும் பிணை நீதித்துறையின் மீது படிந்த கறை - குர்சிம்ரன் கவுர் பக் ஷி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு)  மாணவரும் செயற்பாட்டாளருமான உமர் காலித் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரத்திற்கு சதித் திட்டம் தீட்டினார் என்று பொய் வழக்கு புனை யப்பட்டு, 2020 செப்டம்பர் 13 அன்று “உபா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின்றி 1000 நாட்கள் சிறையில் கழித்த போதும், அவருக்கான பிணை தொடர்ந்து மறுக்கப் பட்டு வருகிறது. 2020 பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலம் அமரா வதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக உமர் காலித் பேசியது இந்திய அரசிற்கு எதி ராக வன்முறை தூண்டும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறி, 2020 செப்டம்பர் 13 அன்று தில்லி காவல் துறை அவரை தேச துரோக வழக்கில் கைது செய்தது. மேலும் தில்லி கலவரத்திற்கு திட்டம் தீட்டிய நபர்க ளில் முதன்மையானவர் என குற்றம் சாட்டியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி யில் நடைபெற்ற போராட்டத்தை தூண்டியதாக உமர் காலித், அதர் கான், ஆசிப் இக்பால் தன்ஹா, தேவாங்க னா கலிதா, குல்பிஷா பாத்திமா, இஷ்ரத் ஜஹான், காலித் சைஃபி, மீரான் ஹைதர், முகமது ஃபைசன் கான், நடாஷா நர்வால், சஃபூரா சர்கர், சலீம் கான், சலீம் மாலிக், ஷதாப் அகமது, ஷர்ஜீல் இமாம், ஷிஃபார் தஸ்லீம் அகமது மற்றும் தாஹிர் உசேன் ஆகிய 17 பேர் மீதும் தில்லி  காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

தில்லி கலவரம்: உண்மை என்ன?

2020 பிப்ரவரி மாதம் வடக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்- அதா வது ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல்கள், அச்சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினார்கள்.கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், மசூதிகள் உள்ளிட்டவை மீது தாக்கு தலைத் தொடுத்தார்கள்.சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஆர்எஸ்எஸ்,ஏபிவிபி உள்ளிட்ட அமைப்புகள் மதவெறிக்  கலவரமாக மாற்றிவிட்டதைத் தொடர்ந்து 53 பேர் கலவரத்தில் கொல்லப்பட்டனர்; 100 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்; மற்றும் 758 வழக்கு கள் பதியப்பட்டு 1300 நபர்களை தில்லி காவல்துறை கைது செய்தது; (மேற்கண்ட பாதிப்புகளைச் சந்தித்த பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்) என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையில் 2020இல் வெளியிடப்பட்ட ‘நிச்சயமற்ற நீதி’ என்ற வடகிழக்கு தில்லி வன்முறை குறித்தான குடிமக்கள் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வன்முறையை தூண்டிய பாஜகவினர்

ஒன்றிய பாஜக அரசு, மதவெறியுடன் குடி யுரிமைச் சட்டத்தை திருத்திய அணுகுமுறை இஸ்லா மிய மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.சிஏஏ போராட்டம் நடைபெற்ற சமயம் தில்லி தேர்தல் காலம் என்பதால் தேர்தல் பிரச்சாரத்தில், “போராட் டத்தில் ஈடுபட்டவர்களை தேசவிரோதிகள், வன்முறை யாளர்கள்” என்று கூறி அனுராக் தாக்கூர்,கபில் மிஷ்ரா  உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மதவெறியைத் தூண்டி விட்டனர். ஒரு பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்கூர் ‘அவர்கள் நாட்டின் துரோகிகள்’ என்று போராட் டக்காரர்கள் குறித்து பேசிய போது ‘அவர்களை சுடுங்கள்’ என்று கொலைவெறியோடு பாஜக ஆதரவா ளர்கள் திரும்ப குரல் எழுப்பும் அளவிற்கு மதவெறி யுணர்வை பாஜக தலைவர்கள் தூண்டி விட்டனர். தில்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் பிப்ரவரி 23 அன்று சிஏஏ ஆதரவு போராட்டத்தை அனுராக் தாக்கூர் அறிவித்தார்.அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை பாஜக  கூட்டியதில் அங்கு கலவரம் வெடித்தது.மேலும் பாஜக தலைவரும் மேற்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பர்வேஸ் வர்மா, “லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடுகிறார்கள்; அவர்கள் இந்துக்களின் வீட்டிற்குள் நுழைந்து அனைத்தையும் சூறையாடுவார்கள்; உங்களது சகோதரிகள், தாய்மார்களை கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வார்கள்” என்று அருவருக்கத்தக்க விதமாக, அப்பட்டமான மதவெறி வன்முறையைத்  தூண்டிவிட்டார்.

