கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து கலவரம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.