பிரிவு
தற்போதைய செய்திகள்
சிதம்பரத்தில் நந்தனார் சிலை வீதி உலா ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு கோலாகலம்
yesterday • நமது நிருபர்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு நந்தனார் சிலை வீதி உலா நடைபெற்றது. நந்தனார் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

அழகுப்படுத்தும் பணிகளை மாநகராட்சி
yesterday • நமது நிருபர்
மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அழகுப்படுத்தும் பணிகளை ஆணையர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார். பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மணலியில் கட்டுமானப் பணியின்போது கேஸ் குழாய் உடைப்பு: எரிவாயு கசிவு
yesterday • நமது நிருபர்
சென்னை மணலியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியின்போது எரிவாயுக் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கசிவைக் கட்டுப்படுத்தினர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஆயிரங்கால் மண்டபத்தில் தள்ளுமுள்ளு செய்தியாளர்கள் மீது தாக்குதல்
yesterday • நமது நிருபர்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவில் தீட்சிதர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கேட்டிங் மினி மாரத்தான் உலக சாதனை படைத்த சிறுமி
yesterday • நமது நிருபர்
சென்னையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடைபெற்ற ஸ்கேட்டிங் மினி மாரத்தானில் மாணவி நிவிஷாஸ்ரீ 5 கி.மீ தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தார். அவருக்குப் பாராட்டுக்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

மயானப் பாதை விவகாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு
yesterday • நமது நிருபர்
கள்ளக்குறிச்சி செல்லியம்பாளையம் கிராமத்தில் மயானப் பாதை தொடர்பாக நிலவிய மோதல், அரசு அதிகாரிகள் மற்றும் சிபிஎம் கட்சியினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் சுமூகமாக முடிவுக்கு வந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
yesterday • நமது நிருபர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆட்சியர் வந்தனா கார்க் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து நலத்திட்டங்களை வழங்கினார்.

கடலில் மாயமான 3 மீனவர்களை கண்டுபிடிக்க கோரி ஆட்சியரிடம் மனு
yesterday • நமது நிருபர்
பரங்கிப்பேட்டையில் கடலுக்குச் சென்று 7 நாட்களாக மாயமான 3 மீனவர்களை ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடி மீட்கக் கோரி, அவர்களது உறவினர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சென்னை விரைவு செய்திகள்
yesterday • நமது நிருபர்
திருவண்ணாமலை: நெல் சாகுபடிக்கு மானியம் ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஜூன் 22- திருவண்ணாமலை மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் 38,900 எக்டர் பரப்பளவில் நெல்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்
yesterday • நமது நிருபர்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பம் பகுதியில், கொண்டங்கி ஏரியைத்
yesterday • நமது நிருபர்
கடலூர் கொண்டங்கி ஏரி தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கல்வராயன் மலையில் கனமழை: பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
yesterday • நமது நிருபர்
கல்வராயன் மலையில் பெய்து வரும் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

