கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கம் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஊகான் மாகாணத்தில் முதன் முதலில் ஏற்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதன் ஒருபகுதியாக இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின்போது கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுதல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.