world

img

வங்கதேசம்: கன்டெய்னர் கிடங்கில் பயங்கர தீவிபத்து - 16 பேர் பலி  

வங்கதேசத்தில் தனியார் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.  

வங்கதேசத்தின் சிட்டாகோங் நகரத்தில் உள்ள சித்தகுண்டா உபசில்லா பகுதியில் தனியார் கன்டெய்னர் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். மேலும் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இந்த விபத்து குறித்து வங்கதேச இன்லேண்ட் கன்டெய்னர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரூஹூல் அமின் சிக்தர் கூறுகையில், 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயணங்கள் இருந்தது. கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர்.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை துவங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

;