‘தொடுவானம்’ திட்டம்: 59 மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு
5 hours before
<p><strong>‘தொடுவானம்’ திட்டம்: 59 மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு</strong></p><p>ராணிப்பேட்டை மாவட்டத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்திய 59 அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டறியப்பட்டு, தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவத் துணைப் படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார். மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்த்து 100% உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்வதே ‘தொடுவானம்’ திட்டத்தின் முதன்மை இலக்காகும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சரவணன், முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
