இப்போதுமட்டும் காந்திஜி உயிரோடிருந்தார் என்றால் நாட்டின் பல பகுதிகளிலும் ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் கும்பல் குண்டர்கள் அப்பாவி முஸ்லீம்களையும், தலித்துகளையும் கொலை செய்து வருவதற்கு எதிராகக் காலவரையற்ற உண்ணாவிரத்தில் உட்கார்ந்திருப்பார். ஏனெனில், அப்பாவிகள் மீது ஏவப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் கடும் வெறுப்பு கொண்டிருந்தார்.