articles

img

உ.பி.யில் ஓட ஓட விரட்டப்பட்ட பாஜக ‘ராமர்’ அரசியலுக்கு முடிவு கட்டிய மக்கள் -அ.விஜயகுமார்

பாஜகவின் முக்கிய லட்சியங்களாக சொல்லப்பட்டு வந்தவை பொது சிவில் சட்டம், காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து, அயோத்தியில் ராமருக்கு கோவில். இந்த 3  லட்சியங்களில் முதலாவதை தவிர மற்ற இரண்டும் நிறைவேறிவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அதற்காக அரசியல் சாசனத்தை திருத்த மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியைத் தாருங்கள் என்றும் நாட்டு மக்களிடம் பாஜக கேட்டது.

இது அவர்களின் 3ஆவது லட்சியம். இதற்காக பாஜக இலக்கு வைத்த முக்கியமான  மாநி லங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். காவி இயக்கத்தின் கோட்டையாக கருதப்பட்ட  அந்த மாநிலத்தில் 80 தொகுதிகளையும் வென்று அந்த லட்சியத்தையும் பாஜக நிறைவேற்றும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கொக்கரித்தனர். ஆனால் அவர்களுக்கு உத்தரப்பிர தேச மாநில மக்கள் மறக்கமுடியாத பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டனர்.  மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்பதுதான் அந்தப் பாடம்.

மோடியை அலறவிட்ட அயோத்தி

பைசாபாத் மக்களவைத் தொகுதியில்  79 வயதான மூத்த தலித் தலைவரும் சமாஜ் வாதி கட்சியின் வேட்பாளருமான  அவதேஷ் பிரசாத் பெற்ற வெற்றியும் ஆன்மீக நகரமான வாரணாசியில் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதையும் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். 2014 மக்கள வைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 5லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்குகள் (56.37 விழுக்காடு)  பெற்று வெற்றிபெற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அவர்  6லட்சத்து 74 ஆயிரத்து 644 வாக்குகளை  பெற்றார். அதாவது 2014 தேர்தலை விட கூடுதலாக (63.62 விழுக்காடு) பெற்றார். 

ஆனால் இந்தத் தேர்தலில் பிரதமர் 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகளை (54.24 விழுக்காடு) மட்டுமே பெற்றார். இது கடந்த தேர்தலைவிட 9 விழுக்காடு குறைவாகும். இது மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதையே காட்டுகிறது.  அதே வேளையில் இந்த தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்ட அஜய்ராய் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 14விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றார். இம்முறை 40.74 விழுக்காடு வாக்குகளை பெற்று மோடிக்கு கடும் சவாலை ஏற்படுத்தினார். 

தகர்ந்து போன   புதிய இந்தியாவின் சின்னம்

ராமர் கோவில் கட்டினால் போதாது. மக்களின்  வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பைசாபாத் மக்களவைத் தொகுதி  உட்பட உத்தரப்பிரதேச மாநிலமே முழங்கியது.  இதனால் ராமர் கோவிலை புதிய இந்தியாவின் சின்னமாகவும் இந்துத்வா கொள்கையின் கோட்டையாகவும்  மாற்ற முயற்சித்த பாஜகவின் திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டனர் அம்மாநில மக்கள். 

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவி லில் மோடி தலைமையில் ஜனவரி 22-ஆம் தேதி  பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இந்த  நிகழ்ச்சியை நாடுமுழுவதும் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பி தேசிய விழாவாக மாற்ற பாஜகவினர்  முயற்சித்தனர்.  கோவில்  திறக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் இருந்து சிறப்பு ரயில்களில் ராமர் கோவிலுக்கு  லட்சக்கணக் கான மக்களை  பாஜகவினரும் இந்து அமைப்பு களும் அழைத்துச்சென்றன. ஆனால் நான்கே மாதங்களில் பாஜவின் திட்டத்திற்கு மக்கள் வேட்டு வைத்துவிட்டனர். இதனால் நாட்டிலேயே அதிக  மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில்  டபுள் என்ஜின் சர்க்கார் தடம்புரண்டுவிட்டது.

மாற்றி எழுதப்பட்ட தீர்ப்பு 

 ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியின் வெற்றி அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.   எப்படியாவது அந்த தொகுதியை தக்கவைத்துவிட வேண்டும் என்று பாஜக பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டது.  அந்த நகரையொட்டிய கிராமங்களில் கூட்டங் களை நடத்தி மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு எந்தவித உறுதியும் அளிக்காமல் இந்த முறையும் வெற்றியை தாருங்கள் என்றது. மறுபுறம் இந்தியா கூட்டணி பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின  மக்களை ஒன்றுதிரட்டியதால் பைசாபாத் தொகுதியின் தீர்ப்பு மாற்றி எழுதப் பட்டது. இதனால் ராமர் கோவில் அமைந்துள்ள பகுதியிலேயே பாஜக மண்ணை கவ்வியது. 

