வேலூரில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு
5 hours before
<p><strong>வேலூரில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு</strong></p><p>வேலூர், ஆக. 4-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரக் கோரி மாவட்ட செயலாளர் கே. சாமிநாதன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.</p><p>அம்மனுவில், பேரணாம்பட்டு வட்டம் கார்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 20 பேருக்கும், பழங்குடியினத்தவர் 10 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்கு தமிழக அரசு ஏற்கனவே வழங்கியுள்ள பட்டா இடத்தில், சமூக நீதித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.</p><p>மேலும், குடியாத்தம் ஒன்றியம் மூங்கப்பட்டு ஊராட்சி காத்தாடி குப்பத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராஜன் எம்பி நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தைப் புனரமைப்பு செய்து, குடிநீர், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறை வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் சி.எஸ்.மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் ஜி.நரசிம்மன், தாலுகா செயலாளர் ஜி. சரத்குமார், அஞ்சல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி பி.பெருமாள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>
