தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர்கள் பேருந்து விபத்து: 13 பேர் காயம் ஆட்சியர் நேரில் ஆறுதல்

5 hours before
அரசு ஊழியர்கள் பேருந்து விபத்து:  13 பேர் காயம் ஆட்சியர் நேரில் ஆறுதல்
<p>அரசு ஊழியர்கள் பேருந்து விபத்து: 13 பேர் காயம் ஆட்சியர் நேரில் ஆறுதல்</p><p>செங்கல்பட்டு,ஆக.4 -கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சுமார் 30 பேர், சென்னையில் நடை</p><p>பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காகப் பேருந்தில் திங்கள்கிழமை (ஆக.3) சென்னைக்குப் புறப்பட்டனர்.</p><p>செவ்வாயன்று அதி காலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் சென்றபோது, அரசு ஊழி</p><p>யர்கள் பயணம் செய்த பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 13 அரசு</p><p>ஊழியர்கள் காயமடைந்த னர். காயம் அடைந்த அனை வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ</p><p>மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.</p><p>தகவலறிந்த செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் மு. வீரப்பன், மேல்மருவத்தூர் மருத்து</p><p>வமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று</p><p>வருபவர்களிடம் நலம்</p><p>விசாரித்து ஆறுதல் கூறி னார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, உரிய உயர் சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டார்.</p><p>இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணை பொதுச் செயலாளர் சி.முகமது உசேன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் விக்டர் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர் சே. வசந்தகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகி களும் உடனிருந்து காயமடைந்த வர்களுக்கு ஆறுதல் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.