அதிர்வலைகளை ஏற்படுத்திய   சமுகநீதி கூட்டணி

ஜோ ராம் கோ லயேங்கே, ஹம் உங்கோ லயேங்கே (ராமரை கொட்டகையில் இருந்து வெளியே  கொண்டு வந்தவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்) என்ற பாஜகவின் அழைப்பை அகிலேஷ் யாதவ் தலைமையிலான  பிடிஏ (பிச்டா, தலித், அல்ப்சங்க்யாக்) அதாவது பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் கூட்டணி நிராகரித்து விட்டது.  அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்தும் அகிலேஷ் யாத வின் சோதனைமுயற்சியும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.  இதன் எதிரொலி உத்தரப்பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் எதிரொலிக்கப்போகிறது.     

1980 ஆம் ஆண்டு ஜனசங்கம்  பாஜக என்ற அரசியல் கட்சியாக  மாறியதில்  இருந்தே முக்கிய தேர்தல் சாதனைகளில் ஒன்றாக ராமர் கோவில் திட்டம் உருவாக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, பசி பட்டினியால் வாடும் ஏழை எளிய மக்கள் எங்களுக்கு வளர்ச்சியே முக்கியம் கோவில் அல்ல என்பதை நிரூபித்துவிட்டனர்.

நாங்கள் பாஜகவின்  அடியாட்கள் அல்ல!

மில்கிபூரின் சட்டப்பேரவைத்தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவதேஷ்  பிரசாத், 1977 முதல் ஒன்பது முறை சட்டமன்றத்  தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவம் உடை யவர். 1989 மற்றும் 1993-95இல் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி  ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.  பிரசாத்தின் வெற்றி, பைசாபாத் தொகுதியில் பாஜகவை நிலைகுலையச் செய்தது மட்டுமின்றி, தலித்துகள் உள்ளிட்ட விளிம்புநிலை இந்து மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக அடியாட்களாக நிறுத்தும், பாஜகவின் திட்டத்தையும் முறியடித்து விட்டது. பாஜகவின் காவிமயமாக்கல் திட்டத்திற் கான துவக்கவிழாவை சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணியின் சமூகப் பொறியியல் திட்டம் மூடு விழாவாக மாற்றிவிட்டது. இது இந்திய  அரசியலில்  வெற்றிகரமான யுக்தியாக உருவெடுத்துள்ளது. உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டால் அவற்றுக்கு  முன்பு சாதி மதம் ஒரு பொருட்டே அல்ல என்பதை பைசாபாத் மக்களவைத் தொகுதியின் முடிவு நிரூபித்துள்ளது. 

பைசாபாத் மட்டுமல்ல, இம்மாநிலத்தில்  மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 41 மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றியும் இதைத்தான் சுட்டிக்காட்டு கின்றன. இதுதான் புதிய இந்தியா. பாசிச பாஜக வை தனிமைப்படுத்த இதுபோன்ற யுத்திகள் மதச்சார்பற்ற சக்திகளுக்கு கை கொடுத்துள்ளது. 

மேலும் பைசாபாத் தொகுதியில் பிரசாத்தின் வெற்றி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.  ஏனெனில் அவர் தோற்கடித்த வேட்பாளரான லல்லு சிங், அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு  வந்து பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முழங்கியவர்.  2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள வைத் தேர்தலில்  எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட லல்லு சிங், ராமர் கோவில் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் மற்றும் பாபர் மசூதி  இடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளி. இந்த வழக்கில் இருந்து 2020 இல் தான் அவர் விடுவிக்கப்பட்டார். ராமர்கோவிலை வைத்து பாஜக இனியும் அரசியல் செய்யமுடியாது என்பதை தங்களது விலைமதிப்பற்ற வாக்கு களால் உத்தரப்பிரதேச மக்கள் தெளிவாக புரிய வைத்துவிட்டனர். 

கடந்த கால தேர்தல்கள்

பொதுவாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1989க்கு பிறகு ஒவ்வொரு மக்களவைத் தேர்தலி லும் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என நான்கு கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவும். பதிவாகும் 60 விழுக்காடு வாக்கு களில் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வெறும் 15 அல்லது 16 விழுக்காடு வாக்குகளை மட்டுமே  பெற்று கடந்த 20 ஆண்டுகளாக பாஜக வெற்றி பெற்று வந்தது. உழைக்கும் தலித் மக்களை அடை யாள அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக்  கொண்டு தன்னை மட்டுமே வளப்படுத்திக் கொண்ட மாயாவதி அந்த மக்களிடமே அம்பலப் பட்டுப் போனார். இதனால் உத்தரப்பிரதேச மாநில அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட மாயாவதி செல்வாக்கு இழந்தார். ஆனால் அந்த மக்களை சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அரவணைத் துக் கொண்டது. பிற்படுத்தப்பட்ட, தலித், சிறு பான்மையின மக்களை ஒன்றுபடுத்தினால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதை உத்தரப்பிர தேசத்தில் உள்ள சாமானிய மக்களின் தீர்ப்பு  நிரூபித்துவிட்டது. எனவே இனியும் வெல்ல முடியாத சக்தியல்ல பாஜக.