உமர் காலித் மீது திட்டமிட்ட வழக்கு

உண்மை நிலவரம் இப்படி இருக்க, உமர் காலித் மீது தில்லி காவல்துறை இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தது.ஒன்று (FIR no. 59/2020), இந்திய தண்டனைச் சட்டம் 147 (கலவரம் ஏற்படுத்தியது), 148 (கலவரம் செய்வதற்கு கொடிய ஆயுதங்கள் வைத்திருத்தல்), 149 ( சட்டவிரோத கும்ப லில் உறுப்பினராக இருத்தல்)- 302 (கொலைக்கான தண்டனை) மற்றும்  13 (சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபடுதல்), 16 பயங்கரவாத செயல் மற்றும் 18 (சதி திட்டம் தீட்டியது) ஆகிய பிரிவுகளின் கீழ், உபா சட்டத்தின் கீழ் வழக்கு புனையப்பட்டுள்ளது.இவற்றோடு, கலவரம் செய்ய ஆயுதங்கள் பயன் படுத்தினார் என ஆயுதச் சட்டம் 1959இன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், தேச துரோக குற்றம் செய்தார் என  125A, மதம்-  இன அடையாளத்தை வைத்து இரு குழுக்களுக்கு இடையே கலவரங்களை தூண்டிவிட்டார் என  153A ஆகிய பிரிவுகளை 2021 ஆண்டு தில்லி காவல்துறை, உமர் காலித் மீதான வழக்கில் வேண்டுமென்றே நுழைத்தது. இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் (FIR no. 101) உமர் காலித், அவரது நண்பர்கள் ஹுசைன் மற்றும் கஜூரி ஹாசில் ஆகியோருடன் வட தில்லி பகுதியில் தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றும்,  போலீசார் மீது கற்களை வீசி வாகனங்க ளுக்கு தீவைத்த கும்பலோடு கஜூரி ஹாசில் இருந்தார் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இரண்டாவது முதல் தகவல் அறிக்கையின் படி கலவரம் மற்றும் தீவைத்த சம்பவத்தில் காலித் அங்கு இருந்தார்  என்பதை தில்லி காவல்துறையால் நிரூபிக்க இயலாத காரணத்தால் 2021 ஏப்ரல் மாதம் தில்லி  செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.  

இருப்பினும் புனையப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி அவரால் பிணையில் வர இயலவில்லை.

இதேபோல தில்லி காவல்துறை பதிந்திருந்த 758 முதல் தகவல் அறிக்கைகளில் உள்ள ஒருவரான நூர் முகம்மது என்பவருக்கு எதிராக பொய் சாட்சிகளை காவல்துறை சமர்ப்பித்ததை சுட்டிக் காட்டிய நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 

துப்பாக்கியால் சுட்ட ஏபிவிபிகாரர்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில்  ஏபிவிபி மாணவர் அமைப்பை சேர்ந்த கோபால் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போதும், போராட்டக்காரர்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்திய போதும் தில்லி காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. காவலர்களே சிசிடிவி காமி ராக்களை அடித்து உடைக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.இந்த தகவல்களின் அடிப்படையில் தில்லி  காவல்துறை கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு உடந்தையாக இருந்தது அம்பலப்பட்டது.உண்மையில் கலவரங்களை தூண்டுதல், கொலைவெறி தாக்குதல் நடத்துதல்,கலவரங்களுக்கு கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட வேண்டியவர்கள்  பாஜக தலைவர்கள் மற்றும் ஏபிவிபி அமைப்பினரே. ஆனால் தில்லி உயர்நீதிமன்றம் இதே புனையப்பட்ட காரணங்களைக் காட்டி உமர் காலித்தின் பிணையை மறுத்து வருகிறது.உமர் காலித்துடன் கைது செய்யப்பட்ட 17 நபர்களில் இதுவரை ஃபைசன் கான், நர்வால், கலிதா, தன்ஹா மற்றும் சஃபூரா சர்கர் ஆகிய ஐந்து நபர்களுக்கு மட்டுமே பிணை கிடைத்துள் ளது. (சஃபூரா சர்கர்  கர்ப்பிணியாக இருந்ததால் பிணை பெற முடிந்தது). தமக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற வெறியில் அரசியல் அமைப்பின் படியான உரிமைக்கான போராட்டத்திற்கும் தீவிரவாத செயல்பாட்டிற்கும் இடையிலான வேறுபாட்டை ஒன்றிய பாஜக அரசு அழித்து விட்டது. 

அரசியல் கைதியா? தேச விரோதியா?

அரசியல் கைதியாக அறியப்படும் உமர் காலித் திட்டமிட்டு தேச விரோதியாக கட்டமைக்கப்பட்டுள் ளார்.தேச விரோதியாக உள்ள ஒருவர் கட்டாயமான முறையில் தண்டிக்கப்படுவார்.ஆனால் உமர் காலித் மீது அனைத்தும் புனையப்பட்ட வழக்குகளாக இருப்ப தால் அவர் கீழமை நீதி மன்றத்தில் பிணை பெற்று விடக்கூடாது என்ற நோக்கத்துடன் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிணை மறுக்கப் பட்டு சிறைக்குள்ளேயே இருக்கும்படி செய்துள்ளது  பாஜக அரசு. (உபா சட்டம் தனி நபர் உரிமையை பறிப்பதோடு பிரிவு 43D(5) கீழ் பிணை கிடைப்பதை சாத்தியம் இல்லாத ஒன்றாக மாற்றுகிறது ).நீண்ட கால சிறைவாசம் என்பது அரசியல் அமைப்பின் பிரிவு 21 இன் படி ஒரு நபரின் உயிர் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாகும். உமர் காலித் விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் நிலையில், நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் வேளை யில் குற்றம் உறுதி செய்யப்பட்டது போல கைவிலங் கிட்டு தனிநபர் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.தில்லி போராட்டத்தில் அப்பட்டமான கலவரத்தை தூண்டிய அனுராக் தாக்கூர் கேபினட் அமைச்சராக உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இரு பாஜக தலைவர்க ளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் உமர்காலித் தும் அவர்களின் நண்பர்களும் பொய்யாக புனையப் பட்ட வழக்கில் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டு கிடப்பது நீதித்துறையின் இரட்டைத் தன்மையைக் காட்டுகிறது. ஜேஎன்யுவில்  முனைவர் பட்டம் பெற்ற இளம் போராளி டாக்டர் உமர் காலித் ஆயிரம் நாட்கள் கடந்தும் சிறையில் இருப்பது வெறும் நாட்கள் அல்ல... இந்திய நீதித்துறையின் மீது படிந்துள்ள கறை. 

நன்றி: ‘லீப்லெட்’ இணைய இதழ், 
கட்டுரையாளர் : ஊடகவியலாளர்
தமிழில் சுருக்கம் : சேது